திங்கள், 31 டிசம்பர், 2012

மலேகான் குண்டுவெடிப்பு:ஹிந்துத்துவா தீவிரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டான்!


மும்பை:2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவைத்ததை அண்மையில் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதி மனோகர் சிங் ஒப்புக்கொண்டதாக என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட மனோகரை என்.ஐ.ஏ மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. மலேகான் குண்டுவெடிப்பில் சங்க்பரிவார அமைப்புகளின் பங்கு வெளியான பிறகு நடக்கும் முதல் கைது இதுவாகும். மனோகர் சிங்கிடமிருந்து ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளதாக சிறப்பு அரசு தரப்பு வழக்குரைஞர் ரோஹிணி ஸாலியான் கூறினார். மனோகர் சிங்கை கஸ்டடியில் வைத்து விசாரித்தால் இதர குற்றவாளிகளைக் குறித்த தகவல் கிடைக்கும் என்று என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2007-ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான ராஜேந்தர் சவுதரியிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மனோகர் சிங் கைது செய்யப்பட்டான். சவுதரிக்கு எதிராக நீதிமன்றம் ப்ரொடக்‌ஷன் வாரண்டை பிறப்பித்திருந்தது. மாலேகானில் 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 37 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

சர்தாரி இந்தியா செல்லும் திட்டம் இல்லை:பாக்.


இஸ்லாமாபாத்: கிரிக்கெட் போட்டிகளை காண பாகிஸ்தான் அதிபர் சர்தாரி இந்தியா செல்லும் திட்டம் எதுவுமில்லை என அதிபர் மாளிகை செய்திதொடர்பாளர் கூறினார். இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி டுவென்டி-20 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. தற்போது ஒரு நாள் (50ஓவர்கள்) போட்டி சென்னையில் முடிந்துவிட்டது. இந்நிலையில் ‌‌மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நடக்க உள்ள மற்றொரு போட்டியை காண பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இந்தியா வருகை தர உள்ளதாகவும், இதி்ல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் ஆகியோர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் பரவின. இது குறித்து அதிபர் மாளிகை ‌செய்தி தொடர்பாளர் பரக்கத்துல்லா பாபர் கூறுகையில், இது வெறும் வதந்திதான், இந்தியா வருமாறு அவருக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை.அப்படியிருக்கையில் சர்தாரி இந்தியா வரும் திட்டமில்லை. அழைப்பு விடுத்தால் பரிசீலிக்கலாம் என்றார்.

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி


பாக்தாத்: ஈராக்கில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 12 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு யாரும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை

புதன், 5 டிசம்பர், 2012

பீஜே காலர் ட்யூன்கள் - பி.எஸ்.என்.எல். வோடோஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் அறிமுகம் :


இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட இசைகளையும் , கேட்பதற்கு அருவருப்பான கொச்சையான சினிமா பாடல்களையும் காலர் ட்யூன்களாக மாற்றுமதத்தவர்கள் மட்டும் பயன்படுத்தவில்லை. முஸ்லிம்களும் வேறுவழி இல்லாமல் பயன்படுத்தி வந்தனர். பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த காலர் ட்யூன்கள் பயன்படுத்துவதில்லை.அதற்கு விடை சொல்லும் விதமாக இப்போது தொலைதொடர்பு நிறுவனங்கள் இஸ்லாமியர்கள் பயன்பெறும் விதமாக ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏகத்துவ காலர் ட்யூன்களை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகப்படுத்தியது. பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள ஏகத்துவ காலர் ட்யூன்கள் முஸ்லிம்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். அதைத்தொடர்ந்து தற்போது வோடோஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களும் ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. பீஜே அவர்கள் உரையாற்றிய, “இதுதான் இஸ்லாம்” என்ற தலைப்பிலான உரையிலிருந்து 20 தலைப்புகள் காலர் ட்யூன்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வோடோஃபோன் வாடிக்கையாளர்கள் காலர் ட்யூன்களை ஆக்டிவேட் செய்ய: கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் விரும்பும் காலர் ட்யூன் கோடு நம்பரை உங்கள் மொபைலில் டைப் செய்து டயல் பட்டனை பிரஸ் பண்ணினால் நீங்கள் விரும்பும் தலைப்பிலான ஏகத்துவ காலர் ட்யூன் ஆக்டிவேட் ஆகிவிடும். ஐடியா வாடிக்கையாளர்கள் ஏகத்துவ காலர் ட்யூன்களை ஆக்டிவேட் செய்ய: DT என்று டைப் செய்து இடைவெளி விட்டு கீழ்க்கண்ட பட்டியலில் தாங்கள் விரும்பும் தலைப்பிலான காலர் ட்யூன் கோடு நம்பரை டைப் செய்து 55456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் நீங்கள் தலைப்பிலான ஏகத்துவ காலர் ட்யூன் ஆக்டிவேட் ஆகிவிடும். பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாக தாங்கள் இருப்பீர்களானால், கீழ்க்கண்ட தலைப்புகளில் தங்களுக்கு விருப்பமான தலைப்பிற்கான கோடு எண்ணை 56700 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் நீங்கள் விரும்பும் தலைப்பிலான ஏகத்துவ காலர் ட்யூன் ஆக்டிவேட் ஆகிவிடும். குறிப்பு : பி.எஸ்.என்.எல். மற்றும் ஐடியா ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஏகத்துவ காலர் ட்யூன் கோடு நம்பர்கள் ஒரே கோடு நம்பர்கள்தான். பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் 56700 என்ற எண்ணுக்கும், ஐடியா வாடிக்கையாளர்கள் DT என்று டைப் செய்து இடைவெளி விட்டு குறிப்பிட்ட கோடு நம்பர்களை டைப் செய்து 55456 என்ற எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். ஏர்செல் மற்றும் ஏர்டெல் ஆகியவற்றில் வெகுவிரைவில் ஏகத்துவ காலர் ட்யூன்கள் அறிமுகம்: பி.எஸ்.என்.எல், வோடோஃபோன், ஐடியா ஆகிய செல்பேசி நிறுவனங்கள் ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஏர்செல் மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களும் கூடிய விரைவில் ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

‘‘ஈரான் சொல்வது பொய்’’ வெள்ளை மாளிகை சொல்கிறது


வாஷிங்டன், - ஈரான் அணு உலைகள் அமைத்து, அணுக்குண்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக உலக நாடுகள் சந்தேகிக்கின்றன. இதை ஈரான் மறுத்து வருகிறது.இந்த நிலையில் அமெரிக்காவின் ஸ்கேன் ஈகிள் என்ற ஆளில்லா உளவு விமானம் வளைகுடா நாடுகளில் உளவறிந்துவிட்டு, ஈரானுக்கு உளவு பார்க்க வந்ததாகவும், அதை ஈரான் பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்த தகவல்களை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜெய் கார்னே கூறுகையில், ‘‘ஈரான் கூறுவது உண்மை என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் கிடையாது. ஈரான் சொல்வது பொய்’’ என கூறினார்.இதேபோல் கடற்படை செய்தி தொடர்பாளரும், ஈரானின் கூற்றை மறுத்துள்ளார்.

ஈரானில் 5.5 அளவுள்ள நிலநடுக்கம்: 5 பேர் பலி


ஈரான், ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து, அப்பகுதியில் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. இதை தொடர்ந்து, மக்கள் தெருவிற்கு ஓடி வந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் 5 பேர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல்: 3 பேர் பலி


இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாகாணத்தில் இன்று அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். முபாரக் கிராமத்தில் தீவிரவாதிகளை குறிவைத்து இன்று காலை இரண்டு ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் செலுத்தி உள்ளது. தலிபான் மற்றும் அல்-கொய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியான இங்கு தொடர்ந்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

துபாய் சிறையில் கைதிகளை சந்தித்த ஆந்திர குழுவினர்


துபாய்:துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்திய கைதிகளை, ஆந்திர குழுவினர் சந்தித்து பேசினர். துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களை, குடிபெயர்ந்தோர் உரிமை கழகத்தை சேர்ந்தவர்கள், சமீபத்தில் சந்தித்து பேசினர்.இந்த கழகத்தின் தலைவர் நாராயணசாமி கூறியதாவது:துபாயில் உள்ள, "அல் அவீர்' சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஆந்திராவை சேர்ந்த 13 பேரை, சந்தித்து பேசினோம். வளைகுடா நாடுகளில், 1,200க்கும் அதிகமான இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல வளைகுடாவை சேர்ந்த பலர், இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பரஸ்பரம் ஒப்படைப்பது குறித்து, கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இந்த ஒப்பந்தம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. விரைவில் இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டால், பல ஆண்டுகளாக, சிறையில் தவிக்கும், இந்தியர்கள் விடுவிக்கப்படுவார்கள். இந்திய அரசும், ஆந்திரா உள்ளிட்ட மாநில அரசுகளும், கைதிகளின் சார்பில், சட்ட உதவி அளிக்க வேண்டும்.இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு வலுக்கிறது


லண்டன்/பாரிஸ்:சிறப்பு அந்தஸ்தை கொண்ட பார்வையாளர் பதவி ஐக்கிய நாடுகள் அவையில் ஃபலஸ்தீனுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து காழ்ப்புணர்ச்சியில் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இஸ்ரேலின் நடவடிக்கை அமைதி முயற்சிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. பிரான்சு, பிரிட்டன் ஆகிய நாடுகள் இஸ்ரேல் தூதர்களை அழைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ரஷ்யாவும், ஜெர்மனியும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ஐ.நா வில் சிறப்பு பார்வையாளர் அந்தஸ்திற்கான அங்கீகாரம் ஃபலஸ்தீனுக்கு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இஸ்ரேல், ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அதிகப்படுத்த உத்தரவிட்டது. இந்நடவடிக்கை அமைதி முயற்சிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். குடியிருப்புகளை கட்டும் இஸ்ரேலின் நடவடிக்கையை அங்கீகரிக்க முடியாது. இது மேற்கு கரையிலும், கிழக்கு ஜெருசலத்திலும் ஃபலஸ்தீனர்களுக்கு இடையேயான உறவை துண்டிக்கவே உதவும். இரு நாடுகள் என்ற தீர்வை இது சீர்குலைப்பதாகும் என்று பான் கீ மூன் கூறியதாக அவரது செய்தி தொடர்பாளர் மார்டின் நிசர்கி தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடுமையான எதிர்ப்புகளையும் புறக்கணித்து சிறப்பு பார்வையாளர் அந்தஸ்தை பெற்ற நாடு என்ற அங்கீகாரத்தை ஃபலஸ்தீன் பெற்றது. ஐ.நா பொது அவையில் வாக்கெடுப்பு நடந்த தினத்திலேயே ஃபலஸ்தீனில் 3000 யூதக் குடியிருப்புகளை கட்டுவதற்கு நெதன்யாகு உத்தரவிட்டார். ஃபலஸ்தீன் ஆணையத்திற்காக வசூலித்த வரிகள் உள்ளிட்ட நிதிகளையும் முடக்குவதாக நேற்று முன் தினம் இஸ்ரேல் அறிவித்தது. ஃபலஸ்தீன் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேலுக்கு பிரிட்டனும், பிரான்சும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. பாரிஸில் இஸ்ரேல் தூதரை பிரான்சு அரசும், லண்டனில் இஸ்ரேல் தூதரை பிரிட்டனும் அழைத்து யூதக் குடியிருப்புகளை அதிகரிக்கும் இஸ்ரேலின் அராஜக நடவடிக்கைக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். ஸ்டாக்ஹோமில் உள்ள இஸ்ரேல் தூதரை அழைத்து சுவீடன் அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நடவடிக்கைக்கு ரஷ்யாவும், ஜெர்மனியும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். வழக்கத்திற்கு மாறாக இஸ்ரேலுக்கு எதிராக பிரிட்டன் கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளது. தீர்மானத்தை இஸ்ரேல் வாபஸ் பெறாவிட்டால் கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும் என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிப்பதாகவும் பிரிட்டன் அறிவித்துள்ளது. ஐ.நா பொது அவையில் வாக்கெடுப்பு நடந்தபோது பிரிட்டன் கலந்துகொள்ளவில்லை. இஸ்ரேலில் தங்களின் தூதரை பிரிட்டன் திரும்ப அழைக்கும் என்று இஸ்ரேல் பத்திரிகையான ஹாரட்ஸ் கூறுகிறது. இஸ்ரேலில் தங்களது தூதரையும் திரும்ப அழைக்க பிரான்சும் ஆலோசித்து வருகிறது. அதேவேளையில் இச்செய்திகள் குறித்து இரு நாடுகளின் தூதரகங்களும் பதில் அளிக்கவில்லை. இஸ்ரேலின் முடிவு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் தடையை ஏற்படுத்தும் என்று பிரான்சு அரசு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஐ.நா அங்கீகாரத்திற்கான ஃபலஸ்தீனின் முயற்சிக்கு முதலில் ஆதரவை தெரிவித்த ஐரோப்பிய நாடு பிரான்சு ஆகும்.

பாப்ரி மஸ்ஜித் நினைவு தினத்தில் போஸ்டர் ஒட்டிய தமுமுக நகர தலைவர் கைது


நெல்லை:1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் நாள் அயோத்தியில் இந்தியாவின் வரலாற்றுச் சின்னமும், முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமுமான பாபரி மஸ்ஜித் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் இடித்து தள்ளப்பட்டது. இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்து 20 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இன்றளவும் உரிய நீதி வழங்கப்படவில்லை குற்றவாளிகள் கைதும் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஏர்வாடி பகுதியில் தமுமுக சார்பில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. தங்களது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் ஒட்டப்பட்ட அந்த நோட்டீஸில் வன்முறையை தூண்டும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றிருந்ததாகவும், அனுமதியின்றி ஒட்டப்பட்டதாகவும் போலீஸ் கூறுகிறது. இதை தொடர்ந்து ஏர்வாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த நோட்டீசுகளை அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக தமுமுக நகர தலைவர் பக்ருதீன், செயலாளர் ஷாஜகான் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இன்னொஸன்ஸ் திரைப்பட விவகாரத்தில் மத்திய அரசுக்கும்,கூகிளுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ்


புதுடெல்லி:அமெரிக்காவில் இஸ்லாத்தின் எதிரிகள் தயாரித்த இன்னொஸன்ஸ் ஆஃப் முஸ்லிம் என்ற திரைப்படத்தை இணையதளங்களில் இருந்து நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மத்திய அரசுக்கும், இணையதள சேவை நிறுவனமான கூகிளுக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைமை நீதிபதி டி.முருகேசன், நீதிபதி ராஜீவ் சஹாய் ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச், போலீஸ் கமிஷனர், செய்தி ஒலிபரப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், கம்பெனி விவகார அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், சிறுபான்மை விவகார அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இத்திரைப்படத்தின் 13 நிமிடங்களைக் கொண்ட காட்சிகளை நீக்கக் கோரி ஜம்மியத்துல் உலமாயே ஹிந்தின் பொதுச் செயலாளர் மவ்லானா மஹ்மூத் ஆஸாத் மதனி நீதிமன்றத்தை அணுகினார்.இவ்விவகாரத்தில் நிரந்தர தீர்வை கோரிய நீதிமன்றம் வழக்கை அடுத்த மாதம் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

திங்கள், 3 டிசம்பர், 2012

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு விவகாரம் நியாயமாக நடந்த பாகிஸ்தான்


பாகிஸ்தானில் கராச்சி நகரில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீராம் மந்திர் என்ற இந்து கோவில் இடிக்கப்பட்டது. அதையொட்டி வசித்த இந்துக்களின் வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. கோர்ட்டு தடை உத்தரவையும் மீறி இதில் நில உரிமையாளர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதை கண்டித்து சிறுபான்மை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த விவகாரம் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பான விவரம் அடங்கிய விளக்க அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே தரும்படி அவர் உத்தரவிட்டார். இந்த தகவலை அதிபரின் செய்தி தொடர்பாளர் பர்ஹதுல்லா பாபர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் இப்போது ஆல் இந்திய தௌஹித் ஜமாஅத் ஆக பெயர் மாற்றம்.


கேரளாவில் உள்ள அனைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளையும் ஒன்றிணைத்து கேரள மண்டலப் பொதுக்குழு எர்ணாகுளத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மான் வளாகத்தில் கடந்த 2-12-2012 அன்று நடைபெற்றது.   கேரள மண்டலத்தின் எர்ணாகுளம், திருவனந்தபுரம், பாலக்காடு புதுநகரம், பெரும்பாவூர், சங்கனசேரி, வண்டிப்பெரியார் ஆகிய பகுதிகளில் தனித்தனியே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரர்கள் பல்வேறு பெயர்களில் இயங்கி வந்தனர். இதனை ஒருங்கிணைக்கும் முகமாக எர்ணாகுளத்தில் 02.12.12 அன்று மாநில நிர்வாகிகள் எம்.ஐ.சுலைமான், கோவை ரஹ்மத்துல்லாஹ், மாலிக் ஆகியோர் முன்னிலையில் கேரள மண்டலப் பொதுக்குழு நடைபெற்றது. இதில் கேரளாவில் உள்ள அனைத்து கிளைகளையும் இணைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படும்போது ஏற்படும் மொழிப்பிரச்சனையை தவிர்ப்பதற்காகவும், நிர்வாகத் தொடர்புகளுக்காகவும் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கிக் கொள்ளலாம் என்றும், அனைத்து கிளைகளையும் ஒன்றிணைத்து எர்ணாகுளத்தை மண்டல தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவது என்றும் முடிவெடுக்கப்பட்டு மண்டல நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கேரள மண்டல நிர்வாகிகள் : தலைவர் – J.M.A ஹம்சா , செயலாளர் – மீரான் மைதீன் , பொருளாளர் – A. அஜ்மல் ஹுசைன் (கோபி), து. தலைவர் – ஷாநவாஸ் – வண்டிபெரியார், து.செயலாளர்கள் – சபீருதீன் – திருவனந்தபுரம், து.செயலாளர்கள் – முஹம்மது – பெரும்பாவூர், து.செயலாளர்கள் – ஹாரிஸ் – புதுநகரம்.

ஃபலஸ்தீனுக்கான வரிப்பணம் முடக்கம்! தொடரும் இஸ்ரேலின் பழிவாங்கும் நடவடிக்கை!


ஜெருசலம்:ஃபலஸ்தீனுக்கு ஐக்கிய நாடுகள் அவையில் பார்வையாளர் அங்கீகாரம் கிடைத்ததால் ஆத்திரமடைந்துள்ள ஆக்கிரமிப்பு இஸ்ரேல், அந்நாட்டிற்கான 12 கோடி டாலர் வரிப் பணத்தை முடக்கியுள்ளது. இஸ்ரேல் எலக்ட்ரிக் கார்ப்பரேசனுக்கு ஃபலஸ்தீனர்கள் அடைக்கவேண்டிய கடன் தொகையை இத்தொகை மூலம் அடைக்கப்படும் என்று இஸ்ரேல் நிதியமைச்சர் யுவல் ஸ்டினிட்ஸ் கூறியுள்ளார். ஃபலஸ்தீன் ஆணையத்திற்கு இம்மாதம் வரிப்பணத்தை ஒப்படைக்கும் எண்ணம் இல்லை என்று அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் அவையில் ஃபலஸ்தீன் பெற்ற சரித்திர வெற்றியில் அரண்டு போன இஸ்ரேல், மேற்கு கரையில் யூதர்களுக்காக மேலும் 3 ஆயிரம் வீடுகளை கட்டப்போவதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. அதற்கு அடுத்து வரிப்பணத்தை முடக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஃபலஸ்தீனுக்கான பதவியை உயர்த்திய ஐ.நா அவை வாக்கெடுப்பை ஞாயிற்றுக் கிழமை கூடிய இஸ்ரேலிய அமைச்சரவை நிராகரித்தது. ஃபலஸ்தீன் ஆணையத்துடன் நடக்கும் எதிர்கால பேச்சுவார்த்தைகளின் அடிப்படை ஐ.நா தீர்மானமாக இருக்காது என்றும், அமைதிக்கான தீர்வுக்கு இது உதவாது என்றும் இஸ்ரேல் அமைச்சரவை தெரிவித்துள்ளது. ஃபலஸ்தீனுக்கான நிதியை முடக்கியதில் ஆச்சரியமில்லை. ஃபலஸ்தீனுக்கு ஐ.நாவில் உயர்ந்த பதவியை அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று ஃபலஸ்தீனுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இஸ்ரேல் ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தது. ஃபலஸ்தீனுக்கு கிடைத்த உயர் பதவி கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடியது என்று இஸ்ரேல் நிதியமைச்சர் ஸ்னிட்ஸ் புலம்புகிறார். ஒரு தலைபட்சமான முயற்சியை ஃபலஸ்தீனர்கள் தொடர்ந்தால் அவர் நட்புறவு ஒத்துழைப்பை எதிர்பார்க்கவேண்டாம். மேலும் 12 கோடி அமெரிக்க டாலர் வரிப்பணத்தை தடுத்து வைப்போம் என்று ஸ்னிட்ஸ் மிரட்டல் விடுத்துள்ளார். ஃபலஸ்தீன் சந்தைகளுக்கு இஸ்ரேல் துறைமுகம் மூலம் கொண்டு செல்லும் பொருட்களுக்கு கஸ்டம்ஸ் தீர்வை கையில் செலுத்தும் லட்சக்கணக்கான டாலர் தொகையை எல்லா மாதமும் ஃபலஸ்தீன் ஆணையத்திடம் அளிக்கப்பட்டு வருகிறது. இத்தொகை மூலம் தான் ஃபலஸ்தீன் ஆணையம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கிறது. ஃபலஸ்தீன் ஆணையத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான தூதரக மோதல்களின் போது வரிப்பணத்தை இஸ்ரேல் தடுத்து வைப்பதுண்டு.

ஆப்கான்:நேட்டோ ராணுவ தளம் மீது தாக்குதல் – 15 பேர் மரணம்


காபூல்:ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு நேட்டோ படையினரின் ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட போராளி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் நான்கு பேர் ஆப்கான் ராணுவத்தினரும், இரண்டு பேர் பொதுமக்களும் ஆவர்.
தாக்குதல் நடத்திய ஒன்பதுபேரும் மரணித்துள்ளனர். 14 ஆப்கான் ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான நேட்டோ ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பான கூடுதல் செய்திகளை நேட்டோ வெளியிடவில்லை. ஜலாலாபாத் விமான தளத்திற்கு அருகே உள்ள நேட்டோ தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தங்களின் ஒன்பது போராளிகள் நேட்டோ தளத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தாலிபான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. கிரேனேடுகள், மோர்ட்டார்கள், துப்பாக்கிகள் ஆகியன உபயோகித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜலாலாபாத்தில் இவ்வாண்டு 3-வது தாக்குதலை தொடுத்துள்ளது தாலிபான்

சிரியா அதிபர் அசாத்துக்கு ஒபாமா எச்சரிக்க‌ை


வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஒபாமா, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவதற்கு எதிராக சிரியா அதிபர் பசர் அல்-அசாத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.சிரியா மக்கள் மீது, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி ‌துன்புறுத்துவதாக கவலை தெரிவித்ததாக வெள்ளை மாளிகை செய்தி செயலர் ஜே.கார்னி கூறியுள்ளார்.

எகிப்து அதிபரின் ஆதரவாளர்கள் முற்றுகையால்சுப்ரீம் கோர்ட் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு


கெய்ரோ: அதிபர் முகமது முர்சியின் ஆதரவாளர்கள், சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிட்டதால், அனைத்து விசாரணைகளையும், நீதிபதிகள் கால வரையறையின்றி ஒத்தி வைத்தனர்.எகிப்து நாட்டை, ஹோஸ்னி முபாரக், கிட்டத்தட்ட, 30 ஆண்டுகளாக ஆட்சி செய்தார். இவரது குடும்ப ஆட்சியை எதிர்த்து, மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, முபாரக், ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார். ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவர், முகமது முர்சி, அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.முர்சி, அதிபரானது முதல், நீதித் துறைக்கும், இவரது ஆட்சிக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இடைக்கால ராணுவ ஆட்சியின் போது நடந்த பார்லிமென்ட் தேர்தலில், முறைகேடு நடந்ததாகக் கூறி, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட், பார்லிமென்டை கலைத்தது.ஆனால், அதிபர் முர்சி, "இந்த பார்லிமென்ட் மீண்டும் செயல்படும்' என, உத்தரவிட்டார். இதனால், அதிபர் மீது, நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.இந்நிலையில், தனக்கு எல்லையற்ற அதிகாரம் அளிக்க, வழி செய்யும், அரசியல் சாசனத்தை முர்சி, கடந்த வாரம் வெளியிட்டார். இதற்கு, எகிப்து எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தனி நபரிடம் அதிகாரம் குவிந்திருப்பதற்கு, நீதிபதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்."தன்னை கட்டுப்படுத்த சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை' என்ற, சலுகை அளிக்கும் அரசியல் சாசனத்தை, பார்லிமென்டின் ஒப்புதலுக்கு வைப்பதாக, முர்சி தெரிவித்துள்ளார். "ஏற்கனவே, பார்லிமென்ட் கலைக்கப்பட்டு விட்டதாக உத்தரவு இருப்பதால், முர்சியின் இந்த நடவடிக்கை செல்லாது' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.எகிப்து பார்லிமென்ட் கலைக்கப்பட்டு விட்டது, என்ற உத்தரவு குறித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிபர் முகமது முர்சியின் ஆதரவாளர்கள், சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிட்டனர்.சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கைகளை முடக்கும் நோக்கோடு, அதிபரின் ஆதரவாளர்கள் செயல்படுவதாகக் கூறிய நீதிபதிகள், அனைத்து நடவடிக்கைகளையும் காலவரையறையின்றி ஒத்தி வைத்தனர்.

மாலத்தீவு அதிபர் வாகீத் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்


மாலே: மாலத்தீவு அதிபர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், ரகசிய ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.மாலத்தீவில், ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அதிபர் நஷீத், பிப்., மாதம் நடந்த புரட்சியில், ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். இதையடுத்து, துணை அதிபர் முகமது வாகீத், புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டது மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில், மாலத்தீவு ஜனநாயக் கட்சி தலைவர் நஷீத் கைது செய்யப்பட்டார்.இதற்கிடையே, அதிபர் வாகீத் மீது, மாலத்தீவு ஜனநாயகக் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது, ரகசிய ஓட்டெடுப்பு நடத்த, பார்லிமென்ட் உறுப்பினர்களின் விருப்பம் கேட்கப்பட்டது.மாலத்தீவு பார்லிமென்ட்டில் மொத்தம், 75 உறுப்பினர்கள் உள்ளனர். ரகசிய ஓட்டெடுப்பை, 41 உறுப்பினர்கள் ஆதரித்துள்ளனர். 34 பேர் ரகசிய ஓட்டெடுப்பை ஆதரிக்கவில்லை. பெரும்பான்மையான உறுப்பினர்கள், ரகசிய ஓட்டெடுப்பை ஆதரித்ததால், விரைவில் இதற்கான தேதியை, சபாநாயகர் மஜ்லிஸ் அறிவிக்க உள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் மோடிக்கு கறுப்புக் கொடி!


அஹ்மதாபாத்:குஜராத் சட்டப் பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே மீதமுள்ள சூழலில் சூரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ.க எம்.பியுமான நவ்ஜோத் சிங் சித்துவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கறுப்புக் கொடி காட்டப்பட்டது. ஜுனகட் மாவட்டத்தில் விசவாதர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சித்து, குஜராத் பரிவர்த்தன் கட்சியின் தலைவர் கேசுபாய் பட்டேல் தேச விரோத தலைவர் என்று கூறியிருந்தார். இதனைக் கண்டித்தே கறுப்புக் கொடி காட்டப்பட்டது. சூரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மோடிக்கு குஜராத் பரிவர்த்தன் கட்சியின் தொண்டர்கள் கறுப்புக் கொடியை காட்டினர். சித்துவின் மீது தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. இதுக் குறித்து கேசுபாய் பட்டேல் கூறியது: பா.ஜ.க மற்றும் மோடியின் உத்தரவை அறிக்கையின் மூலம் செயல்படுத்தியுள்ளார் சித்து. கசாபை போல என்னை தேச விரோதி என அழைத்துள்ளனர். குற்றச்சாட்டை நிரூபிக்க மோடிக்கு சவால் விடுக்கிறேன். நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன். மோசமான அறிக்கையின் மூலம் எவ்வாறேனும் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காக கீழ்த்தரமான அரசியலை பா.ஜ.க நடத்துகிறது. இவ்வாறு பட்டேல் கூறினார். கேசுபாய் பட்டேலுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதற்கு சித்து மீது பிபின் ஜக்ஜீவன் ருகானி என்பவர் தொடுத்த அவமதிப்பு வழக்கில் முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேல் திங்கள் கிழமை தீர்ப்பு வழங்குவார்.

சனி, 1 டிசம்பர், 2012

ஆப்கானில் படை வாபஸ்: அமெரிக்க செனட் அங்கீகாரம்!


வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவத்தை விரைவாக வாபஸ் பெற அமெரிக்க செனட் அங்கீகாரம் அளித்துள்ளது. 2014-ஆம் ஆண்டிற்கு பிறகும் அமெரிக்க ராணுவம் ஆப்கானில் தொடரும் என்ற பாதுகாப்பு செயலாளர் லியான் பெனட்டாவின் அறிக்கையை தொடர்ந்து செனட் இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அமெரிக்க ராணுவம், ஆப்கானில் இருந்து வாபஸ் பெற்றால் அல்காயிதா மேலும் வலுப்பெறும் என்றும்,இதனால் அபாயம் அதிகரிக்கும் எனவும் பெனட்டா கூறியிருந்தார். ஆப்கானில் இருந்து 2014-ஆம் ஆண்டு நேட்டோ படை முற்றிலும் வாபஸ் பெறப்படும் என்றும், பாதுகாப்பு பொறுப்பு ஆப்கான் படையினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது. அமெரிக்க படை ஆப்கானில் இருந்து வாபஸ் பெறும் தீர்மானத்திற்கு 62 வாக்குகள் ஆதரவாக கிடைத்தன. எதிர்த்து 33 வாக்குகள் கிடைத்தன. ராணுவத்தின் வாபஸ் குறித்து ஒபாமா ஒரு வாரத்திற்குள் அறிக்கையை வெளியிடுவார் என்று கருதப்படுகிறது.

பாக்.,கில் நிலச்சரி: 3 வீரர்கள் பலி


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகேயுள்ள ஷரதா செக்டார் பிரிவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 ராணுவ வீரர்கள் சிக்கி பலியானார்கள். குறைந்தது 18 பேரை காணவில்லை. மீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், காணாமல் போனவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்திய நடிகைகள் நடித்த ஆபாச விளம்பரங்களுக்கு பாகிஸ்தான் தடை


இஸ்லாமாபாத்;""இந்திய நடிகைகள் நடித்த, "டிவி' விளம்பர படங்களை தடை செய்ய வேண்டும்,'' என, பாகிஸ்தான் எம்.பி.,க்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. பாகிஸ்தானில், ஏராளமான இந்திய, "டிவி' சேனல்களின் நிகழ்ச்சிகள், ஒளிபரப்பாகின்றன. பாலிவுட் படங்களுக்கு, பாகிஸ்தானில் அதிக ரசிகர்கள் உள்ளனர். "டிவி' நிகழ்ச்சிகளுக்கிடையே வரும், விளம்பர படங்களின் மாடல்கள், அரை குறை ஆடைகளுடன் போஸ் கொடுப்பதை, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியே கண்டனம் தெரிவித்திருந்தார். "உடலில் உள்ள முடிகளை அகற்றும் க்ரீம் விளம்பரத்துக்கு, பாலிவுட் நடிகை கத்ரினா கைப், ஆபாச உடை அணிந்திருப்தை, குடும்பத்தினருடன் பார்க்க முடியாது' என, பாக்., சுப்ரீம் கோர்ட் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்."இந்திய, "டிவி' சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும்' என, அங்குள்ள பழமைவாதிகள் நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். இது தொடர்பாக விசாரித்த பார்லிமென்ட் குழுவினர் கூறியதாவது:பாகிஸ்தானுக்கு தனி கலாசாரம் உள்ளது. எனவே, இந்திய, "டிவி' நிகழ்ச்சிகள் பாகிஸ்தானில் ஒளிபரப்பு செய்யும் போது பாகிஸ்தான் கலாசாரத்துக்கு மதிப்பளிப்பதாக அமைய வேண்டும். குறிப்பாக, "டிவி' யில் செய்தி வாசிப்பவர்கள், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பெண்கள் தலையை துணியால் மூடியிருக்க வேண்டும். கழுத்து கீழே துப்பாட்டாவால் போட்டிருக்க வேண்டும். இவ்வாறு பார்லிமென்ட் குழுவினர் கூறியுள்ளனர். இந்த பரிந்துரையை ஏற்பதாக, பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர், கமார் சமான் கைரா கூறியுள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில், "இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், தீர்ப்பு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய அரசிடமும் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளோம்' என, கைரா தெரிவித்துள்ளார்.

ஐ.நா., சபையில் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம்:


ஜெருசலேம்: ஐ.நா., சபையில் பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு கரைப்பகுதியில் அவசர அவசரமாக 3 ஆயிரம் வீடுகளை கட்ட இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது. ஐ.நா., சபையில் சமீபத்தில் நடந்த, பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு அந்தஸ்து வழங்கக்கோரும் மசோதா 193 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. மசோதாவுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவையை நேற்று கூட்டி இது தொடர்பாக விவாதித்தார். அப்போது, பாலஸ்தீனத்திற்கு சொந்தமான, தற்போது இஸ்ரேல் வசம் உள்ள மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் புதிய குடியிருப்புகளை கட்டுவது என முடிவெடுக்கப்பட்டது. அப்பகுதியில் யூதர்களை பெருமளவில் வசிக்க வைப்பதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இஸ்ரேலின் இந்த முயற்சிக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை வருங்காலத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைக்கும், சுமூக முடிவுக்கு எதிரானதாகும் என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இந்த நடவடிக்கை, பாலஸ்தீனம் என்ற நாடு பேப்பர் அளவிலேயே இருக்கும் என்றும், அவை ஒரு போதும் செயல்பாட்டிற்கு வராது என்பதை பாலஸ்தீனத்திற்கு இஸ்ரேல் தெரிவித்துள்ள ஒரு அறிவிப்பாகவே இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வியாழன், 29 நவம்பர், 2012

முதல்வரை சந்தித்து இஸ்லாமிய அமைப்பினர் நன்றி!


இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய காட்சிகளை ‘துப்பாக்கி’ படத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை, ஜமாதுல் உலமா சபையின் தலைவர் மெளலவி அப்துற்றஹ்மான் தலைமையில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதுத் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மதச்சார்பற்ற கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், சிறுபான்மையினரின் நலன் காத்திடும் வகையிலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் தீபாவளித் திருநாளில், நடிகர் விஜய் நடிப்பில் தமிழகத்தில் வெளியான ‘துப்பாக்கி’ என்னும் திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இக்காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் இஸ்லாமிய அமைப்புகள் கோரின. இதனை அறிந்த முதலமைச்சர்,தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு அளித்த உத்திரவினையடுத்து, அரசு உள்துறை செயலாளர், திரைப்படத்தின் நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் தாணு, நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகரன் ஆகியோரை 15.11.2012 அன்று அழைத்து, திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களின் மனம் புண்படும்படி உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை தவிர்க்கும்படியும், இது சம்பந்தமாக இஸ்லாமிய சமூக அமைப்புகளை சார்ந்தவர்களுடன் பேசும்படியும் அறிவுறுத்தினார். முதலமைச்சரின் உடனடி நடவடிக்கையினால் துப்பாக்கி படக்குழுவினர், இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் விவாதித்து, திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கினார்கள். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவை, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்று (28.11.2012) தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, முதலமைச்சர் எடுத்த விரைவு நடவடிக்கையினால், இஸ்லாமிய சமுதாயத்தை பற்றிய சர்ச்சைக்குரிய காட்சிகள் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு, தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.

தர்ஹா சந்தனக் கூடுக்கு 40 கிலோ சந்தனைக் கட்டை இலவசமாம்! முதல்வரின் உத்தரவை கண்டித்து TNTJ கண்டன அறிக்கை!


நாகூர் தர்காவில் சந்தனக்கூடு நடத்தும் நாளில் சமாதியில் சந்தன கட்டைகள் அரைத்து சந்தனம் பூசுவதற்கு நாகூர் தர்காவின் முன்னாள் தலைவர் எஸ்.எஸ். காமில் காதிரி முதல்வரை சந்தித்து சந்தன கட்டைகளை மானியமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை ஏற்று சந்த கூடு நடக்கும் நாளில் மூன்று லட்சம் மதிப்புள்ள 40 கிலோ சந்தன கட்டையை இலவசமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இல்லை. தர்காக்களை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்பதே நபிகளார் காட்டித் தந்த வழிமுறையாகும். இதற்கு மாற்றமாக இஸ்லாத்தின் பெயரால் சந்தனக்கூடு விழாவுக்கு சந்தனகட்டைகளை வழங்கிய தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன அறிக்கை!

புதன், 28 நவம்பர், 2012

இந்திய உளவுத்துறையின் தலைவராக முதல் முஸ்லிம்


புதுடெல்லி:இண்டலிஜன்ஸ் பீரோவின்(ஐ.பி) தலைமை இயக்குநராக செய்யத் ஆஸிஃப் இப்ராஹீம் பதவி யேற்கும்போது திருத்தப்படுவது இந்தியாவின் 125 ஆண்டுகால வரலாறாகும். பிரிட்டீஷ் ஆட்சிகாலத்தில் இருந்தே தொடரும் இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த உளவுத்துறையான ஐ.பியின் முதன் முதலாக ஒரு முஸ்லிம் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். நான்கு சீனியர் அதிகாரிகளையும் கடந்து ஆஸிஃப் இப்ராஹீம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இப்பதவியை ஏற்கவுள்ளார்.
1953-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி கான்பூரில் பிறந்த ஆஸிஃப் இப்ராஹீம், 1977 பேட்சில் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். மத்திய பிரதேச மாநிலத்தில் நியமிக்கப்பட்ட ஆஸிஃப், குவாலியர் எஸ்.பியாக சம்பல் பகுதியில் தனது சேவையை தொடர்ந்தார். ஆஸிஃப், நீதியும், நேர்மையும் கொண்ட அதிகாரி என்று அவருடன் பணியாற்றியவர்கள் கூறுகின்றனர். 1980களில் மத்திய அரசின் டெபுட்டேசனில் டெல்லிக்கு வந்த ஆஸிஃப், எப்பொழுது ஐ.பியில் சேர்ந்தார் என்பது தெரியவில்லை. முஸ்லிம்களையும், சீக்கியர்களையும் ஐ.பி புறக்கணிப்பதாக பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. 1993-ஆம் ஆண்டு வரை ஐ.பியிலும், ரா விலும் ஒரு முஸ்லிம் கூட அதிகாரியாக இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் உறுதிச் செய்திருந்தனர். 1992-ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 1993-ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஆஸிஃப், ஐ.பியில் சேர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜாவீத் கிலானி என்பவர் மட்டுமே அன்று முஸ்லிமாக ஆஸிஃபுடன் பணியாற்றியுள்ளார். கஷ்மீரில் மோதல் தீவிரமடைந்திருந்த காலக்கட்டத்தில் ஆஸிஃப், ஐ.பியின் கஷ்மீர் ஆபரேசன் டெஸ்கில் பணியாற்றியுள்ளார். 2007-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை லண்டனில் இந்திய ஹைக்கமிஷனில் பணியாற்றினார். ஆனால், லண்டனில் அவரது பதவி லண்டன் ஐ.பி ஸ்டேசன் சீஃப் என்பதாகும் என்று த ஹிந்து பத்திரிகை கூறுகிறது. உள்துறை உளவுத்துறையான ஐ.பிக்கு லண்டனில் எதற்கு மையம்? என்பது மர்மமாகவே உள்ளது. ஐ.பி அதிகாரியாக இல்லாவிட்டால் பின்னர் அவர் எப்படி மீண்டும் ஐ.பியில் இணைந்தார்? என்பதும் சந்தேகத்திற்கிடமானது. ஐ.பியில் இந்தியன் முஜாஹிதீனைக் குறித்து அதிகம் தெரிந்த அதிகாரி ஆஸிஃப் இப்ராஹீம் என்று த ஹிந்து கூறுகிறது. ஐ.பியின் கைப்பாவையே இந்தியன் முஜாஹிதீன் என்ற கருத்தும் நிலவுகிறது. 2007-ஆம் ஆண்டிற்கும், 2011-ஆம் ஆண்டிற்கும் இடையேத் தான் இந்தியன் முஜாஹிதீன் குறித்த செய்திகள் அதிகம் வெளியாகின. அக்காலக்கட்டத்தில்தான் ஆஸிஃப் இப்ராஹீம், லண்டனில் பணியாற்றினார் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆஸிஃப் லண்டன் ஹைக்கமிஷனில் பணியாற்றினாரா? அல்லது ஐ.பியின் இந்தியன் முஜாஹிதீன் டெஸ்கில் சேவை புரிந்தாரா? என்பது சந்தேகத்திற்கிடமானதே!

நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரித்து, படம் தயாரித்த ஏழு பேருக்கு மரண தண்டனை அறிவிப்பு


வாஷிங்டன்: நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரித்து, படம் தயாரித்த ஏழு பேருக்கு, எகிப்து கோர்ட், மரண தண்டனை அறிவித்துள்ளது. அமெரிக்காவின், நியூயார்க் நகர இரட்டைக் கோபுர தகர்ப்பு நினைவு தினம், செப்., 11ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அமெரிக்காவில், "முஸ்லிம்களின் அப்பாவிதனம்' என்ற பெயரில், ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த படத்தில், நபிகள் நாயகத்தை, கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றதால், உலகம் முழுவதும் உள்ள, முஸ்லிம்கள் இதற்கு கண்டனம் செய்தனர். எகிப்து, லிபியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில், இது தொடர்பாக, பெரிய வன்முறை ஏற்பட்டது. லிபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில், அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டார். இந்த படத்தை தயாரித்த, எகிப்து நாட்டைச் சேர்ந்த, நகோலா பாஸ்லி உள்ளிட்ட ஏழு கிறிஸ்துவர்கள், தற்போது அமெரிக்காவில் வசிக்கின்றனர். இந்த சர்ச்சைக்குரிய படம் தயாரித்தவர்கள் மீதான வழக்கில், கெய்ரோ கிரிமினல் கோர்ட், நேற்று, தீர்ப்பு கூறியது. மத துவேஷம் மற்றும் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது தொடர்பாக, ஏழு பேருக்கு, மரண தண்டனை அளிப்பதாக, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி துவங்குகிறார் பாக்., அணு விஞ்ஞானி


இஸ்லாமாபாத்: பாக்.,அணு விஞ்ஞானியான ஏ.க்யூ.கான் புதிய அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெ‌ற உள்ள பொது தேர்தலில் போட்டியிட முடி வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.76 வயதாகும் கான் பாகிஸ்தான் அணு குண்டு தயாரிப்பதில் முக்கிய காரணகர்த்தாவாக விளங்கினார். பின்னர் 2004-ம் ஆண்டு அணுகுண்டு ரகசியத்தை லிபியா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு கூறியதாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2009-ல் வெளியே வந்த அவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானை போன்று தாரிக் இ தகாபூஸ் என்ற பெயரி்ல் புதிய கட்சியை துவக்கியுள்ளார். இவருடன் சேர்ந்து மொத்தம் 19 புதிய கட்சிகள் அடுத்தாண்டு நடை‌பெற உள்ள பொது தேர்தலில் போட்டியிட வேண்டி பதிவு செய்ய காத்திருக்கின்றன. மேலும் இம்ரானின் கட்சியை போன்று மிகப்பெரும் கூட்டத்தை கூட்டுவதும், பேரணி நடத்துவதும் கிடையாது. இருப்பினும் அமைதியான முறையில் கல்வி பயிலும் மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பாகிஸ்தானில் இருந்து வெளி வரும் ஆங்கில நாளிதழ்களி்ல் மட்டும் கட்டுரை எழுதி வருகிறார் கான். இந்நிலையி்ல் கானின் கட்சி செய்தி தொடர்பாளர் கூறு்கையில் வரும் மே மாதத்தில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

திங்கள், 12 நவம்பர், 2012

இந்திய கோழி இறக்குமதி:ஓமன் நாட்டில் தடை


துபாய்:கர்நாடக மாநிலத்தில், பறவை காய்ச்சல் காணப்படுவதால்,கோழி, வாத்து போன்றவற்றை இறக்குமதி செய்ய, ஓமன் நாடு தடை விதித்துள்ளது.ஒடிசா, திரிபுரா, மேகாலயா மாநிலங்களில், மார்ச் மாதம் பரவிய பறவை காய்ச்சல் நோயால், இந்தியாவிலிருந்து கோழி, வாத்து மற்றும் இவற்றின் இறைச்சியை இறக்குமதி செய்வதை, ஓமன் நாடு தடை விதித்தது.கடந்த செப்டம்பர் மாதம், இந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில், பறவை காய்ச்சல் பரவியுள்ளதாக, உலக பிராணிகள் நல அமைப்பு உறுதி செய்துள்ளது.இதையடுத்து, இந்தியாவிலிருந்து, கோழி, வாத்து மற்றும் இவற்றின் இறைச்சிகளை இறக்குமதி செய்வதை, தடை செய்வதாக ஓமன் அரசு அறிவித்துள்ளது.இந்த தடை, இந்த வாரம் முதல் அமலுக்கு வருவதாக, ஓமன் நாட்டு விவசாயத் துறை அமைச்சர் ஜபார் தெரிவித்துள்ளார்.

நிதிஷ் குமாருக்கு சர்தாரி தீபாவளி விருந்து


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு, அந்நாட்டு அதிபர் ஆசிப்அலி சர்தாரி சிறப்பு தீபாவளி விருந்தளிக்கிறார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சிந்து மாகாணத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இஸ்லாமாபாத் செல்கிறார். அவருக்காக அதிபர் ஆசிப் அலி சர்தாரி, சிறப்பு தீபாவளி விருந்தளிக்கிறார். >

ஞாயிறு, 11 நவம்பர், 2012

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது!17 பேர் பலி!


அங்காரா:துருக்கியின் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 17 பேர் பலியானார்கள். குர்த் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்திற்காக நியமிக்கப்பட்ட ஹெலிகாப்டரும், ராணுவ வீரர்களும் விபத்தில் சிக்கியுள்ளனர். ஸிர்த் மாகாணத்தில் உள்ள பெர்வாரி மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. கடுமையான மூடுபனி விபத்திற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததால் தாக்குதலாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை துவங்கியுள்ளது.
பலியானவர்களில் 13 பேர் ராணுவ வீரர்கள் ஆவர்.

சார்மினார் அருகே கோயில் கட்ட முயற்சி! ஹைதராபாத்தில் பரபரப்பு :


ஹைதராபாத்:வரலாற்றுச் சிறப்பு மிக்க சார்மினாரின் அருகே கோயில் கட்டுவதை நிறுத்திவைக்க கோரி போராட்டம் நடத்திய மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீனின்(எம்.ஐ.எம்) 5 எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர். அப்பகுதியில் கடந்த சில தினங்களாக மோதல் சூழல் நீடித்து வருகிறது. எம்.ஐ.எம் தலைவர் அக்பருத்தீன் உவைஸியும் கைது செய்யப்பட்டவர்கள் அடங்குவார்.
சார்மினாரின் சுற்றுவட்டாரப் பகுதியில் கோயில் கட்டுமானப் பணிகளை நிறுத்திவைக்கக் கோரி எம்.ஐ.எம் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கட்சி அளித்த புகாரை தொடர்ந்து சார்மினார் அருகே பழையை நிலை நீடிக்கவேண்டும் என்றும், கட்டுமானப் பணிகள் கூடாது என்றும் ஆந்திரமாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பிறகும் அதனை மீறும் செயல்கள் நடைபெறுவதாக எம்.ஐ.எம் குற்றம் சாட்டுகிறது. சார்மினார் பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானில் தொழில் துவங்க இந்தியர்களுக்கு கர்ஸாய் அழைப்பு!


புதுடெல்லி:இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய், தனது முதல் நாளில் இந்தியர்கள் ஆப்கானிஸ்தானிற்கு தொழில் துவங்க வருவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் கூறியது:இந்தியத் தொழிலதிபர்கள் ஆப்கானில் தொழில் வாய்ப்புகளைத் தேடத் தயங்கக் கூடாது. இந்திய முதலீட்டாளர்களை ஆப்கானிஸ்தான் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கும் என்று ஆனால் இந்திய தொழிலதிபர் அதற்கான முதல் முயற்சிகளில் இறங்க வேண்டும் என்றார். இன்னும் 2 ஆண்டுகளில் ஆப்கானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறிய பின்னர் அந்நாட்டில் தனது செல்வாக்கை அதிகப்படுத்த இந்தியா விரும்புகிறது. ஆனால், பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக ஆப்கானில் தொழில் துவங்க இந்திய தனியார் துறை தயங்கி வருகிறது.

அஸ்ஸாமில் மீண்டும் வன்முறை! – 2 பேர் பலி!


கொக்ராஜர்:அஸ்ஸாம் மாநிலம் கொக்ராஜர் மாவட்டத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்தனர்.
கோசைகோன் போலீஸ் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஒரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக பத்லன்மாரா கிராமத்தில் நிகழ்ந்த மோதலில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒரு இளைஞர் உயிரிழந்தார். போடோ பழங்குடி இன தீவிரவாதிகளுக்கும் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. இதில் 90 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் ஓரளவு கட்டுப்பட்டு நிலைமை சீரடைந்து வரும் நிலையில் இப்போது புதிதாக வன்முறை வெடித்துள்ளது.

சனி, 10 நவம்பர், 2012

ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய ஈரான் தடை


டெக்ரான்: ஆடம்பர பொருட்களை, இறக்குமதி செய்ய ஈரான் தடை விதித்துள்ளது.ஈரான், அணு ஆயுதம் தயாரிப்பதாக சந்தேகிக்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் பெறுவதற்கும் மற்ற நாடுகளுக்கு, அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால், ஈரானின் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைத்த, வெளிநாட்டு கரன்சிக்கு தற்போது, ஈரானில் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. எனவே, ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதன் மூலம், வெளிநாட்டு கரன்சிகளை மிச்சப்படுத்த, ஈரான் முடிவு செய்துள்ளது.துணிகள், சாக்லேட் போன்ற தின்பண்டங்கள், அழகு சாதன பொருட்கள், என, 2,000 பொருட்கள், இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடை மூலம், ஈரானுக்கு, ஓராண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை, வெளிநாட்டு கரன்சி மிச்சமாகும்.இதுகுறித்து, ஈரான் வர்த்தகத் துறை அமைச்சர் ஹமீத் சப்தெல் குறிப்பிடுகையில், "ஆடம்பர பொருள் இறக்குமதி தடை பட்டியலில், கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களும் இடம் பெற்றுள்ளன. தற்போதைய நிலையில், இந்த இரண்டு பொருட்களை மக்களுக்கு கிடைக்க செய்ய எங்களால் முடியவில்லை. எனவே, விரைவில் இந்த இரண்டு பொருட்களை, இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்' என்றார்.

சுக்பீர் சிங்குக்கு பாதுகாப்பு தராத பாக்., போலீசார் சஸ்பெண்ட்


லாகூர்: பாகிஸ்தானில், சுற்று பயணம் மேற்கொண்ட, பஞ்சாப் மாநில துணை முதல்வர், சுக்பீர் சிங் பாதலுக்கு, உரிய பாதுகாப்பு அளிக்காத, ஏழு போலீசார், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்துவதற்காக, பஞ்சாப் மாநில துணை முதல்வர், சுக்பீர் சிங் பாதல், ஐந்து நாள் பயணம் மேற்கொண்டார். இவருடன், 45 பேர் கொண்ட, வர்த்தக குழுவினரும், லாகூர் பயணம் மேற்கொண்டனர்.பாகிஸ்தானில் உள்ள, சீக்கியர்கள் சார்பில், பாதலுக்கு விருந்தளிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்புக்கு போலீசாரே இல்லை.இந்த விஷயத்தை அறிந்த, பஞ்சாப் மாகாண காவல் துறை தலைவர் ஹபிபுர் ரஹ்மான், விருந்து நடந்த, போலீஸ் சரகத்தை சேர்ந்த, ஏழு போலீசாரை, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.பாகிஸ்தானில், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. இந்த சமயத்தல், இந்தியாவை சேர்ந்த முதல்வருக்கு, உரிய பாதுகாப்பு அளிக்காத காரணத்தால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, பாக்., போலீசார் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்ட RSS செயலாளர் தாக்கப்பட்டதன் எதிரொலி பஸ் எரிப்பு, கல்வீச்சு


திருப்பூர் மாவட்ட RSS செயலாளரை தாக்கியவர்களைக் கைது செய்யக்கோரி இந்து அமைப்பினர் பேருந்தை தீ வைத்து எரித்தனர். அவர்கள் கல்வீச்சு மறியலில் ஈடுபட்டதை ஒட்டி திருப்பூரில் பதற்றம் உருவாகியுள்ளது. மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் வசித்து வருபவர் ஆனந்த் வயது 37. இவர் திருப்பூர் மாவட்ட RSS செயலாளராக இருக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஆனந்தன் நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மர்மக் கும்பல் ஒன்று திடீரென வழிமறித்து இரும்புகம்பியால் தாக்கியது. இதில் ஆனந்தன் படுகாயமடைந்தார். உடனடியாக மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். பஸ் எரிப்பு, கல்வீச்சு இதனிடையே ஆனந்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் வந்து பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. இருப்பினும் மீண்டும் இரவு 9 மணியளவில் மறியலில் ஈடுபட்ட அவர்கள் சில பேருந்துகளின் மீதும் மறியலில் ஈடுபட்டவர்கள் கல்வீசி தாக்கினர். இதன்பின்னர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்துக்கு தீ வைத்தனர். அதில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. கடையடைப்பு, பதற்றம் ஆஸ்.எஸ்.எஸ் செயலாளர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பதற்றம் உருவாகியுள்ளது. இதனையடுத்து இரு மாவட்டங்களிலும் இன்று கடையடைப்பு நடத்த இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் காடேஸ்வரா சுப்ரமணியன் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இரு மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால் பேருந்து போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை.அசாம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாத வகையில் தடுக்க ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கினால் மகளிர் மசோதாவுக்கு ஆதரவு! – முலாயம்!


லக்னோ:முஸ்லிம்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கினால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்போம் என்று சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். லக்னோவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தெரிவித்தார்.
மேலும் கூறியது: ‘பெண்கள் அதிகமாக ஒடுக்கப்படுகின்றார்கள் என்றாலும், ஆணும், பெண்ணும் தோளோடு தோள் சேர்ந்து செயல்படவேண்டும் என்பதுதான் எனது கட்சியின் கருத்து ஆகும்’ என்றார் முலாயம். மகளிர் இடஒதுக்கீடு மசோதா உயர்ஜாதியினருக்கு மட்டுமே ஆதாயம் தரும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பயன் தராது. ஆகையால்தான் அம்மசோதாவை தான் எதிர்ப்பதாக நேற்று முன் தினம் முலாயம் விளக்கமளித்திருந்தார். பெண்களுக்கு சட்டசபைகளிலும், பாராளுமன்றத்திலும் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற மசோதா 2010-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சமாஜ்வாதிக் கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

14 வயது பாக்., சிறுமி மலாலாவுக்கு ஐ.நா., கவுரவம்:


ஐ.நா.,: தன்னைப் போன்ற சிறுமிகளின் கல்வி உரிமைக்காக போராடியதற்காக தலிபான்களால் சுடப்பட்ட பாக்., சிறுமி மலாலாவை கவுரவிக்கும் வகையில், நவம்பர் 10ம் தேதியை (இன்று) மலாலா நாளாக கொண்டாடுகிறது ஐ.நா., பாகிஸ்தானின் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஸ்வாட் மாகாணத்தின் மிங்கோரா நகரைச் சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய் (14). பாக்., பெண்கள் கல்வி உரிமைக்காக போராடிய இந்த சிறுமியை கடந்த மாதம் தலிபான்கள் சுட்டதில் அவர் படுகாயமடைந்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வழங்கிய ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் லண்டன் கொண்டு செல்லப்பட்டு, தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.
இந்நிலையில், மலாலாவை கவுரவிக்கும் வகையில், நவம்பர் 10ம் தேதி மலாலா நாளாக கொண்டாடப்படும் என ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூனின் உலக கல்விக்கான சிறப்பு தூதரும், இங்கிலாந்து முன்னாள் பிரதமருமான கார்டன் பிரவுன் அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இந்த நாள் 14 வயது மலாலா மற்றும் அவரைப்போன்ற 32 மில்லியன் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகளை நினைவு கூறும் நாளாக கடைபிடிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மலாலா குறித்து ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூன் கூறுகையில், “மலாலா உலகில் உள்ள பெண் கல்வி உரிமைக்கான உலக அடையாளச்சின்னம். கல்வி ஒரு அடிப்படை உரிமை. மனித சமூகத்தின் வளர்ச்சி, சகிப்புத்தன்மை, குடியுரிமை ஆகியவற்றுக்கான பாதையாக கல்வி உள்ளது” என்றும் கூறியுள்ளார்.மேலும், மலாலா மற்றும் உலக நாடுகளிலுள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்ய உலக சமூகம் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதனிடையே மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்க உலக முழுவதிலுமிருந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

வியாழன், 8 நவம்பர், 2012

விஸ்வரூபம் திரைப்படம்: முதலில் எங்களுக்கு காண்பிக்கப்படவேண்டும்-தமுமுக கோரிக்கை


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் அறிக்கை: பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார். அதில் ஆப்கானிஸ்தான் போரை முன்னிலைப்படுத்தி கதை இருப்பதாகவும் அதில் முஸ்-ம்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள். ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ, 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை. இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை. எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது. கமல்ஹாசனின் திரைப்படமான விஸ்வரூபம் பற்றி மாறுப்பட்ட கருத்துகளும், சந்தேகங்களும் வலுத்துள்ளன அவர் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை சந்தித்ததன் பின்னணியும் இதுதான் என கூறப்படுகிறது. இந்த சந்தேகங்களை போக்கை வகையில், இத்திரைப்படத்தை முஸ்லிம் பிரதிநிதிகளிடமும், மனிதஉரிமை ஆர்வலர்களிடமும் முதலில் திரையிட்டு காண்பித்து ஆட்சேபனைக்குரிய காட்சிகள் ஏதேனும் இருந்தால் அதை தவிர்த்துவிட்டு வெளியிட வேண்டும் என கோருகிறோம். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையிலான ஊடக திரிபுகளை அனுமதிக்க முடியாது என த.மு.மு .க. கோரிக்கை விடுத்துள்ளது

கராச்சியில் தற்கொலைப்படை தாக்குதல்: 2 பேர் பலி


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வர்த்தக நகரான கராச்சியில் இன்று நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 2 பேர் பலியாகினர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

கவுதமாலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 48பேர் பலி


சான் மார்கஸ்: மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 48பேர் பலியானார்கள். மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் அந்நாட்டு நேரப்படி காலை 10.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4-ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கத்தால் 22 இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 48பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் 100 பேரை காணவில்லை. நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை அந்நாட்டு அரசு முடக்கி விட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படாத வரை மும்பை தாக்குதல் போன்று தொடரும்: இம்ரான் கான்


குர்கான் : பாகிஸ்தான் அணிக்கு உலககோப்பை பெற்றுதந்த அந்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவனான இம்ரான்கான் இப்போது அரசியல்வாதியாக மாறியுள்ளார். இவர் உலக பொருளாதார மாநாட்டு கூட்டத்தில் பேசினார். அவர் பேசுகையில், இந்தியா பாகிஸ்தான் இடையே ஆண்டுக்கணக்காக நீடித்து வரும் காஷ்மீர் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணப்படாத வரை மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் போன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்யும் என்றார். அதேசமயம் தங்களுடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக இந்தியாவுக்கு எதிராக இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடைபெறாத அளவுக்கு பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று கூறினார். மேலும் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட பிற உறவுகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், அதற்கு கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் உதவும் என்று கூறியுள்ளார்.

செவ்வாய், 6 நவம்பர், 2012

இந்திய மீனவர்கள்வங்கதேசத்தில் கைது


தாகா:வங்கதேச கடல் பகுதியில், மீன் பிடித்த, இந்திய மீனவர்கள் 72 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தில், ஷரன்கோலா, என்ற இடத்தில், அத்துமீறி மீன் பிடித்ததாக, மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானாவை சேர்ந்த மீனவர்கள் 72 பேரை, அந்நாட்டு கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் சென்ற மூன்று படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.இவர்கள், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அதன் உத்தரவின் பேரில் தண்டிக்கப்படுவார்கள், என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா பாக்., கிரிக்கெட்: பால் தாக்கரே கடும் எதிர்ப்பு


மும்பை: மத்திய அமைச்சர் ஷிண்டே தனது கருத்தை வாபஸ் பெறும் வரையில், மும்பையில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சிவசேனா கட்சித்தலைவர் பால் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விரைவில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் மற்றும் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடத்த சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே, பழையவற்றை மறந்து விடுவோம் என கூறியிருந்தார். இதற்கு பால் தாக்கரே தனது கடுமையான விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவில் அவர் தெரிவித்துள்ளதாவது: “ஷிண்டே அவர்களே, உங்களுக்கு வெட்கம் என்பது சிறிதளவேனும் இருந்தால், உங்களது வெட்கம்கெட்ட கருத்துக்களை திரும்பப்பெறுங்கள். பழையவற்றை மறந்து விடுங்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். அதை எவ்வாறு மறக்க முடியும். நான் தற்போது உடல்நலமில்லாமல் உள்ளேன். இந்த சூழலிலும் எனது ரத்தம் கொதிக்கிறது. எனது உடன்பிறப்புகளுக்கு நான் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையூறு செய்யுங்கள்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி ஒரு தேசிய அவமானம் என வர்ணித்துள்ள தாக்கரே, பி.சி.சி.ஐ., யின் இந்த முடிவு, நாட்டை வஞ்சிக்கும் செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அயல் நாடுகளில் உளவு நெட்வெர்க் ஏற்படுத்துவதற்கான அவசியம் இல்லை : ஈரான்


குவைத், மற்றும் சில அரபு நாடுகளை ஈரானிய உளவுத்துறை உளவு பார்க்கிறது என்ற செய்தி, நேற்று குவைத்தின் அல்-ராய் பத்திரிகையில் முதலில் வெளியானது. அதையடுத்து, கத்தாரின் அல்-வட்டான், அதே செய்தியை வெளியிட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கு, சுடச்சுட மறுப்பு தெரிவித்துள்ளது ஈரானிய வெளியுறவு அமைச்சகம். குறிப்பிட்ட செய்தி வெளியான கத்தாரில் இருந்து வெளியாகும் அல்-வட்டான் பத்திரிகைக்கே, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலீஹி, பேட்டியளித்து, தமது மறுப்பை தெரிவித்துள்ளார். அத்துடன், சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில் சிரியா ராணுவத்துக்கு உதவியாக ஈரானிய சினைப்பர் (தொலைவில் இருந்து குறிபார்த்து சுட்டு வீழ்த்தும்) அணி ஒன்று, போராளிப் படையினரை கொன்று குவித்து வருவதாக உள்ள வதந்தியையும் மறுத்தார். “இந்த வதந்தியை உங்களாலேயே நம்ப முடிகிறதா? சிரியா நாட்டு ராணுவத்தில் சுமார் அரை மில்லியன் வீரர்கள் உள்ளார்கள். அவர்கள், சிறிய குழு ஈரானிய சினைப்பர் குழுவை அழைத்து வைத்துக்கொண்டுதான் யுத்தம் புரிகிறார்கள் என்று சொல்வது அபத்தமாக இல்லையா?” என்று கேட்டிருக்கிறார், ஈரானிய வெளியுறவு அமைச்சர்.

"ஹிந்து நாடு" என்று பகிரங்கமாக அறிவித்தால், எதிர்கொள்ள நாங்கள் தயார்! -மஜ்லிஸ்


சார்மினார் வளாகத்தை ஆக்கிரமித்து கோவில் கட்ட, விஷமிகளுக்கு உடந்தையாக - உற்ற துணையாக செயல்பட்ட 33 போலீஸ் உயர் அதிகாரிகளின் பட்டியலை "மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன்" கட்சியின் கன்வீனர், ரஹீம் குரைஷி வெளியிட்டார்.
நேற்று, கட்சியின் தலைமை அலுவலகமான "தாருஸ்ஸலாம்" வளாகத்தில் அவர் அளித்த பேட்டி: பழைய ஹைதராபாதை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது, இங்கு அறிவிக்கப்படாத "ஹிந்து ராஷ்டிரம்" நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்த அவர், இந்திய தேசத்தை "ஹிந்து நாடு" என்று பகிரங்கமாக அறிவித்தால், அதை உரிய வகையில் எதிர்கொள்ள முஸ்லிம்கள் தயார், என தெரிவித்தார். 400 ஆண்டு பழமை சின்னமான "சார்மினார்" ஆக்கிரமிப்புக்கு பக்கபலமாக போலீஸ் இருந்த நிலையிலும், முஸ்லிம் இளைஞர்கள் பாதுகாத்ததை, அவர் சுட்டிக்காட்டினார். மேலும் பக்ரீதின் போது "குர்பானி" பிராணிகள் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், அகில பாரத வித்யாதி பரிஷத், மற்றும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து போலீசார் செயல்பட்டதை நினைவு கூர்ந்த அவர், கடந்த வாரத்தில் "சப்சி மண்டி" பகுதியில் முஸ்லிம் கடைகளை சேதப்படுத்தி கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடிய விஷயத்திலும் போலீசுக்கு "மறைமுக உத்தரவுகள்" பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினார்,குரைஷி. இந்த "சதி" திட்டத்துக்காக திருமண மண்டபம் ஒன்றில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது, உளவுத்துறைக்கு தெரியும் என்று கூறிய அவர், போலீசின் ஒருதலை பட்சமான செயல்களுக்கான "ஆடியோ-வீடியோ" ஆதாரங்களுடன் மாநில முதலமைச்சரை விரைவில் சந்திப்போம்,என்றார். இதற்கிடையில், சார்மினாரை பாதுகாக்கும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ள ஹைதராபாத் மாமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள், "ஆக்கிரமிப்புக்கோவில்" கட்டுமானத்துக்கு நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர், என்பது ஆறுதலான விஷயம்.

சிரியாவில் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் யுத்தம் தீவிரம்


சிரியா:சிரியாவில் அப்பாவி மக்களை கொன்று அழித்து கொண்டிருக்கும் அதிபர் பஷார் அல் அசாத்தின் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து 20 மாதங்களாக நிகழ்ந்து வரும் யுத்தம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக சிரியாவின் வடக்கே அதன் தலைநகரமான டமஸ்கசுக்கும், இன்னொரு முக்கிய நகரமான அலெப்போவுக்கும் இடையே அமைந்துள்ள பிரதான விமான தளமான டாப்டனாஸை கைப்பற்றுவதற்கு கிளர்ச்சிப்படையினர் முயன்று வருகின்றனர். இராணுவத்துக்கு சொந்தமான இந்த விமான தளத்தைக் கைப்பற்றுவதற்கு சனிக்கிழமை மாலை முதல் கடும் சண்டை நிகழ்ந்து வருவதாக பிரிட்டனில் அமைந்துள்ள சிரிய கண்காணிப்பு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிரிய அரசுக்குச் சொந்தமான வானொலி நிலையம் ஒன்று செய்தி வெளியிடுகையில் அரச படையினர் இந்த தாக்குதலை முறியடித்திருப்பதாகவும் கணிசமான அளவு ஆயுததாரிகளைக் கொன்றிருப்பதாகவும் அவர்கள் விமானத் தளத்துக்கு வருவதற்கு உபயோகித்த வாகனங்களையும் தகர்த்திருப்பதாகவும் கூறியுள்ளது. இதுவரை சுமார் 20,000-ற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்களைக் கொன்று குவித்த சிரிய யுத்தம் ஐ.நா ஆல் பொடப்பட்ட சமாதான ஒப்பந்தத்துக்கும் இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை சிரிய, இஸ்ரேல் எல்லைக்கு அண்மையில் இராணுவம் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளான கோலன் மற்றும் ஹைட்ஸ் ஆகியவற்றுக்கு சிரிய அரசு மூன்று டாங்கிகளை அனுப்பி உள்ளது. இச்செய்கையினால் அதிருப்தி அடைந்துள்ள இஸ்ரேல் இது தொடர்பாக ஐ.நாவிடம் புகார் அளித்துள்ளமை அப்பகுதிகளில் தாக்குதல் அச்சத்தை அதிகரித்துள்ளது.

நாளை (நவ. 07) துவங்கும் ஷார்ஜா புத்தகக் கண்காட்சி 2012


இந்தப் புத்தகக் கண்காட்சியில் 62 நாடுகளிலிருந்து 924 நூல் வெளியீட்டு நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 40 அரபு நாடுகளிலிருந்தும், 22 வெளிநாடுகளிலிருந்தும் மொத்தம் 924 பதிப்பகத்தார்கள் இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர். இதில் 24 நாடுகள் முதன் முறையாகப் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் பாகிஸ்தான் மையப்படுத்தப்படுகின்றது. பாகிஸ்தானிலிருந்து மொத்தம் 23 வெளியீட்டு நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் 20 பாகிஸ்தான் பதிப்பகத்தார் முதன் முறையாகக் கலந்துகொள்கின்றனர். வெறும் கண்காட்சியுடன் நிற்காமல் தினமும் இலக்கியக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் போன்றவை சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் தினமும் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களில் எகிப்து கலாசார அமைச்சர் முஹம்மத் ஸபீர் அரப், அல்ஜீரியாவின் பிரபல நாவலாசிரியர் அஹ்லாம் முஸ்தகன்மி, எகிப்தின் பிரபல நகைச்சுவையாளர் ஆதில் இமாம், பிரபல நடிகர் யஹ்யா அல் ஃபக்ரானி உட்பட பல அரபு பிரபலங்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சிகள் செலிபரேஷன்ஸ் ஹால், புக் ஃபோரம், லிட்டரரி ஃபோரம், கல்ச்சுரல் ஹால், தாட் ஹால் ஆகிய இடங்களில் நடைபெறும். பாகிஸ்தானின் பிரபல எழுத்தாளர் வாஸி ஷாஹ் உட்பட பலர் இக்கூட்டங்களில் பங்கெடுக்கின்றனர். இந்தியாவைச் சார்ந்த பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராய், வில்லியம் டால்ரிம்பிள் உட்பட பல எழுத்தாளர்கள் கலந்துகொள்கின்றனர். அத்தோடு இந்திய நடிகர்கள் அனுபம் கெர், தீப்தி நாவல், பங்கஜ் மிஷ்ரா, ஹெச்.எம். நக்வி, பால் ஸகரியா, வித்யா ஷாஹ் உட்பட பலர் இக்கண்காட்சியில் கலந்துகொள்கின்றனர். எழுத்தாளர் அருந்ததி ராயின் புகழ் பெற்ற நூலான ‘The God of Small Things’ என்ற நூலைக் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நவம்பர் 9ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும். இதில் எழுத்தாளர் அருந்ததி ராய் கலந்துகொள்கிறார் என்று பிரபல மலையாளப் பதிப்பகமான டிசி புக்ஸ்-ன் தலைமை நிர்வாகி ரவி கூறினார். இந்த 11 நாள் கண்காட்சி உலகிலேயே ஆறாவது மிகப் பெரிய இலக்கியத் திருவிழா என்றும், இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமே இளைய தலைமுறைக்கு வாசிக்கும் பழக்கத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துவதுதான் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் கண்காட்சியின் அனைத்து நாட்களிலும் தினமும் காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

ஈராக்கில் குண்டு வெடிப்பு: 27 பேர் பலி


பாக்தாத்: பாக்தாத்தின் வடக்கு பகுதியில் ராணுவ மையத்தை குறி வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 27 பேர் பலியானதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் 40 பேர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் 19 பேர் ராணுவ வீரர்கள்.

திங்கள், 5 நவம்பர், 2012

பக்ரைனில் குண்டு வெடிப்பு : தமிழர் பலி


துபாய்: பக்ரைனில், நடந்த குண்டு வெடிப்பில், தமிழர் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயமடைந்துள்ளார். பக்ரைனில் மன்னராட்சி நடக்கிறது. அங்கு மன்னராட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராக, போராட்டம் நடத்த, உள்துறை அமைச்சகம், தடை விதித்துள்ளது. இதை கண்டித்து, குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. தலைநகர் மனாமாவில், ஐந்து இடங்களில், குண்டு வெடித்தது. இதில் முருகைய்யா என்ற தமிழர் கொல்லப்பட்டார். மற்றொரு இந்தியருக்கு குண்டு வெடிப்பில், உள்ளங்கை துண்டிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த ஒருவரும், குண்டு வெடிப்பில் பலியாகியுள்ளார். பக்ரைன் நாட்டுக்கான, இந்திய தூதர் மோகன்குமார், முருகைய்யா பலியானதை உறுதி செய்துள்ளார். பக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

பிரபல இஸ்லாமிய எழுத்தாளர் மரியம் ஜமீலா மரணம்!


லாகூர்:பிரபல இஸ்லாமிய அழைப்பாளரும், சிந்தனையாளரும், எழுத்தாளருமான மரியம் ஜமீலா அவர்கள் கடந்த அக்டோபர் 31-ம் தேதி லாகூரில் மரணம் அடைந்தார். நீண்ட நாட்கள் நோய் வாய்ப்பட்டிருந்த அவருக்கு வயது 78. அமெரிக்காவில் ஒரு நடுத்தர யூதக் குடும்பத்தில் 1934-ம் ஆண்டு மார்கரட் மார்கஸ் பிறந்தார். நியூயார்க்கில் யூதப் பெண்மணியாக வளர்ந்த மார்கரட் மார்கஸ் தனது பத்தாவது வயதிலேயே இஸ்லாமால் ஈர்க்கப்பட்டார். 1961ம் ஆண்டு தனது 27வது வயதில் இஸ்லாமைத் தழுவினார். தன் பெயரை மரியம் ஜமீலாவாக மாற்றினார். பின்னர் 1962ம் ஆண்டு லாகூர் வந்தார். ஜமாஅத்தே இஸ்லாமியின் நிறுவனர் மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி அவர்கள் மரியம் ஜமீலாவை தன் வளர்ப்பு மகளாகத் தத்தெடுத்தார். அதன் பின் மரியம் ஜமீலா அமெரிக்காவுக்குத் திரும்பவே இல்லை. லாகூரிலேயே தங்கி விட்டார். 1960களிலிருந்து 1980களின் நடுப்பகுதி வரை மரியம் ஜமீலா நிறைய நூல்களை எழுதினார். அவை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய நூல்கள் இஸ்லாமிய உலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. மேலை நாடுகளுக்கும், இஸ்லாமிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தோலுரித்துக் காட்டும் அவரது எழுத்துகள் பல மேலை நாட்டவரை இஸ்லாம் குறித்து புரிந்துகொள்ள உதவியது. இஸ்லாம் எதிர் மேற்குலகம் (Islam Versus The West), இஸ்லாமும், நவீனத்துவமும் (Islam and Modernism), கொள்கையிலும், நடைமுறையிலும் இஸ்லாம் (Islam in Theory and Practice), இஸ்லாமும், கிழக்கத்தியவாதமும் (Islam and Orientalism), யார் இந்த மௌதூதி? (Who is Moududi?), நான் ஏன் இஸ்லாம் தழுவினேன்? (Why I embraced Islam?) உட்பட 25க்கும் மேற்பட்ட நூல்களையும், கட்டுரைகளையும் மரியம் ஜமீலா எழுதியுள்ளார். நவீன கால முஜாஹித்களின் வரலாறுகளையும் மரியம் ஜமீலா எழுதியுள்ளார். ரஷ்ய ஸார் மன்னனை எதிர்த்துப் போராடிய இமாம் ஷாமில், இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியை எதிர்த்துப் போராடி தூக்கு மரம் ஏறிய லிபியாவின் பாலைவனச் சிங்கம் உமர் முஃக்தார், வட இந்தியாவில் பிறந்து இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்திய செய்யத் அஹமத் ஷஹீத் ஆகியோரின் வரலாறுகள் அதில் குறிப்பிடத்தக்கது.

துபாயில் தாஜ்மகாலை போல இன்னொரு ''தாஜ் அரேபியா''


துபாய்: காதல் நினைவு சின்னம் தாஜ்மகாலை போல, 4 மடங்கு பெரிதாக
தாஜ்மகாலை உருவாக்க கட்டுமான நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர். உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. காதல் மனைவி மும்தாஜுக்காக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய அந்த தாஜ்மகால் போல், 4 மடங்கு பெரிதாக இன்னொரு தாஜ்மகாலை துபாயில் கட்ட கட்டுமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதற்காக ரூ.5,400 கோடியில் பிரமாண்ட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பத்து லட்சம் சதுர அடியில் பிரமாண்டமாக ''தாஜ் அரேபியா'' கட்டப்பட உள்ளது. தாஜ்மகால் போன்ற கட்டிடம் மட்டுமன்றி 300 அறைகள் கொண்ட ஓட்டல், வர்த்தக நிறுவனங்களும் இந்த வளாகத்தில் இடம்பெற உள்ளன. இதுகுறித்து லிங்க் குளோபல் என்ற கட்டுமான நிறுவனம் கூறுகையில், ''தாஜ்மகாலை போல் 4 மடங்கு பெரிதாக துபாயில் இன்னொரு கட்டிடம் 2014ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். தவிர பால்கன் சிட்டியில் தாஜ்மகால் போன்ற இன்னொரு கட்டிடத்தை 36.5 பில்லியன் செலவில் கட்டவும் திட்டமிட்டுள்ளோம்'' என்று தெரிவித்துள்ளது.

நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வாசகம் இடம் பெற்றதால் ஆவேசம் பாகிஸ்தானில், பள்ளிக்கூடம் சூறை; தீ வைப்பு


லாகூர், பாகிஸ்தானில் பள்ளிக்கூட கேள்வி தாளில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வாசகம் இடம்பெற்றதால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்து போராட்டம் நடத்தினர். இதில் பெண்கள் பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டு, பொருட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. பொதுமக்கள் ஆவேசம் பாகிஸ்தானிலுள்ள லாகூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற மசூதி அருகே பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சமீபத்தில் மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது. அந்த கேள்வித்தாளில் இறை தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வாசகம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பள்ளிக்கூட நிர்வாகியை கண்டித்து ஜமாத்–உத்–இஸ்லாமிக் மாணவர் இயக்கத்தினரும், மாணவிகளின் பெற்றோரும் ஆவேசத்துடன் பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். சூறை–தீ வைப்பு உடனே போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். பிறகு இவர்களில் ஒரு பகுதியினர் திடீரென்று பள்ளிக்குள் நுழைந்து நிர்வாகியை தேடினர். அவர் சிக்கவில்லை. இதனால் அங்குள்ள 3 கட்டிடங்களில் இருந்த மாணவிகளை வெளியேற்றினார்கள். பின்னர் அந்த கட்டிடத்தில் நுழைந்து பொருட்களை அடித்து சூறையாடினர். அங்கிருந்த மேஜை–நாற்காலிகள் மற்றும் பொருட்களை வெளியே போட்டு தீ வைத்தனர். பள்ளிக்கூட நிர்வாகி காரும் தீ வைத்து எரிக்கப்பட்டது. 2 பேர் கைது தகவல் அறிந்ததும் அரசியல் கட்சி தலைவர்களும், போலீஸ் உயர் அதிகாரிகளும் வந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதிமொழி கூறி போராட்டக்காரர்களை சமாதானம் செய்தனர். அதன்பிறகு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக லாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளிக்கூட அதிபர் அசிம் பாரூக், ஆசிரியர் அரீபா ஆகிய 2 பேரை கைது செய்தனர். அத்துடன் பள்ளிக்கூடத்தில் சூறையாடல், தீ வைப்பில் ஈடுபட்ட சிலரையும் போலீசார் தேடுகிறார்கள்.

பாகிஸ்தானில் தற்கொலை தீவிரவாத தாக்குதலில் 5 பேர் பலி


பாகிஸ்தானின் கைபர் பாக்டன்க்வா மாகாணத்தில் பியூநர் பகுதியில் நேற்று நடந்த தற்கொலை தாக்குதலில் 5 பேர் பலியானார்கள். மோட்டார் பைக்கில் வெடிகுண்டுகளை கட்டி கொண்டு வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் அரசு அலுவலகம் மீது மோத செய்து வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இந்த தாக்குதலில், 2 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சாலையோரம் சென்ற இரு நபர்கள் உள்பட 5 பேர் பலியானார்கள். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பிரிட்டனில் நுழைய முயன்றவர்கள் கைது


லண்டன்:பல்கேரியா நாட்டிலிருந்து, பிரிட்டனுக்கு, சவப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு, ஒரு வாகனம் வந்தது. வழக்கம் போல், எல்லையில் உள்ள சோதனை சாவடியில், பிரிட்டன் பாதுகாப்பு படையினர் இந்த வாகனத்தை பரிசோதித்தனர். அப்போது, சவப்பெட்டிகளுக்கிடையே, மூன்று பேர் ஒளிந்திருந்தனர். ஆப்பிரிக்காவில் உள்ள எரித்திரியா நாட்டை சேர்ந்த இந்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். இவர்கள் பிரான்ஸ் நாட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் சிறப்பு மார்க்க சொற்பொழிவு


துபாய்: துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது.ஹிஜ்ரத் குறித்த சிறப்புச் சொற்பொழிவினை மௌலவி அப்துல் ஹமீது ஆலிம் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து காயல் இஸ்மாயில் பிலாலி இறைகீதங்களைப் பாடினார். முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். கபூஃர் காக்கா, காயல் ஈஸா, நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்ய ப்பட்டிருந்தது.

சனி, 3 நவம்பர், 2012

இந்திய டாக்டர்குத்தி கொலை


துபாய்:கேரளா, திருவனந்தபுரத்தை சேர்ந்தவர், டாக்டர் ராஜன் டேனியல். ஐக்கிய அரபு எமிரேட்டின் அபுதாபியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்தார். சமீபத்தில், இவர் பணியாற்றிய மருத்துவமனைக்கு ஒருவர் வந்தார். ராஜன் டேனியல் இருந்த அறைக்குள் வேகமாக நுழைய முயற்சித்தார்.நர்ஸ் மற்றும் ஊழியர்கள், அவரை தடுக்க முயற்சித்தனர். அவர்களை தள்ளி விட்டு, ராஜன் டேனியலை நோக்கி கோபத்துடன் வந்த, அந்த நபர், தன்னிடம் இருந்த கத்தியால் சரமாரியாக, அவரை குத்தியதில், டேனியல் இறந்தார்.அந்த நபரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், தவறான சிகிச்சை அளித்து, அவரது உறவினர் இறப்புக்கு காரணமாக இருந்ததாகக் கருதி, ராஜன் டேனியலை கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

அநியாமாக உடைத்து நொறுக்கப்பட்ட முஸ்லிம் கடைகள்: காவி பயங்கரவாதிகள் அட்டூழியம்


ஹைதராபாத்:ஹைதராபாத்தை அடுத்த தப்பசபூத்தரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சப்ஸி மண்டி பகுதியில், நேற்று மாலை முஸ்லிம்களின் கடைகள் “தீ” வைத்து கொளுத்தப்பட்டன. கடந்த 10 தினங்களாகவே குர்பானிக்கு கொண்டு வரப்படும் மாடுகளை அபகரித்தும், சிறு சிறு சண்டை சச்சரவுகளிலும் ஈடுபட்டு வந்தனர் காவி பயங்கரவாதிகள், பக்ரீத் பெருநாள் முடிந்த பிறகும், கடந்த 28-ம் தேதி அன்று சப்ஸிமண்டி பகுதி யில் உள்ள “தர்கா”வை சேதப்படுத்திய கும்பல் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்,
இதற்கிடையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி நேற்று ஒரு கும்பல், முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்தது. கலவரக்காரர்கள் “கன்னடம்” மற்றும் “மராட்டிய” மொழிகளில் குரல் கொடுத்த வண்ணம் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதாக உள்ளூர் மக்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர், நிலைமையின் கடுமையை உணர்ந்த, மேற்கு மண்டல டி.ஸி.பி., ஸ்டீபன் ரவீந்தர், ஏ.ஸி.பி.டி., ஸ்ரீனிவாஸ், ஆகியோர் தலைமையில், ஏ.ஸி.பி.டி., நாகராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கிரண்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்தில் முகாமிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர், காயமடைந்தவர்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை. என்றாலும், கலவரம் பரவாமல் தடுக்க நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கன்னடம் மற்றும் மராட்டிய மொழி பேசக்கூடிய கலவரக்காரர்கள் எங்கிருந்து வந்தனர்? அவர்களை யார் அழைத்து வந்தனர்? போன்ற கேள்விகளுக்கு, பதில் தெரியாமல் முஸ்லிம்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

வெள்ளி, 2 நவம்பர், 2012

டாங்கர் லாரி வெடித்து சவுதியில் 22 பேர் பலி


ரியாத்:சவுதி அரேபியாவில், எரிவாயு ஏற்றி சென்ற லாரி, கட்டடத்தின் மீது மோதி, வெடித்ததில், 22 பேர் பலியாயினர்; 111 பேர் படுகாயமடைந்தனர்.சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள, குரேஸ் சாலையில், எரிவாயுவை ஏற்றிச்சென்ற லாரி, சாலை திருப்பத்தில் உள்ள கட்டடத்தின் மீது வேகமாக மோதியது. இதனால், எரிவாயு டாங்கர் வெடித்ததில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கிருந்த 22 பேர் உடல் கருகி பலியாயினர்; 111 பேர் படுகாயமடைந்துள்ளனர்.டேங்கர் லாரி மோதி வெடித்தில், அங்கிருந்த கட்டடங்களும், ஏராளமான கார்களும் சேதமடைந்தன. பலியானவர்களின் உடல்கள் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத வகையில் கருகியுள்ளன.

நூறு எம்.பி.,க்கள் ஹஜ் பயணம்ஆப்கன் பார்லிமென்ட் முடங்கியது


காபூல்:ஆப்கானிஸ்தானில், நூற்றுக்கும் அதிகமான எம்.பி.,க்கள், "ஹஜ்' யாத்திரை மேற்கொண்டதால், அந்நாட்டு பார்லிமென்ட், விவாதம் நடத்த ஆளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.ஆப்கானிஸ்தானில், 2001ல், அமெரிக்கா தலைமையிலான, "நேட்டோ' படைகளின் அத்துமீறிய தாக்குதலினால், "தலிபான்' களின் ஆட்சி அகற்றப்பட்டது. அதன் பின், அமெரிக்காவினால் ஜனநாயக ( ? ) முறையில், தேர்தல் நடத்தப்பட்டு, ஹமீத் கர்சாய், இரண்டு முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆப்கன் பார்லிமென்ட்டின், கீழ் சபையில், 249 பேரும், மேல் சபையில், 102 பேரும் உள்ளனர்."வரும், 2014ம் ஆண்டு, ஏப்ரல் 5ம்தேதி, தேர்தல் நடைபெறும்' என, ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேர்தலுக்கு முன்,வெளிநாட்டு படைகளை வாபஸ் பெற செய்வது குறித்து, பார்லிமென்ட்டில் விவாதம் நடத்தப்பட இருந்தது. ஆனால், போதுமான எம்.பி.க்கள் இல்லாததால், இந்த விவாதம் நடக்கவில்லை.காபூல் நகர எம்.பி.,ஷிங்காய் கரோகில் கூறியதாவது: மெக்காவுக்கு, வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டும்; அதை நான் குறை கூறவில்லை. ஆனால், ஆப்கன் எம்.பி.,க்கள் 100 பேர், ஹஜ் யாத்திரை சென்றுள்ளனர். இவர்களில் பலர், ஐந்தாவது முறையாக ஹஜ் யாத்திரை சென்றுள்ளனர். மக்கள் வரி பணத்தில் இவர்கள், சவுதிக்கு சென்றுள்ளனர்.ஹஜ் யாத்திரை முடிந்து, இவர்கள் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். இதனால், பார்லிமென்ட்டில் முக்கிய விவாதங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.என்று மிகவும் கவலைப் படுகிறார் காபூல் நகர எம்.பி.,ஷிங்காய் .

பீகிங் பல்கலை.,யில் பாடம் நடத்த வருமாறு கலாமுக்கு சீனா அழைப்பு


பீஜிங்: புகழ்பெற்ற பீகிங் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த வருமாறு, இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீனாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக “இந்திய ஏவுகணை தந்தை” என அழைக்கப்படும் அப்துல் கலாம் பீஜிங் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்றிரவு அவரை சந்தித்த பீகிங் பல்கலைக்கழக சேர்மன் ஜூ சான் லு, தங்களது பல்கலைக்கழத்திற்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்துமாறு அழைப்பு விடுத்தார். மேலும், ஆண்டுக்கு ஒரு முறை வந்து தங்களுக்கு பாடம் எடுக்கும்படியும், கலாம் விருப்பப்படும் எந்த பாடத்தை வேண்டுமானாலும் (உதாரணமாக அறிவியல் தொழில்நுட்பம் அல்லது மனிதப்பண்புகள்) அவர் எடுக்கலாம் என்றும், அதற்காக எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சீனாவில் தங்கலாம் என்றும் சான் லு தெரிவித்தார். மேலும், கலாம் பயன்படுத்துவதற்காக பல்கலை., வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய பரிசோதனைக் கூடம் அமைத்துத்தரப்படும் என்றும் அவர் கூறினார். சீனாவின் அழைப்பு குறித்து கருத்து தெரிவித்த கலாம், “நான் ஒரு பேராசிரியர். தற்போது அமெரிக்காவில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு பேராசிரியராக எனது அறிவு தேவைப்படும் இடங்களுக்குச் சென்று அவர்களுக்கு போதிக்கிறேன். அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினரை நான் மிகவும் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். எனினும் கலாமின் பயணத்திட்டத்தின் படி, அவருக்கு நேரம் கிடைக்கும்பட்சத்தில் அவர் பீகிங் பல்கலை.,யில் பாடம் எடுப்பார் என அவரது உதவியாளர் தெரிவித்தார். சீனாவில் உள்ள விமான தொழில்நுட்ப மையங்களுக்கு கலாமை அழைத்துச் செல்ல சீன அரசு ஒரு சிறப்பு பயணதிட்டத்தை வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இராமநாதபுரத்தில் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் – துரித நடவடிக்கை எடுக்க SDPI மாநில தலைவர் கோரிக்கை


சென்னை:இராமநாதபுரத்தில் நடைபெற்ற சாதிக் கலவரத்தை மதக் கலவரமாக இந்து-முஸ்லிம் பிரச்சனையாக மாற்றும் சதித்திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று சோசியல் டெமார்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் அரசு மற்றும் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சித்தலைவர், உள்துறைச் செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள ஃபேக்ஸ்ஸில்; “நேற்று(30.10.2012) நடைபெற்ற பசும்பொன் தேவர் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு நடந்த மோதல் சம்பவங்களும் கலவரங்களும் வருந்தத்தக்கது. கண்டனத்திற்குரியது. இராமநாதபுரம் மாவட்டத்திலும் இதர மாவட்டங்களிலும் கலவரம் பரவாமல் தடுக்க உரிய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். அதே சமயம் நடைபெற்ற சாதிக் கலவரத்தை மதக் கலவரமாக இந்து-முஸ்லிம் பிரச்சனையாக மாற்றும் சதித்திட்டம் இராமநாதபுரத்தில் நடைபெற்றுள்ளது . இராமநாதபுரம் பஜாரில் உள்ள முஸ்லிம்களின் கடைகளை ஒரு கும்பல் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது .இது வன்மையாக கண்டிக்கத்தக்கது .இதன் பின்னணியில் உள்ள அமைப்புகள் எவை, தூண்டியவர்கள் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு மேற்கொண்டு எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெறாமல் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களுக்கும் அவர்களின் வியாபார நிறுவனங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறேன்.” என்று அந்த ஃபேக்ஸில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

புதன், 31 அக்டோபர், 2012

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்


மணிலா :பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏற்பட்ட நிலநடுக்கத்தால், தலைநகர் மணிலாவில், கட்டடங்கள் குலுங்கின. பிலிப்பைன்சில், தலைநகர் மணிலாவிலிருந்து, 50 கி.மீ.,தொலைவில் உள்ள, புலாகன் மாகாணத்தில், நேற்று, 3.8 ரிக்டர் அளவுக்கு, நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மணிலா உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. இதன் காரணமாக, மக்கள் பீதியடைந்தனர். எனினும், இந்த நிலஅதிர்வுக்கு பிறகு, நிலநடுக்கம் ஏதும் ஏற்படவில்லை. பெரிய அளவு சேதங்களும் காணப்படவில்லை.

லாகூர் ரவுண்டானாவுக்கு பகத் சிங் பெயர் வைப்பது நிறுத்தி வைப்பு


லாகூர் : பாகிஸ்தானின், லாகூரில் உள்ள, ரவுண்டானாவுக்கு, சுதந்திர போராட்ட வீரர், பகத் சிங் பெயர் வைப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, பாகிஸ்தானில், வழக்கத்தில் இருந்த, இந்து பெயர்கள், மாற்றம் செய்யப்பட்டு விட்டன. இதற்கிடையே, லாகூரில், ஷத்மான் சவுக்கில் உள்ள ரவுண்டானாவுக்கு பகத் சிங் பெயர் சூட்டப்படுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாகிஸ்தானை சேர்ந்த, சுதந்திர போராட்ட வீரர் சவுத்ரி ரெஹ்மான் அலி பெயரை சூட்ட வேண்டும், என, சிலர் கோரியிருந்தனர். இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங், பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதற்காக, லாகூர் சிறையில், அடைக்கப்பட்டிருந்தார். 1931ம் ஆண்டு, மார்ச் மாதம், இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட்டு, உயிர் நீத்த பகத் சிங் பெயரை சூட்ட வேண்டும், என, லாகூர் நகர நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. பகத் சிங் பெயரை சூட்டுவதற்கு, எதிர்ப்பு தெரிவித்த மனுக்கள், நிராகரிக்கப்பட்டன. ஆனால், மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்ட, பயங்கரவாத அமைப்பான "ஜமாத்-உத் தாவா' உள்ளிட்டவை, பகத் சிங் பெயர் வைப்பதற்கு, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன. "சீக்கியரின் பெயரை, சூட்டினால், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்' என, மிரட்டல் வந்ததால், பகத் சிங் பெயர் எழுதப்பட்ட பலகைகளை வைப்பதை, நகராட்சி ஊழியர்கள் நிறுத்தி வைத்திருந்தனர். இதற்கிடையே, பகத் சிங் பெயர் சூட்டுவதற்கான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக, நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

மருத்துவ செலவுக்காக ஒரே மகனை விற்ற பாகிஸ்தான் பெண் கைது


லாகூர் :பாகிஸ்தானை சேர்ந்த பெண், மருத்துவ செலவுக்காக, தனது ஒரே மகனை விற்று விட்டார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா மாவட்டத்தை சேர்ந்தவர் கலீதா பீவி. இவர் இதயம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கான மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத காரணத்தால், தனது ஒரே மகனான, ஏழுமாதமான பைசனை விற்றுவிட்டார். ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த, முகமது சவுகத் என்பவர் இந்த குழந்தையை 1.2 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானதை தொடர்ந்து, கலீதாவும், சவுகத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிபர் தேர்தல் செலவு 2.6 பில்லியன் டாலர்


வாஷிங்டன் : வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க அதிபர் தேர்தல் பணிக்காக மட்டும் 2.6 பில்லியன் டாலர் பணம் செலவிடப்பட்டுள்ளது. 2012ல் தேர்தலுக்காக அதிகபட்சமாக 6 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்தலுக்காக செலவிடப்பட்ட 700 மில்லியன் டாலர்களே அதிகபட்ச தொகையாக இருந்து வந்தது. இந்த அதிகபட்ச தொகை வரலாற்று சாதனை மட்டுமல்ல, தேர்தலுக்கு தேர்தல் அதற்காக செலவிடப்படும் தொகையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் தேர்தலுக்காக செலவிடப்பட்ட தொகை செப்டம்பர் இறுதி வாரத்தில் 19 மில்லியன் டாலர்களாகவும், அக்டோபர் முதல் வாரத்தில் 33 மில்லியன் டாலர்களாகவும், அக்டோபர் 21ல் இத்தொகை 70 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்த தேர்தலுக்காக நிறுவனங்கள் மற்றும் தனிமனித அமைப்புக்கள், செனட் சபை உறுப்பினர்கள் ஆகியோர் அளித்து வரும் தொகையும் அதிகரித்து வருகிறது.

திருமண வீட்டில் தீ : சவுதியில் 25 பேர் பலி


ஜெட்டா : சவுதி அரேபியாவில், திருமண வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 25 பேர் பலியாயினர். 30 பேர் படுகாயமடைந்தனர். சவுதி அரேபியாவின், கிழக்கு பகுதியில் உள்ளது அய்ன் பதர் கிராமம். இங்குள்ள ஒரு வீட்டில், திருமணத்துக்காக அலங்கார பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. உயர் அழுத்த மின்சார ஒயர் அறுந்து, பந்தல் மீது விழுந்ததில், தீ விபத்து ஏற்பட்டது. இதனால், திருமணத்துக்கு வந்த, 25 பேர் பலியாயினர். 30 பேர் படுகாயமடைந்தனர். மின்சாரம் தாக்கி பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள். இந்த சம்பவம் குறித்து, கிழக்கு மாகாண அரசு, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

நீலம் புயல் எச்சரிக்கை


வங்க கடலில் உருவாகியுள்ள நீலம் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் புதன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேதாரண்யம் தொடங்கி திருவள்ளூர் வரை கடலோர மாவட்டங்களில் திங்கள் இரவிலிருந்து கன மழை பெயந்து வருகிறது. கிணறு, ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள வயல்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா: மர்ம நபர்கள் சுட்டு பள்ளிவாசல் இமாம் உள்பட 3 பேர் பலி!


மாஸ்கோ
:ரஷ்யாவின் காகஸஸ் பகுதியில் உள்ள தாஜஸ்தானில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் பள்ளிவாசல் இமாமும், இரண்டு உதவியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அதிகாலை தொழுகைக்கு செல்லும் வழியில் இமாம் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். காஸ்பியன் கடலோர நகரமான டெர்பெண்டில் அவரது வீட்டிற்கு அருகில் வைத்து இமாமும், அவரது உதவியாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கலீமுல்லாஹ் இப்ராஹீமோவ் என்ற 49 வயதான இமாம் அப்பகுதியில் சமாதான முயற்சிகளுக்கு தலைமை வகித்தவர் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு இப்பகுதியில் 3 இமாம்கள் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்ய அதிகாரிகளின் கொடூர சித்திரவதைகளுக்கு பலியாகும் செச்னியாவுக்கு அருகிலுள்ள தாஜஸ்தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியாகும்.

திங்கள், 29 அக்டோபர், 2012

சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை அமுலாக்க முயற்சிகள் எடுக்கப்படும்: அமைச்சர் ரஹ்மான்கான்


புது தில்லி:மத்திய அமைச்சரவையில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கேபினட் அந்தஸ்துள்ள புதிய அமைச்சர்களும், இணை அமைச்சர்களும் அறிவிக்கப்பட்டுளளனர்.
சச்சார் கமிட்டி அறிக்கையை அமுல்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக புதிதாகப் பதவி ஏற்றுள்ள கே.ரஹ்மான் கான் கூறினார்.

அமெரிக்காவை எதிர்த்தால் அவமானபடுத்துவதா? தனது கருத்தில் மாற்றம் இல்லை: இம்ரான் கான்


கனடா:பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்நாட்டு அரசியல் கட்சி தலைவருமான இம்ரான் கான், நியூயோர்க் செல்லும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது முதல் தெக்ரிக்-இ-இன்சாப் எனும் கட்சியை தொடங்கி நடத்தி வரும் இம்ரான் கான், சமீபகா லமாக பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா ஏவுகணைகள் நடத்தும் தாக்குதல்களை கடுமையாக கண்டித்துவருகிறார். இந்நிலையில் தனது கட்சிக்கு நிதி சேர்க்கும் முகமாக நியூயார்க்கில் சொற்பொழிவு நிகழ்வொன்றில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு செல்ல தயாரானர் இம்ரான் கான். கனடாவின் டொரொண்டோவிலிருந்து நியூயார்க்கிற்கு செல்லும் வகையில் விமான நிலையத்திற்கு வந்து விமானத்தில் ஏறிய அவரை, நியூயார்க் புலனாய்வு அதிகாரிகள் வழிமறித்து கீழிறக்கினர். பின்பு, பாகிஸ்தானில் தலிபான்கள் இலக்குகள் மீது அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்துவதை எதிர்ப்பதற்கு என்ன காரணம் என அவர்கள் கேள்வி கேட்டு விசாரித்துள்ளனர். இது குறித்து டுவிட்டரில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ள இம்ரான் கான், தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தானில் அமெரிக்காவின் தாக்குதல்களை நிறுத்த வேண்டும். தாமதமானாலும் நியூயார்க்கில் உள்ள எனது கட்சியினரை தொடர்ந்து சந்திக்கவுள்ளேன் என கூறியுள்ளார். இதே வேளை இம்ரான் கான் நியூயார்க்கில் நடத்தவிருந்த சொற்பொழிவு இரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சனி, 27 அக்டோபர், 2012

கசாபுக்கான ரூ .28 கோடி செலவுக்கு பொறுப்பு ஏற்பது யார்?


மும்பை: மும்பை தாக்குதலின்போது உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கசாப், கடந்த 2008 முதல் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவன் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கிறான். சிறைக்குள்ளேயே கசாப் உயிருக்கு குறி வைக்கப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து, துணை ராணுவப்படையை பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கும்படி மத்திய அரசை மகாராஷ்டிரா அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து, இந்தோ , திபேத் எல்லை பாதுகாப்பு படை கமாண்டோக்கள் 250 பேர் சிறைக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மேலும், கசாப் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து, அதே சிறையில் இயங்கி வரும் சிறப்பு நீதிமன்றம் வரை 20 அடி நீளத்துக்கு குண்டு துளைக்காத சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. சிறைக்கு பாதுகாப்பு அளித்து வரும் கமாண்டோ படையினரு க்கு மாதம் ரூ .77 லட்சம் செலவாகிறது. இதுவரை மொத்தம் ரூ .28 கோடி செலவாகி இருக்கிறது. இந்த தொகையை யார் செலுத்துவது என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2008, நவம்பர் 26ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் நாட்டையே குறிவைத்து நடத்தப்பட்டது என்பதால் இந்த தொகையை மத்திய அரசுதான் ஏற்க வேண்டும் என்பது மாநில அரசின் வாதம். மத்திய உள்துறை அமைச்சகம் இதை ஏற்கவில்லை. கசாபின் பாதுகாப்புக்கு செலவிட வேண்டியது மகாராஷ்டிரா அரசின் கடமை என்கிறது மத்திய அரசு. எனவே, மகாராஷ்டிராவுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து இதை கழித்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தற்கொலை படை தாக்குதல் : ஆப்கன் மசூதியில் 40 பேர் பலி


காபூல்: ஆப்கானிஸ்தான் மசூதியில், தற்கொலை படையினர், தாக்குதல் நடத்தியதில், 40 பேர் பலியாயினர்; 70 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில், அமெரிக்க தாக்குதலுக்கு பிறகு, ஆட்சியை இழந்த தலிபான்கள், பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயக முறையில் நடந்த தேர்தல் மூலம், அதிபரான ஹமீத் கர்சாய், தலிபான்களை அமைதி வழிக்கு திரும்பும் படி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, பர்யாப் மாகாணம், மேமானா என்ற இடத்தில் உள்ள மசூதியில், நேற்று, வெள்ளி கிழமை சிறப்பு தொழுகை நடந்தது. இந்த மாகாணத்தின் காவல் துறை தலைவரும், சிறப்பு தொழுகையில் கலந்து கொள்ள வந்திருந்தார். இதையொட்டி மசூதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸ் உடையில் வந்த, தற்கொலை படை ஆசாமி, தன் உடலில் கட்டியிருந்த, வெடிகுண்டை வெடிக்க செய்ததில், 15 போலீசார் உள்பட, 40 பேர் உடல் சிதறி பலியாயினர். 70க்கும் அதிகமானோர், பலத்த காயம் அடைந்தனர்.

சிரியாவில் சண்டை நிறுத்தம் அமல்


டமாஸ்கஸ்: பக்ரீதையொட்டி, சிரியாவில் நான்கு நாட்களுக்கு, சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த, 18 மாதங்களாக போராடி வருகின்றனர். ஆசாத் பதவி விலக மறுப்பதால், கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா, ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதனால், சிரியாவில், கடும் சண்டை நடக்கிறது. இரு தரப்பிலும் சமரசம் ஏற்படுத்துவதற்காக, அரபு நாடுகள் மற்றும், ஐ.நா.,வின் சார்பில், லக்தர் பிராமி நியமிக்கப்பட்டுள்ளார். பக்ரீதையொட்டி சண்டையை நிறுத்தும்படி, லக்தர் பிராமி கேட்டு கொண்டதன் பேரில், சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத், சண்டையை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளார்.
"டிவி'யில் இது குறித்து, அதிபர் ஆசாத் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக, என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. அழிவு மற்றும் மரணம் தான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். எல்லாரும் கடவுள் பக்கம் வர வேண்டும். பிரிவினை வாதிகளை முறியடிக்க வேண்டும். புதிய மத்திய கிழக்கை நாம் உருவாக்குவோம். சிரியாவின் எதிரிகள் இதை உருவாக்க நிர்பந்திப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். பக்ரீதையொட்டி, சிரியாவில் நான்கு நாள் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த விடுமுறையை மக்கள் கொண்டாடுவதற்கு வசதியாக, சண்டை நிறுத்தத்தை அமல்படுத்துவதாக அரசு தெரிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலையில் புகுந்த 10 பேருக்கு "வலை'


ஓசூர்: ஓசூர் அருகே கொத்தூர் முஸ்லிம் சிறுவர் பாடசாலையில் அத்துமீறி புகுந்து தாக்கிய வழக்கில், பஜ்ரங்தள் அமைப்பு மாவட்ட தலைவர் உள்ளிட்ட பத்து பேரை போலீஸார் தேடுகின்றனர். ஓசூர் அடுத்த கொத்தூர் ரிங் ரோட்டையொட்டி முஸ்லிம் சிறுவர்கள் படிக்கும் ஜமீயா மசூதிக்கு சொந்தமான அரேபியா மதரஸா பாடசாலை உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த பாடசாலைக்கு வந்த சிலர், பக்ரீத் பண்டிகைக்கு இறைச்சி வெட்டுவதற்காக மாடுகளை கட்டி வைத்துள்ளீர்களா? என கேட்டனர். பாடசாலை நிர்வாகிகள் இல்லை என தெரிவித்தனர். அதற்கு அந்த நபர்கள், "மாட்டை வெட்டினால் உங்களை வெட்டுவோம், ' என மிரட்டினர். இதை அங்குள்ளவர்கள் தட்டி கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த அந்த நபர்கள், அவர்களை சரமாரியாக தாக்கி சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.பி., அசோக்குமார், டி.எஸ்.பி., கோபி மற்றும் போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். புகாரின்பேரில், பஜ்ரங்தள் அமைப்பு மாவட்ட தலைவர் தேவராஜ், பெரியார் நகர் சக்தி, கஜா உள்ளிட்ட பத்து பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஓசூர் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் மசூதிகளில் பக்ரீத் பண்டிகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பக்ரீத் விழாவில் தே.மு.தி.,க., தலைவர் பங்‌கேற்பு


மதுரை: மதுரை கோரிப்பாளையம் தர்கா தெருவில் உள்ள பள்ளிவாசலில் ‌தே.மு.தி.க.,வினர் சார்பில் பக்ரீத் விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் கட்சி தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டுள்ளார்.

வியாழன், 25 அக்டோபர், 2012

பக்ரீத் பண்டிகை தலைவர்கள் நல்வாழ்த்து


தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து : சென்னை: பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமியப் பெருமக்கள் இறை நினைவோடும், தியாகச் சிந்தனையோடும், பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், எனது உள்ளம் கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் எண்ணத்தை மேலோங்கச் செய்யும் நன்நாளாகவும், ஏற்றத் தாழ்வுகளை அகற்றி அனைவரும் ஒன்று கூடி இறைவனின் புகழை நெஞ்சத்தில் நிலைக்கச் செய்து, விருந்தளித்து மகிழ்ச்சியில் திளைக்கும் திருநாளாகவும் கொண்டாடப்படுவதே பக்ரீத் திருநாளாகும். இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப தன் ஒரே மகனான இஸ்மாயிலை பலியிடத் துணிந்த இறைத்தூதர் இப்ராகிம் அவர்களின் தன்னலமற்ற தியாகத்தினை உலகுக்கு உணர்த்தும் உன்னத நாள் இத்திருநாள் ஆகும். நபிகள் நாயகம் போதித்த அன்பு, அமைதி, மனிதநேயம் தழைத்தோங்க, அனைவரும் அன்னாரின் உன்னதமான வழியினைப் பின்பற்றி பாசமிக்க சகோதர, சகோதரிகளாய் மன வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ இந்தத் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் உறுதியேற்போம். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் எல்லோரிடமும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்; அது மனித குல நல்வாழ்விற்கு மகோன்னதமாய் வழிகோலட்டும் என வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி : சமூக அவலம் களைய உறுதி ஏற்போம். தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி: ‘‘தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் தியாகத்தின் மேண்மையைப் பறைசாற்றும் தினமாகும். சமூக அவலங்களான வன்முறை, வறுமை, சுற்றுச்சூழல், சீர்கேடு, லஞ்ச ஊழல் முறைகேடுகள், மக்களின் ஜீவாதார உரிமைகளை ஆதிக்க சக்திகள் தடுத்தல் உள்ளிட்ட உலகளாவிய தீமைகளை, சமூக அவலங்களைக் களைய நாம் தியாகம் செய்யத் தயாராவோம். விட்டுக் கொடுத்தல், தம்மிடம் உரியமை இல்லாதார்க்கு வழங்குதல், உரிமைகளை அறத்தின் வழிநின்று போராடுதல் என்ற அம்சங்களை வீடுதோறும் பரப்பி மானுட சமூகம் மேம்பட அனைவரும் ஒருங்கிணைவோம்’’