தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழும் நாடுகள் எங்கும் விஸ்வரூபத்துக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது.
இதன் தொடர்ச்சியாக ஐக்கிய இராச்சியம், மில்டைன் கீன்ஸ் பகுதியில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் சற்று முன் அமைதியான முறையில் தம் கண்டனைத்தைத் தெரிவித்திருக்கின்றனர்.
நாம் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கிறோம் ஆனால்
இஸ்லாமிய எதிர்ப்பை முற்றாக நிராகரிக்கிறோம்
என்று கலந்து கொண்டவர்கள் கருத்து
வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கண்டனப் போராட்டத்தில் பங்கு பற்றியோரில் ஒரு பகுதியினர்
முஸ்லிம்களின் திருமறை அல் குர்ஆனையும் சமயப் பழக்கவழக்கங்களையும் தவறாகவும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் சித்தரித்துள்ளதனால் உலக முஸ்லிம்களின் பேரெதிர்ப்பைச் சந்தித்து வரும் விஸ்வரூபம் ஏற்கனவே ஐரோப்பாவில் வெளியாகியுள்ள நிலையில் இக்கண்டனப் போராட்டம் இடம் பெற்றிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக