டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி வன்புணரப்பட்ட சம்பவம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ள நிலையில் அண்டை நாடான பாகிஸ்தானிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இத்துயரச் சம்பவத்தைக் கண்டித்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்,
போராட்டம் நடத்தி வரும் இந்திய சமூக அமைப்பினருக்கு ஆதரவாக இந்த போராட்டம் நடத்தப்படுவதாக கூறிய பாகிஸ்தான் பெண்கள் அமைப்பினர், இந்தியப் பெண்களுக்கு ஆதரவாக நிற்பதோடு மட்டுமில்லாமல் உலகப் பெண்களுக்காவும் போராட்டம் நடத்துவோம். பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை களைய இந்திய, பாகிஸ்தான் ஊடகங்கள் உதவிட வேண்டும்.
பெண்கள் வணிகப் பொருட்கள் அல்லர், அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை ஆண்கள் மற்றும் சிறுவர்களிடையே புரியவைக்க கல்வி அவசியம் தேவை என்று கருத்தளித்துள்ளனர்..
பாகிஸ்தான் மக்கள் மதத்தை பார்க்கவில்லை,
தேசத்தை பார்க்கவில்லை.. மனிதனை பார்க்கிறார்கள்..
நாம்தான் திருந்தாமல் இருக்கிறோமோ?!!
தேசம் கடந்த நேசம்...........!
நன்றி - தோழர் மார்க்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக