tag:blogger.com,1999:blog-78848661514289534912024-03-13T23:34:37.790-07:00Unkal Thoothanஉங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.comBlogger412125tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-19765680362547852532013-06-12T23:47:00.001-07:002013-06-12T23:47:05.983-07:00திட்டுவிளை உரை - அப்துல் நாசர் Part 1 - Video Dailymotion<a href="http://www.dailymotion.com/video/x10uj86_%E0%AE%A4-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%9A%E0%AE%B0-part-1_news#.Ublqzti73zE.blogger">திட்டுவிளை உரை - அப்துல் நாசர் Part 1 - Video Dailymotion</a>உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-31481202037090518722013-05-24T04:54:00.002-07:002013-05-24T04:54:48.130-07:00பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள்விடுதலை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையிலிருந்து, நல்லெண்ண அடிப்படையில் 45 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் பஸ் மூலம் லாகூரிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மீனவர்கள் விடுதலை குறித்து இந்திய தூதரகத்திற்கு முறையான தகவல் ஏதும் இதுவரை அளிக்கப்படவில்லை.உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-62254527803191926432013-05-24T04:47:00.000-07:002013-05-24T04:47:20.652-07:00மலேசியாவில் நான்கு பேர் கொலை ; 4 தமிழர்களுக்கு மரண தண்டனை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
கோலாலம்பூர் : மலேசியாவில், பெண் உட்பட, நான்கு பேரை, கொடூரமான முறையில் கொன்ற, தமிழர்கள் நான்கு பேருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள், பத்மனாபன், 44, தில்லை அழகன், 22, மதன், 23, காத்தவராயன், 33. கடந்த, 2010ம் ஆண்டில், அலங்கார பொருட்கள் தயாரிப்பு தொழில் கோடீஸ்வரி, சுசிலாவதி என்பவர், மர்மமான முறையில் மாயமானார்; அவரின் <உதவியாளர்கள், மூவரும் மாயமாகினர். இவர்களின் உடலின் பாகங்கள் மற்றும் உடைந்த எலும்புகள், பத்மனாபனின் பண்ணை வீட்டின் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டன. பத்மனாபனிடம் நடத்திய விசாரணையில், அவர் தான், நான்கு பேரையும் கொலை செய்தது தெரிய வந்தது.
சுசிலாவதியிடம் இருந்து பணம் பெற்றிருந்த பத்மனாபன், பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்து, அந்தப் பெண்ணை, தன் பண்ணை வீட்டுக்கு அழைத்து, படுகொலை செய்தது, விசாரணையில் தெரிய வந்தது. சுசிலாவதியை தேடி வந்த அவரின் உதவியாளர்கள், மூன்று பேரையும், ஒவ்வொருவராக, பத்மனாபன் கொலை செய்தது அம்பலமானது. இந்தச் செய்தி, அப்போது, தமிழகம் மற்றும் தமிழர் வாழும் நாடுகளில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மலேசிய ஐகோர்ட் நீதிபதி, அக்தார் தஹிர், பத்மனாபன் மற்றும் அவரின் கூட்டாளிகள், மூன்று பேருக்கும், மரண தண்டனை விதித்து, நேற்று உத்தரவிட்டார்.
உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-28867963071967588422013-05-24T04:33:00.001-07:002013-05-24T04:33:47.057-07:00பாக்.,குக்கு உதவ தயார் ; சீன பிரதமர் அறிவிப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div><a href="http://4.bp.blogspot.com/-5IYAcPW1tB8/UZ9P6sl-UVI/AAAAAAAABy4/b8QR3rXOK_0/s1600/Tamil_News_large_719721.jpg" imageanchor="1" ><img border="0" src="http://4.bp.blogspot.com/-5IYAcPW1tB8/UZ9P6sl-UVI/AAAAAAAABy4/b8QR3rXOK_0/s320/Tamil_News_large_719721.jpg" /></a>
இஸ்லாமாபாத்: ""பாகிஸ்தானுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், சீனா தாராளமாக வழங்கும். பாகிஸ்தானுக்கு சீனா உதவுவது, தனக்குத் தானே உதவுவது போன்ற எண்ணத்தை, எங்களுக்கு ஏற்படுத்துகிறது,'' என, சீன பிரதமர், லீ கெகியாங் கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, சீன பிரதமர், லீ கெகியாங், "இந்தியாவும்,
சீனாவும், பங்குதாரர் நாடுகள்; பாரம்பரிய உறவு கொண்ட நாடுகள்; இந்தியாவுக்கு எதிரான, எந்தச் செயலிலும், எப்போதும் சீனா ஈடுபடாது; இரு நாடுகளும் ஒன்றிணைந்தால், உலக நாடுகள் அதிரும்' என, பேசினார். இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று முன்தினம், பாகிஸ்தான் சென்ற கெகியாங், நேற்று அந்நாட்டிலிருந்து, சீனா புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர், பாக்., பார்லிமென்டில் பேசியதாவது: பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே, வர்த்தகம், எரிசக்தி, உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
பாகிஸ்தானுக்குத் தேவையான, அனைத்து உதவிகளையும், தாராளமாக வழங்க, சீனா தயாராக உள்ளது. பாகிஸ்தானுக்கு சீனா உதவுவது, தனக்குத் தானே உதவுவது போன்ற எண்ணத்தை, எங்களுக்கு ஏற்படுத்துகிறது. இவ்வாறு, சீன பிரதமர் கூறினார்.உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-8806177769683039082013-05-24T04:28:00.002-07:002013-05-24T04:28:42.707-07:00இஷ்ரத் ஜஹான் நிரபராதி : சரத்பவார்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
மும்பை:குஜராத் போலீஸ் போலி என்கவுண்டர் மூலம் கொலைச் செய்த மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் நிரபராதியான கல்லூரி மாணவி என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் கூறியுள்ளார்.
தானேயில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய சரத்பவார் கூறியது:தீவிரவாதி என்று முத்திரைக் குத்தி நிரபராதியான இளம்பெண்ணை முதல்வர் நரேந்திரமோடியும், குஜராத் போலீசும் கொலைச் செய்துள்ளனர். தீவிரவாதிகளை துப்பாக்கிக்கு இரையாக்கிய தனது போலீஸ் படையைக் குறித்து பெருமிதம் கொள்வதாக நரேந்திர மோடி கூறியிருந்தார். இஷ்ரத் ஜஹானை கொலைச் செய்த சம்பவம் இன்று குஜராத்அரசையும், போலீசையும் வேட்டையாடுகிறது.இவ்வாறு சரத் பவார் கூறினார்.உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-23043103275331489922013-05-06T22:47:00.001-07:002013-05-06T22:47:02.765-07:00Paaliyal 6 - Video Dailymotion<a href="http://www.dailymotion.com/video/xznhs8_paaliyal-6_news#.UYiVOkYAi8E.blogger">Paaliyal 6 - Video Dailymotion</a>உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-15261072557818163282013-05-02T01:35:00.001-07:002013-05-02T01:35:13.072-07:00பாலியல் வன்கொடுமை 2உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-59085375285101593702013-04-20T23:46:00.001-07:002013-04-20T23:46:54.145-07:00ராஜஸ்தான்:விளையாட்டு விருது கிடைக்கவேண்டுமெனில் ஆர்.எஸ்.எஸ், ஜமாஅத்தே இஸ்லாமியில் தொடர்பு இருக்க கூடாது!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
ஜெய்ப்பூர்:விளையாட்டுத்துறையில் விருது அளிப்பதற்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு விசித்திரமான நிபந்தனையை விதித்துள்ளது. விருதுக்குபரிந்துரைக்கப்படவேண்டுமெனில் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான ராஷ்ட்ரீய சுயம் சேவக்கிலோ, ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பிலோ உறுப்பினராக இல்லை என்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்துள்ளது.<a href="http://1.bp.blogspot.com/-Ql-eg-E0m4A/UXOLRtHbX5I/AAAAAAAAByI/_Iz5nEazook/s1600/For-awards-Rajasthan-sportspersons-made-to-sign-affidavits-stating-no-link-with-opposition-parties-270x170.jpg" imageanchor="1" ><img border="0" src="http://1.bp.blogspot.com/-Ql-eg-E0m4A/UXOLRtHbX5I/AAAAAAAAByI/_Iz5nEazook/s320/For-awards-Rajasthan-sportspersons-made-to-sign-affidavits-stating-no-link-with-opposition-parties-270x170.jpg" /></a>
ராஜஸ்தான் ஸ்டேட்ஸ் ஸ்போர்ட்ஸ் கவுன்சில்தான் விருதுகளை வழங்குகிறது. 2012-13-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் விருதுக்கான தொகை 10 மடங்காக உயர்த்தப்பட்டது. முதல் கட்ட விருதுகளை கடந்த மாதம் ஸவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் வைத்து ஸ்போர்ட்ஸ் கவுன்சில் தலைவர் சிவ்சரண் மாலி வழங்கினார். 1986-ஆம் ஆண்டு முதல் அமலில் இருக்கும் மாநில அரசின் சட்டங்களை மட்டுமே தாங்கள் கடைப்பிடிப்பதாக ராஜஸ்தான் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் மேற்கண்ட நிபந்தனைக் குறித்து விளக்கம் அளித்துள்ளது. சட்டரீதியாக இயங்கும் ஒரு அமைப்பில் உறுப்பினராவதற்கான குடிமகனின் உரிமை மீதான அத்துமீறல் என்று அரசு நிபந்தனைக்குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார் ஜமாஅத்தே இஸ்லாமியின் ராஜஸ்தான் மாநில தலைவர் குர்ஷித் ஹுஸைன். ஜமாஅத்தே இஸ்லாமியில் உறுப்பினராக இருக்கிறார் என்பதற்காகவிளையாட்டு வீரருக்கு விருதை மறுக்கும் நிலைப்பாட்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-29314014746155758062013-03-30T20:53:00.001-07:002013-03-30T20:53:48.102-07:00Dheentv(1).flvhttp://youtu.be/j9RllCGy64cஉங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-85684783777020971662013-03-30T20:52:00.001-07:002013-03-30T20:52:37.850-07:00Dheentvஉங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-79926202366297996822013-03-28T23:19:00.000-07:002013-03-28T23:19:01.645-07:00சவூதியில் சுதேசிமயம்: சோதனைகள் தீவிரம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
தம்மாம்:சவூதி அரேபியாவில் உள்நாட்டு பணியாளர்களுக்கு வேலை வழங்குவதற்கான சுதேசி மயமாக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக சட்டவிரோத தொழிலாளர்களை கண்டுபிடிக்கும் பணியை அந்நாட்டின் தொழில் மற்றும் உள்துறை அமைச்சகங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. பரிசோதனையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.<a href="http://1.bp.blogspot.com/-9DWgSmjU9zQ/UVUyQiFS8jI/AAAAAAAABxo/JJmgS-jpfTQ/s1600/Saudis-illegal-immigrants-draw-fear-of-infiltrators-270x170.jpg" imageanchor="1" ><img border="0" src="http://1.bp.blogspot.com/-9DWgSmjU9zQ/UVUyQiFS8jI/AAAAAAAABxo/JJmgS-jpfTQ/s320/Saudis-illegal-immigrants-draw-fear-of-infiltrators-270x170.jpg" /></a>
சொந்த ஸ்பான்ஷரின் கீழ் வேலைச் செய்யாமல் வேறு பணிகளை புரிபவர்கள் மற்றும் தங்கும் அனுமதி(இகாமா)யின் கால அவகாசம் தீர்ந்தவர்களும் கைது செய்யப்படுகின்றனர். ஸ்பான்ஸர்களின் கீழ் வேலைச் செய்யாத ஃப்ரீ விசாவில் பணியாற்றுபவர்கள் மற்றும் சட்டவிரோதமாக வேலை பார்ப்பவர்கள், தங்கியிருப்பவர்கள் ஆகியோரை கைது செய்து நாடு கடத்த கடந்த வாரம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில்-உள்துறை அமைச்சகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அந்நாட்டின் ஆட்சியாளர் மன்னர் அப்துல்லாஹ்வும் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தலைநகரான ரியாதில் பத்ஹா, தம்மாமின் இதய பகுதியான ஸீக்கோ பில்டிங் பகுதி, ஜித்தா, அல்ஹஸ்ஸா ஆகிய பகுதிகளில் போலீசாரின் உதவியுடன் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சனிக்கிழமை முதல் பல்வேறு பகுதிகளில் ரெய்டு தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிபந்தனைகளை கடைப்பிடிக்காத சிறு கடைகள் பூட்டிக்கிடக்கின்றன. ஃப்ரீ விசாக்காரர்களான வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பி கட்டிட வேலைகளை நடத்தி வந்த கட்டுமான ஒப்பந்த நிறுவனங்கள் நேற்று முதல் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளித்துள்ளன.
நாட்டின் தொழில்துறையை சட்டப்பூர்வமாக மாற்றவும், சுதேசிகளுக்கு முடிந்தவரை வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் நோக்கமாக கொண்டு இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சவூதியின் தொழில் அமைச்சர் எஞ்சீனியர் ஆதில் ஃபகீஹ் தெரிவித்துள்ளார். கல்வி தகுதியும், பணிச்செய்ய தயாராக உள்ள உள்நாட்டில் வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கத்துடன் 2011 நவம்பர் மாதம் முதல் சுதேசிமயமாக்கும் திட்டமான நிதாகத் சவூதியில் அமல்படுத்தப்பட்டது.உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-470006508155117772013-03-28T23:08:00.000-07:002013-03-28T23:08:41.073-07:00கார்கில் போருக்காக பெருமைப்படுகிறேன் பாக்., "மாஜி' அதிபர் முஷாரப் பேட்டி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
கராச்சி:""கார்கில் போர் குறித்து பெருமிதப்படுகிறேன்,'' என, பாகிஸ்தான் முன்னாள் அதிபர், பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.<a href="http://2.bp.blogspot.com/-3jBBOOill9M/UVUvvrLxEcI/AAAAAAAABxc/zu2zw8ez9rA/s1600/Tamil_News_large_67755120130329033708.jpg" imageanchor="1" ><img border="0" src="http://2.bp.blogspot.com/-3jBBOOill9M/UVUvvrLxEcI/AAAAAAAABxc/zu2zw8ez9rA/s320/Tamil_News_large_67755120130329033708.jpg" /></a>
ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், 1999ல், பிரதமராக இருந்த, நவாஸ் ஷெரீபின் அரசை, ராணுவ புரட்சி மூலம் கவிழ்த்து, ஆட்சியை கைப்பற்றினார்.பின், 2002ல், பாகிஸ்தான் அதிபரான இவரது ஆட்சிக்காலத்தில், முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொல்லப்பட்டது, நீதிபதிகளை கைது செய்தது தொடர்பாக, முஷாரப் மீது குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து, 2008ல், அதிபர் பதவியை ராஜினாமா செய்த முஷாரப், நாட்டை விட்டு வெளியேறி, துபாய் மற்றும் பிரிட்டனில் தஞ்சமடைந்தார்.
வரும், மே, 11ல், பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், "அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்' கட்சி சார்பாக, தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.இதற்காக தற்போது, அவர் நாடு திரும்பியுள்ளார்.கராச்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கார்கில் போரில், இந்தியாவின் கழுத்தை பாக்., பிடித்தோம், பாக்., வசம் உள்ள கார்கில் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக போர் நடந்தது. இந்தப் போருக்கு இந்தியா தான் காரணம். இந்த போரை நடத்தியதற்காக பெருமைப்படுகிறேன்.இவ்வாறு, முஷாரப் கூறினார்.உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-16769126007491412482013-03-28T23:00:00.002-07:002013-03-28T23:00:37.529-07:00சிங்களவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள்: இலங்கை தூதரின் பிரசாரத்தால் பரபரப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
புதுடில்லி: சிங்களவர்களின் பூர்வீகம் வட இந்தியா என இலங்கை தூதர் பிரசாரம் செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜெனீவாவில் ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் போது, இலங்கைக்கு சாதகமான ஆதரவை பெற இந்தியா மீடியாக்கள் மூலம், இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் அனுப்பிய இமெயில் தற்போது வெளியாகியுள்ளறது. அந்த இ-மெயிலில், 12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஓடீசா மற்றும் வட இந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைப்பட வேண்டும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூதரின் இ மெயில் முகவரியில் இருந்து இலங்கையை தலைமையிடமாக கொண்ட தனியார் ஊடக மக்கள் நிறுவனத்துக்கு கடந்த 19ம் தேதி இந்த இமெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் மூலம் இந்த இமெயில் டில்லியில் உள்ள மீடியா நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-259456528694450672013-03-28T22:59:00.000-07:002013-03-28T22:59:10.279-07:00மலாலா வாழ்க்கை வரலாறு ரூ.16 கோடிக்கு ஒப்பந்தம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
லண்டன்:தலிபான்களால் சுடப்பட்டு, உயிர்பிழைத்த சிறுமி மலாலாவின் வாழ்க்கை வரலாறு, புத்தகமாக வெளியிடப்பட உள்ளது. இதற்காக, 16 கோடி ரூபாய்க்கு, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.<a href="http://1.bp.blogspot.com/-oyugd6YgwRk/UVUtoQwUQLI/AAAAAAAABxQ/w0oeAHuU5GI/s1600/Tamil_News_large_67757020130329035123.jpg" imageanchor="1" ><img border="0" src="http://1.bp.blogspot.com/-oyugd6YgwRk/UVUtoQwUQLI/AAAAAAAABxQ/w0oeAHuU5GI/s320/Tamil_News_large_67757020130329035123.jpg" /></a>
பெண்கள் கல்வி உரிமைக்காக போராடிய பாகிஸ்தான் சிறுமி மலாலா, 15, கடந்த, 2009ல், அந்நாட்டின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதி வாழ்க்கை மற்றும் தலிபான்களின் அடக்குமுறை பற்றி, உருது மொழியில், பி.பி.சி.,யின் இணையதளத்தில், கட்டுரை எழுதினாள்.புனைப்பெயரில் அவள் எழுதிய கட்டுரை பிரபலமடைந்ததை அடுத்து, மலாலாவின் அடையாளத்தை தெரிந்து கொண்ட தலிபான்கள், கடந்த அக்டோபர் மாதம், துப்பாக்கியால் சுட்டனர்.படுகாயமடைந்த மலாலா, பிரிட்டன் மருத்துவமனையில், சிகிச்சை பெற்றாள். பிரிட்டனில் உள்ள பள்ளியில் தற்போது, பள்ளி படிப்பை தொடர்கிறாள்
மலாலாவின் போரட்ட வாழ்க்கையை, புத்தகமாக வெளியிட, பிரிட்டனை சேர்ந்த, "வீடன்பெல்ட் அண்ட் நிக்கல்சன்' என்ற, நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்காக, 16 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது."நான் மலாலா' என, பெயரிடப்பட்டு உள்ள இப்புத்தகம், பிரிட்டனின் மற்றொரு பதிப்பகமான லிட்டில் பிரவுன் மூலம், உலகமெங்கும் வெளியிடப்படும்.உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-66699054452988787092013-03-19T03:37:00.004-07:002013-03-19T03:39:06.488-07:00எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி இந்த வாரம் இந்தியா வருகிறார்! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
<a href="http://1.bp.blogspot.com/-vB1h8Zxd3ms/UUhALAPOZ8I/AAAAAAAABww/IufDkBdgmCk/s1600/Egypts-Morsi-to-visit-India-270x170.jpg" imageanchor="1" ><img border="0" src="http://1.bp.blogspot.com/-vB1h8Zxd3ms/UUhALAPOZ8I/AAAAAAAABww/IufDkBdgmCk/s320/Egypts-Morsi-to-visit-India-270x170.jpg" /></a>
கெய்ரோ:எகிப்தில் உருவான புரட்சிக்கு பிறகு அதிபராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் முஹம்மது முர்ஸி இவ்வாரம் இந்தியா வருகை தருகிறார். நாளை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் அவர்.
பல தசாப்தங்களுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி ஆவார். கடைசியாக ஜமால் அப்துல் நாஸர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். பாகிஸ்தானில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முர்ஸி இந்தியாவுக்கு வருகை தருகிறார். வர்த்தகம் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் இந்தியாவுடன் அவர் கையெழுத்திடுவார். எகிப்தின் 7-வது பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது.உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-55466818890699063432013-03-19T03:36:00.001-07:002013-03-19T03:36:48.482-07:00முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று கூறிய காங்கிரஸின் காவி அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பதவி விலக கோரி மக்களவையில் எம்.பிக்கள் அமளி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
புதுடெல்லி:முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று பேசிய காவி தோல் போர்த்திய காங்கிரஸின் மத்திய உருக்குத் துறை அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பதவி விலகக் கோரி, சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் திங்கள்கிழமை காலையில் கேள்வி நேரம் முடிந்ததும் பொது, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை விவாதிக்கும் பூஜ்ய நேர அலுவல் நண்பகல் 12 மணிக்கு நடைபெற்றது.அப்போது பேசிய சமாஜவாதி உறுப்பினர் சைலேந்திர குமார், “முஸ்லிம்களைப் பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாதிகளுடன் முலாயம் சிங்குக்குத் தொடர்பு உள்ளது என்றும் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பேசியுள்ளார். இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கோரினார்.
அப்போது அவையில் இருந்த பேனி பிரசாத் வர்மா, “நான் அத்தகைய கருத்தை ஒருபோதும் தெரிவிக்கவில்லை. அதனால் மன்னிப்புக் கேட்பது என்ற கேள்விக்கே இடமில்லை. நான் அவதூறாகப் பேசியதற்கான ஆதாரம் உள்ளதா?” என்றார். இதையடுத்து அவையின் மையப் பகுதிக்கு வந்து சமாஜவாதி கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.<a href="http://4.bp.blogspot.com/-fOgJpayNxo4/UUg_YyNGjHI/AAAAAAAABwo/V7IV6A3vqUI/s1600/SP-disrupts-Lok-Sabha-over-Beni-Prasad-Vermas-remarks-241x170.jpg" imageanchor="1" ><img border="0" src="http://4.bp.blogspot.com/-fOgJpayNxo4/UUg_YyNGjHI/AAAAAAAABwo/V7IV6A3vqUI/s320/SP-disrupts-Lok-Sabha-over-Beni-Prasad-Vermas-remarks-241x170.jpg" /></a>
அப்போது முலாயம் சிங் யாதவ், “லக்னௌவில் முஸ்லிம் சமயத் தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டில் ‘நாட்டு நலப் பணியில் முஸ்லிம்களின் பங்களிப்பு’ குறித்து பேசினேன். மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் தங்கள் சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை எடுத்துரைத்தனர். சமூக, பொருளாதார நிலையில் முஸ்லிம் சமூகம் பின்தங்கி உள்ளதை நீதிபதி சச்சார் குழு கூடசுட்டிக்காட்டியுள்ளது. நமது எல்லைகளைக் காப்பதிலும், தேசிய வளர்ச்சியிலும் முஸ்லிம் சமுதாய தலைவர்கள் அளித்த பங்களிப்பை நாம் எப்படி மறக்க முடியும்? ஆகவே, முஸ்லிம்களைப் பயங்கரவாதிகள் என பேனி பிரசாத் எப்படி கூற முடியும்? இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கோரினார்.
அப்போது பேனி பிரசாத், “பயங்கரவாதத்துக்கு மதமோ, நிறமோ கிடையாது. பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா வன்முறை ஆகிய சம்பவங்களுக்குப் பிந்தைய வன்முறைகள் கூட பயங்கரவாத சம்பவங்கள்தான்” என்றார்.
மேற்கண்டவாறு பேனி பிரசாத் பேசிய போது, அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதையடுத்து, பிற்பகல் 2 மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் இதே பிரச்னையை எழுப்பி சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் மக்களவை அலுவல் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, பிற்பகலில் மீண்டும் அவை கூடியதும் பேனி பிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என சமாஜ்வாதி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அப்போது பேசிய முலாயம் சிங் யாதவ், “என்னைத் பயங்கரவாதி என மத்திய அமைச்சர் கூறுவாரானால் என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்; அல்லது தனது பேச்சுக்காக பேனி பிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து சமாஜ்வாதி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-53512181251711877082013-03-19T03:31:00.002-07:002013-03-19T03:31:38.623-07:00குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மூடி மறைக்கும் ஊடகங்கள்! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
புதுடெல்லி:நரேந்திர மோடியின் குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஊடகங்கள் மூடி மறைத்து வருகின்றன.
கடந்த மாதமும், இம்மாதமும் குஜராத்தின் சோட்டா உதய்பூரில் முஸ்லிம்களின் நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. முஸ்லிம்களும், பழங்குடியினரும் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். பழங்குடியினரை பயன்படுத்தி சங்க்பரிவார்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
அன்ஹத்(ஆக்ட் நவ் ஃபார் ஹார்மனி அண்ட் டெமோக்ரஸி) என்ற அமைப்பு சம்பவம் நடந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து தயாரித்த அறிக்கையில் இந்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
சோட்டா உதய்பூரில் அகாபாரா, வஸேலி, வானார் காம், தேடர் உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்களுக்கு அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் நடத்தி வரும் நான்கிற்கும் மேற்பட்ட மினரல் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலைகள், சுரங்கங்கள், வியாபார நிறுவனங்கள், பண்ணைகள், ப்ளாஸ்டிக் குடோன்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு காட்சி ஊடகங்கள் இங்குள்ள காட்சிகளை படம் பிடித்தபோதும் தொலைக்காட்சி சானல்கள் எதுவுமே இதுத்தொடர்பான செய்திகளையோ, காட்சிகளையோ ஒளிபரப்பவில்லை என்று உள்ளூர் மக்கள் கூறியதாக அன்ஹதின் ஸ்தாபக உறுப்பினர் ஷப்னம் ஹாஷ்மி செய்தியாளர்கள் சந்திப்பில்தெரிவித்தார்.
கடந்த மாதம் பஸ் ரூட் தொடர்பாக உருவான சிறியச் சண்டை முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பு ரீதியான தாக்குதலுக்கு காரணமானது. பரோஜ் கிராமத்தைச் சார்ந்த சர்பஞ்சும், பஸ் உரிமையாளருமான ஜயந்தி ரத்வா, அலிராஜ்பூர்-சோட்டா உதய்பூர் ரூட்டில் உள்ள பஸ் சர்வீஸ்கள் அனைத்தையும் சொந்தமாக்குவதற்கு உருவாக்கிய பிரச்சனைகள் தாம் கலவரத்திற்கு வழிவகுத்தது.
இர்ஃபான் அப்துல் கனி, மெஹ்பூப் அப்துல் கனி ஆகியோரின் பேருந்துகளும் இந்த ரூட்டில் சர்வீஸ் நடத்துகின்றன. ரத்வாவின் பேருந்து இவர்களின் பேருந்துடன் மோதி, தொடர்ந்து ஏற்பட்ட வாக்கு தர்க்கம் முஸ்லிம்கள் மீது சிறிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட காரணமானது. ஆனால், முஸ்லிம்களின் குடோன்களை தீக்கிரையாக்கி விட்டு, பழங்குடியினர் மீது தாக்குதலும், அத்துமீறலும் நடப்பதாகவும் 13-ஆம் தேதி சோட்டா உதய்பூரில் முழு அடைப்பு நடத்தப்படும் என்றும் அறிவிக்கும் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. நோட்டீஸில் அதனை வெளியிட்டவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. பழங்குடியின தலைவர்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
சர்பஞ்ச்(பஞ்சாயத்து தலைவர்) ஜயந்தி ரத்வா, ஈஸ்வர் டேத்க ரத்வா ஆகியோர் தாம் இந்த நோட்டீஸ்களை அச்சிட்டவர்கள் என்று அன்ஹத் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. நோட்டீஸ் விநியோகிக்கப்பட்ட மறு நாள் சோட்டா உதய்பூரின் கனாவத்தில் பழங்குடியினத்தைச் சார்ந்த ஒருவரின் ட்ரக்கும் ஒரு முஸ்லிமின் ட்ரக்கும் மோதிக் கொண்டன. இதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முஸ்லிம்கள் உடனடியாக போலீஸ் ஸ்டேசன் சென்று புகார் அளித்த போதும் பழங்குடியினர் போலீஸ் ஸ்டேசனை சுற்றி வளைத்து மிரட்டல் விடுத்தனர். ஆனால், போலீஸ் வழக்குப் பதிவுச் செய்யவில்லை. பின்னர் மீண்டும் முஸ்லிம்கள் மீது பெரிய அளவில் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. முஸ்லிம்களும் திரண்டதைத் தொடர்ந்து போலீஸ் முஸ்லிம்களிடம் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியது.
கலவரம் நடக்கும் பொழுது முஸ்லிம்களை வீடியோ எடுத்து போலீசுக்கு அளிக்கும் திவ்ய பாஸ்கர் என்ற பத்திரிகையாளரின் சில இளைஞர்கள் தடுத்து கேமராவை பறிக்க முயற்சித்தனர். இதற்கு எதிராக பாஸ்கர் தொடர்ந்த வழக்கில் போலீஸ் பல முஸ்லிம்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுச் செய்தது. 24 முஸ்லிம்கள் மீது வழக்குப் பதிவுச் செய்த போலீஸ் 8 பழங்குடியினர் மீது மட்டுமே வழக்குப் போட்டது. அடுத்த நாள் பல்வேறு சிறுபான்மை வியாபார நிறுவனங்கள் மீது தாக்குதல் நடந்தன.
டி.ஐ.ஜி, எஸ்.பி.ராங்கில் உள்ள அதிகாரிகள் அங்கு வந்து முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்தனர். ஆனால், குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு ப்ளாஸ்டிக் குடோனை தீக்கிரையாக்கிய சோட்டா உதய்பூரில் ரவுடிக் கும்பலின் பெயர் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவனோசுதந்திரமாக நடமாடுகிறான். 13-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முழு அடைப்பை வெற்றிப் பெறச் செய்ய வி.ஹெச்.பி நேரடியாக களமிறங்கியது.
இம்மாதம் 8 மற்றும் 11-ஆம் தேதிகளில் மீண்டும் முஸ்லிம்களின் குடோன்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவ்வழக்கில் ஒருவரை போலீஸ் கைது செய்துள்ளது. சில உயர் மட்டத் தலைவர்களின் உத்தரவின் பேரிலேயே குடோன்களுக்கு தீவைத்ததாக இந்த நபர் முதலில் வாக்குமூலம் அளித்தான். ஆனால், பின்னர் பீடித்துண்டு கீழே விழுந்து அதில் இருந்து உருவான நெருப்பு மூலம் குடோன்களுக்கு தீப்பிடித்ததாக போலீஸ் வாக்குமூலத்தை மாற்றியது. ஆனால், இவையெல்லாம் மோடியின் போலீசுக்கோ, மோடியிடம் ஆதாயம் பெறும் ஊடகங்களுக்கோ ஒரு செய்தியே அல்ல.
நரேந்திர மோடியின் உத்தரவுக்கு கீழ்படியும் அடிமை சேவகம் புரிவதாக குஜராத் ஊடகங்கள் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது. முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் திட்டமிட்ட அமைப்பு ரீதியான தாக்குதல்களும், கொள்ளையும், தீவைப்புச் சம்பவங்களும் வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்கப்படுவதன் மூலம் இந்த குற்றச்சாட்டு நிரூபணமாகிறது.உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-45607467360020463042013-02-02T21:12:00.002-08:002013-02-02T21:12:42.445-08:00சூர்யா நடித்த 'சிங்கம்-2' படம் மீது தணிக்கைகுழுவில் புகார்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ள சிங்கம் 2 படம் ரிலீசுக்கு தயாராகிறது. ஹரி இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு சென்னை தணிக்கை குழு அதிகாரிக்கு அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
சூர்யா நடித்து ஹரி இயக்கத்தில் வெளிவர இருக்கும் சிங்கம் 2 படத்தில் வில்லன்கள் கடற்கொள்ளையர்களாக சித்தரிக்கப்பட்டு உள்ளனர். இப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் உள்ளன. இம்மாதிரியான காட்சிகளை முன் கூட்டி சுட்டிக் காட்டுவது சமூக பொறுப்புள்ளவர்களின் கடமை என்பதால் தணிக்கை குழு கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
இந்த படத்தில் இத்தகு காட்சிகள் இடம் பெறாமல் தணிக்கை செய்து அனுமதி வழங்க வேண்டும். விஸ்வரூபம் படம் திரையிடப்படாமல் நிறுத்தப்பட்டதற்கு இஸ்லாமிய அமைப்புகள் மட்டும்மின்றி தணிக்கை குழுவும் காரணமாகும். சமூக பொறுப்பை தணிக்கை குழுவினர் சரியாக செய்யாததால் தான் தமிழகத்தில் அசாதாரண சூழல்கள் நிலவுகிறது. இதனை ஓரு படிப்பினையாக கொண்டு இனிவரும் திரைப்படங்களை கவனமாக தணிக்கை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-52229258821912651402013-02-02T03:59:00.003-08:002013-02-02T03:59:42.154-08:00முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜவாஹிருல்லாஹ் பேட்டி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
சென்னை:விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று 24 இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார். விஸ்வரூபம் படம், சட்டம் – ஒழுங்குப் பிரச்னையின் காரணமாகவே தடை செய்யப்பட்டது. இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறினார்.
இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கமான உடன்பாடு ஏற்பட்டால் படத்தை வெளியிட அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் வியாழக்கிழமை 24 இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன்பின் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியது: விஸ்வரூபம் படம் பிரச்னையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு கூறியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பேச்சுவார்த்தை முத்தரப்பு பேச்சுவார்த்தையாக அமைய வேண்டும். அரசு ஒரு தரப்பாகும், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தோர் ஒரு தரப்பாகவும், கமல் ஒரு தரப்பாகவும் இருந்து பேச வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். விஸ்வரூபம் பிரச்னையை அரசியல் ஆக்க வேண்டாம் என்று ஜெயலலிதா கூறியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். கமல்ஹாசன் இதுவரை எங்களுடன் பேச எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஹாரூண் கமல்ஹாசனைஸ் சந்தித்துப் பேசியதற்கும், 24 முஸ்லிம் அமைப்புகளுக்கும் எந்தஸ் சம்பந்தமும் இல்லை.
இந்தப் பிரச்னையை எப்படி அணுகலாம் என்பது பற்றி நாங்கள் பேசி வருகிறோம். தியேட்டர்களில் நடந்த வன்முறையில் எங்களுக்கு தொடர்பு இல்லை. பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெறும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-55120677202662997782013-02-02T03:56:00.000-08:002013-02-02T03:56:39.680-08:00ஹிந்தி 'விசுவரூபம்' : தமிழக ஊடகங்களின் 'பொய்ப்பிரச்சாரம்' அம்பலம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-fPVQOfr8uH0/UQz-1fZeV1I/AAAAAAAABv8/p0eV-hHPpGQ/s1600/kamal%2Bwith%2Bmumby%2Bmuslims.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"><img border="0" height="215" width="400" src="http://2.bp.blogspot.com/-fPVQOfr8uH0/UQz-1fZeV1I/AAAAAAAABv8/p0eV-hHPpGQ/s400/kamal%2Bwith%2Bmumby%2Bmuslims.jpg" /></a></div>
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்ற பழமொழிக்கேற்ப, விசுவரூபம் ஹிந்தியில் வெளியான சில மணிநேரத்துக்குள்ளாகவே ஏற்பட்ட எதிர்ப்பைத்தொடர்ந்து, மும்பையில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்த கமலஹாசன் பல காட்சி நீக்கங்களுக்கு ஒப்புக்கொண்டார்.
உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-64065012068037787152013-01-29T19:53:00.000-08:002013-01-29T19:53:03.974-08:00விஸ்வரூபம் மீதான தடை நீக்க உத்தரவு மீது தலைமை நீதிபதி புது உத்தரவு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-xYl8pKRS-oo/UQiZEvyzzbI/AAAAAAAABvM/inVWuGvPMYM/s1600/images%2B%25283%2529.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"><img border="0" height="275" width="183" src="http://4.bp.blogspot.com/-xYl8pKRS-oo/UQiZEvyzzbI/AAAAAAAABvM/inVWuGvPMYM/s320/images%2B%25283%2529.jpg" /></a></div>
சென்னை:விஸ்வரூபம் மீதான நீதிபதி வெங்கட்ராமனின் தடை நீக்க உத்தரவை தலைமை நீதிபதி(பொறுப்பு) தர்மராவ் இன்று காலை 10:30 மணி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-18933859857567893222013-01-29T19:51:00.003-08:002013-01-29T19:51:36.775-08:00விஸ்வரூபம் எதிர்ப்பு - முடங்கியது பிரதமரின் மின்னஞ்சல்! Read more about விஸ்வரூபம் எதிர்ப்பு - முடங்கியது பிரதமரின் மின்னஞ்சல்! [8544] | இந்திய செய்திகள் | செய்திகள் at www.inneram.com<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
நடிகர் கமலஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருப்பதால் அதனை திரையிட அனுமதிக்ககூடாது என்று தடை செய்யக்கோரி போராடி வருகின்றனர்.
தமிழகம்,ஆந்திரம், கர்நாடகம் மட்டுமின்றி இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளிலும் திரையிட எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
கடந்த 25 ஆம் தேதி பிரிமியர் காட்சிக்காக அமெரிக்காவிலிருந்த நடிகர் கமலஹாசன், நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். தமது படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லை என்று திரும்பத் திரும்ப சொன்னபோதும்,விஸ்வரூப எதிர்ப்பு இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் அவற்றை ஏற்கவில்லை.
இந்நிலையில், விச்வரூபம் மீதான தடையை நீக்கவேண்டும் என்று கமலஹாசன் சார்பில் தொடுக்கப்பட்டுள்ள முறையீட்டு வழக்கை நேற்று ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்,நீதிமன்றத்துக்கு வெளியே அரசு அதிகாரிகளுடன்பேசி சுமூக தீர்வுகாணும்படி பரிந்துரைத்தது.
விஸ்வரூபம் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதற்கு கமலாஹசன் முன்வந்துள்ளார். எனினும், இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் முழுபடத்தையும் தடைசெய்யும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் விஸ்வரூபம் படத்திற்கான சிக்கல் நீடிக்கிறது.
இந்நிலையில், விஸ்வரூபம் படத்தை தடைசெய்யக்கோரி இணைய தளங்களில் பல்வேறு பதிவுகள் வெளியாகியுள்ளதோடு, இந்திய பிரதமர் மன்மோகன்சிங், குடியரசு தலைவர் மற்றும் தேசிய தலைவர்களுக்கு மின்மடல் மூலமாகவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் அலுவலக கணினியில் அளவுக்கு அதிகமான மின்மடல்கள் குவிந்துள்ளதால், பிரதமரின் மின்னஞ்சல் வசதி முடங்கியுள்ளது என்று தெரிகிறது.
உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-61399957251281819562013-01-29T19:50:00.002-08:002013-01-29T19:50:57.516-08:00முஸ்லிம்களின் உணர்வுகள் குறித்து கவலையில்லை! விஸ்வரூபத்திற்கு தடை நீக்கம் – சென்னை உயர்நீதிமன்றத்தின் பாரபட்சமான தீர்ப்பு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
சென்னை:திருக்குர்ஆனையும், தொழுகை உள்ளிட்ட முஸ்லிம்களின் வழிபாட்டையும் இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.
தமிழ் இன உணர்வுக்காக டேம் 999 என்ற திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதி மறுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முஸ்லிம்களின் உணர்வுகள் குறித்து கவலைப்படாமல் சென்னை உயர்நீதிமன்றம் விஸ்வரூபம் படத்திற்கான தடையை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முற்போக்கு பிராமணனான கமலஹாசன் இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் விஸ்வரூபம். இத்திரைப்படம் அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான போர் என நடத்தி வரும் ஆக்கிரமிப்பு போரை ஆதரிக்கும் வகையிலும், உலக மக்களுக்கு நல்லுபதேசமாக அருளப்பட்ட புனித திருக்குர்ஆனையும், தொழுகை உள்ளிட்ட வணக்க வழிபாடுகளையும் இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு இரண்டு வார கால தடையை விதித்தது. பல்வேறு நாடுகளிலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் இத்திரைப்படம் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் தடை உத்தரவை எதிர்த்து கமலஹாசன் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது.
நீதிபதி கே வெங்கட்ராமன் பலமணிநேர விசாரணைக்குப் பிறகு செவ்வாய் இரவு 10 மணி அளவில் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், தமிழக அரசு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி குற்றவியல் சட்டம் பிரிவு 144ன் கீழ் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு விதித்திருந்த இருவாரத் தடையாணையை நிறுத்திவைத்து உத்திரவிட்டார். ஆயினும் வழக்கு விசாரணை தொடருமென்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சென்னை உயர்நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்யவுள்ளது.உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-57014845140210743872013-01-28T21:59:00.001-08:002013-01-28T21:59:51.572-08:00விஸ்வரூபம் - ஒரு மணி நேர காட்சிகளை வெட்ட கமலுக்கு அரசாங்க அதிகாரிகள் அறிவுரை......!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
அரசுடன் பேசி சுமூகமாக பிரச்சனைகளை முடிக்குமாறு இன்றுஉயர்நீதிமன்றம் கமலுக்கு அறிவுறுத்தியுள் ள நிலையில், சுமார் ஒரு மணி நேர காட்சிகளை வெட்ட வேண்டுமென்று அரசாங்க...அதிகாரிகள் கமலிடம் கூறியுள்ளதாக NDTV ஊடகம் சற்று முன்பாக தெரிவித்துள்ளது . இதனை கமல் ஏற்க மறுத்துள்ளதாகவு ம் அது மேலும் தெரிவித்துள்ளது .
ஏற்கனவே கடுமையான நஷ்டத்தை படம் சந்தித்துள்ள நிலையில், அப்படியே படம் வெளிவந்தாலும் எத்தனை திரையரங்குகள் படத்தை வெளியிட முன்வரும் என்பதும் கேள்விக்குறியாக இருப்பதாக NDTV கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ுள்ளது.
நன்றி:NDTVஉங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7884866151428953491.post-3945245715242674242013-01-28T21:53:00.002-08:002013-01-28T21:53:43.378-08:00ஈரானில் கை துண்டிக்கும் படம்ஈரான் அரசு வெளியீடு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
டெஹ்ரான்:ஈரானில், முஸ்லிம் மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. போதை கடத்தல், கொலை போன்ற குற்றங்களுக்கு, பொது மக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றன. கள்ள உறவு போன்ற குற்றங்களுக்கு கல்லால் அடித்தல், பிரம்படி தண்டனை போன்றவை வழங்கப்படுகின்றன.கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களுக்கு கை மற்றும் விரல்கள் துண்டிக்கப்படுகின்றன. விரல் மற்றும் கையை துண்டிக்கும் இயந்திரத்தின் படத்தை அந்நாட்டு அரசு, பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.ஈரானின், ஷிராஸ் என்ற மாவட்டத்தில், திருடன் ஒருவனின் கையை, நான்கு பேர் சேர்ந்து துண்டிக்கும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.உங்கள் தூதன் http://www.blogger.com/profile/05625366720610981464noreply@blogger.com0