சனி, 26 ஜனவரி, 2013

பத்மா விருதுகள் அறிவிப்பு! ஹைதர் ராஸாவுக்கு பத்ம விபூஷண், அப்துல் ரஷீத் கானுக்கு பத்மபூஷண்!


கலை, இலக்கிய பிரிவில் டெல்லியைச் சார்ந்த எஸ்.ஹைதர் ராஸா உயரிய விருதான பத்மவிபூஷணை பெற்றுள்ளார். மேற்குவங்காளத்தைச் சார்ந்த பாடகர் அப்துல் ரஷீத் கான் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். பத்மஸ்ரீ விருதினை பாட்னா மவ்லானா மஷாருல் ஹக் அரபி மற்றும் பாரசீக பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கேப்டன் பேராசிரியர் டாக்டர்.முஹம்மது ஷரஃப்-இ-ஆலம், பிரபல உருது கவிஞர் நிதா ஃபாசில், கல்வியாளர் பேராசிரியர் அக்தாருல் வாஸ்லி, சூஃபி பாடகர் ஜம்மு கஷ்மீரைச் சார்ந்த குலாம் முஹம்மது ஷஸ்னவாஸ், ராஜஸ்தானைச் சார்ந்த எஸ்.ஷாக்கிர் அலி ஆகியோர் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வாண்டு ஜனவரி4-ஆம் தேதி தனது 100-வது வயதில் இறந்த சுதந்திர போராட்ட வீரரும், உருது கவிஞருமான ஷவ்கத் ரியாஸ் கபூர் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு மரியாதைச் செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக