வியாழன், 28 மார்ச், 2013

சிங்களவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள்: இலங்கை தூதரின் பிரசாரத்தால் பரபரப்பு


புதுடில்லி: சிங்களவர்களின் பூர்வீகம் வட இந்தியா என இலங்கை தூதர் பிரசாரம் செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜெனீவாவில் ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் போது, இலங்கைக்கு சாதகமான ஆதரவை பெற இந்தியா மீடியாக்கள் மூலம், இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் அனுப்பிய இமெயில் தற்போது வெளியாகியுள்ளறது. அந்த இ-மெயிலில், 12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஓடீசா மற்றும் வட இந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைப்பட வேண்டும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூதரின் இ மெயில் முகவரியில் இருந்து இலங்கையை தலைமையிடமாக கொண்ட தனியார் ஊடக மக்கள் நிறுவனத்துக்கு கடந்த 19ம் தேதி இந்த இமெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் மூலம் இந்த இமெயில் டில்லியில் உள்ள மீடியா நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக