வியாழன், 28 மார்ச், 2013

கார்கில் போருக்காக பெருமைப்படுகிறேன் பாக்., "மாஜி' அதிபர் முஷாரப் பேட்டி


கராச்சி:""கார்கில் போர் குறித்து பெருமிதப்படுகிறேன்,'' என, பாகிஸ்தான் முன்னாள் அதிபர், பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார். ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், 1999ல், பிரதமராக இருந்த, நவாஸ் ஷெரீபின் அரசை, ராணுவ புரட்சி மூலம் கவிழ்த்து, ஆட்சியை கைப்பற்றினார்.பின், 2002ல், பாகிஸ்தான் அதிபரான இவரது ஆட்சிக்காலத்தில், முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொல்லப்பட்டது, நீதிபதிகளை கைது செய்தது தொடர்பாக, முஷாரப் மீது குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து, 2008ல், அதிபர் பதவியை ராஜினாமா செய்த முஷாரப், நாட்டை விட்டு வெளியேறி, துபாய் மற்றும் பிரிட்டனில் தஞ்சமடைந்தார். வரும், மே, 11ல், பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், "அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்' கட்சி சார்பாக, தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.இதற்காக தற்போது, அவர் நாடு திரும்பியுள்ளார்.கராச்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கார்கில் போரில், இந்தியாவின் கழுத்தை பாக்., பிடித்தோம், பாக்., வசம் உள்ள கார்கில் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக போர் நடந்தது. இந்தப் போருக்கு இந்தியா தான் காரணம். இந்த போரை நடத்தியதற்காக பெருமைப்படுகிறேன்.இவ்வாறு, முஷாரப் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக