வெள்ளி, 24 மே, 2013

இஷ்ரத் ஜஹான் நிரபராதி : சரத்பவார்!


மும்பை:குஜராத் போலீஸ் போலி என்கவுண்டர் மூலம் கொலைச் செய்த மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் நிரபராதியான கல்லூரி மாணவி என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் கூறியுள்ளார். தானேயில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய சரத்பவார் கூறியது:தீவிரவாதி என்று முத்திரைக் குத்தி நிரபராதியான இளம்பெண்ணை முதல்வர் நரேந்திரமோடியும், குஜராத் போலீசும் கொலைச் செய்துள்ளனர். தீவிரவாதிகளை துப்பாக்கிக்கு இரையாக்கிய தனது போலீஸ் படையைக் குறித்து பெருமிதம் கொள்வதாக நரேந்திர மோடி கூறியிருந்தார். இஷ்ரத் ஜஹானை கொலைச் செய்த சம்பவம் இன்று குஜராத்அரசையும், போலீசையும் வேட்டையாடுகிறது.இவ்வாறு சரத் பவார் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக