வெள்ளி, 24 மே, 2013

மலேசியாவில் நான்கு பேர் கொலை ; 4 தமிழர்களுக்கு மரண தண்டனை


கோலாலம்பூர் : மலேசியாவில், பெண் உட்பட, நான்கு பேரை, கொடூரமான முறையில் கொன்ற, தமிழர்கள் நான்கு பேருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள், பத்மனாபன், 44, தில்லை அழகன், 22, மதன், 23, காத்தவராயன், 33. கடந்த, 2010ம் ஆண்டில், அலங்கார பொருட்கள் தயாரிப்பு தொழில் கோடீஸ்வரி, சுசிலாவதி என்பவர், மர்மமான முறையில் மாயமானார்; அவரின் <உதவியாளர்கள், மூவரும் மாயமாகினர். இவர்களின் உடலின் பாகங்கள் மற்றும் உடைந்த எலும்புகள், பத்மனாபனின் பண்ணை வீட்டின் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டன. பத்மனாபனிடம் நடத்திய விசாரணையில், அவர் தான், நான்கு பேரையும் கொலை செய்தது தெரிய வந்தது. சுசிலாவதியிடம் இருந்து பணம் பெற்றிருந்த பத்மனாபன், பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்து, அந்தப் பெண்ணை, தன் பண்ணை வீட்டுக்கு அழைத்து, படுகொலை செய்தது, விசாரணையில் தெரிய வந்தது. சுசிலாவதியை தேடி வந்த அவரின் உதவியாளர்கள், மூன்று பேரையும், ஒவ்வொருவராக, பத்மனாபன் கொலை செய்தது அம்பலமானது. இந்தச் செய்தி, அப்போது, தமிழகம் மற்றும் தமிழர் வாழும் நாடுகளில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மலேசிய ஐகோர்ட் நீதிபதி, அக்தார் தஹிர், பத்மனாபன் மற்றும் அவரின் கூட்டாளிகள், மூன்று பேருக்கும், மரண தண்டனை விதித்து, நேற்று உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக