புதன், 30 மே, 2012

குமரியில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் அலைஅலையாய் ...............

குமரி மாவட்டத்தில் நம் ஜமாஅத்  செய்துவரும் தாவா பணிகள் பலதர பட்ட மக்களையும் இஸ்லாம் குறித்து அறிய ஆவல் ஊட்டுவதையும், இஸ்லாம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து நம்மை  அணுகுகின்ற வர்களுக்கு நாம் அதற்கான விளக்கத்தை கொடுப்பதன் மூலம் பல்வேறு குடும்பங்கள் இறையருளால் சத்திய இஸ்லாத்தை தன் வாழ்வியல் வசந்தமாக ஏற்றுக்கொண்டு நம் ஜமாத்திலே இணைத்து மிகப்பெரிய பிரச்சரர்களாக அவர்கள் வாழ்ந்தும்  வருகின்றனர்.அதில் தக்கலையை சார்ந்த துரை என்ற சகோதரர் அப்துல்லாவாக மாறி தன்னுடைய மனைவியையும் இஸ்லாத்தில் இணைத்து கொண்டது,பழனியை சார்ந்த அன்பு என்ற  சகோதரர்  இந்துமத  பூசாரியாக  இருந்தும்  இஸ்லாம்  குறித்த  கடவுள்  கொள்கையால்  ஈர்க்கப்பட்டு இன்று சத்திய இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்று ஈசா என்று தனது பெயரை மாற்றி குரான் சுன்னா தான்  என்  வாழ்கை என்று பிரசார களத்தில் செயல்பட்டுகொண்டிருகிறார்.
அதே போன்று  நாகர்கோயில்லை சார்ந்த ஜேம்ஸ் என்ற சகோதரர் ஜாசிர் என்று தன்னுடைய பெயரை மாற்றி தன்னுடைய கும்பத்தையும் இஸ்லாத்தில் இனைதுகொண்டது, கோட்டாரில் சீலன் என்பவர் தன்னுடைய வாழ்க்கையை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டு வாழ்வதோடு தன்னுடைய மிகப்பெரிய போரட்டத்திற்கு பிறகு தன் குழந்தைகளையும் தன் மனைவியையும் சத்திய இஸ்லாத்தில்  இணைத்து கொண்டதோடு இன்று அவருடைய  மனைவி பெண்கள் மதரசாவில் முறையாக மார்க்கத்தை கற்றுவருவதும்   குறிப்பிடத்தக்கது,அதே போன்று அனீஸ் என்ற சகோதரர் இஸ்லாத்தை எற்றுகொண்டதொடு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை இஸ்லாத்தில் இனையவைத்து முழுமையான முஸ்லிம் குடும்பமாக வாழ்ந்துவருகின்றனர். இன்னும்  சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்று கொண்ட குடும்பம் செண்பகம் ராமன் புதூரை சார்ந்த அப்துர் ரஹ்மான் அவர்களின் கும்பம்மும் குறிப்பிடத்தக்கது.
இப்படி குமரியில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம்  மக்களை குடும்பம் குடும்பமாக இஸ்லாத்தை நோக்கி அணிவகுக்க செய்துள்ளது.அது மட்டும் இல்லாமல் தனி நபர்கள் இஸ்லாத்தை நேசிப்பதும் அதன் பட்டியலும்  நீண்டு கொண்டே செல்லுகின்றது அல்ஹம்துல்லிலாஹ்.இது போன்று இன்னும் அதிகமான மக்களுக்கு சத்திய பாதை இஸ்லாத்தை ஏற்று கொள்ள ஆசை இருந்தும் அதற்கான வழிமுறைகள் தெரியாமல் இருகின்றவர்கள் அதிகம், எனவே இன்னும் வீரியமாக நம் மக்கள் தங்களின் பிரசார களத்தை இது போன்ற மக்களுக்காக நம்முடைய தொடர்புகளை ஏற்படுத்தகூடிய வகையில் அமைத்துக்கொண்டால் இன்ஷா அல்லாஹ் இன்னும் அதிகமாக இஸ்லாத்தை நோக்கி மக்கள் வருகை தருவார்கள். இனி நம் பயணம் இதனை நோக்கி வீரியமாகட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக