திங்கள், 3 டிசம்பர், 2012

ஆப்கான்:நேட்டோ ராணுவ தளம் மீது தாக்குதல் – 15 பேர் மரணம்


காபூல்:ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு நேட்டோ படையினரின் ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட போராளி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் நான்கு பேர் ஆப்கான் ராணுவத்தினரும், இரண்டு பேர் பொதுமக்களும் ஆவர்.
தாக்குதல் நடத்திய ஒன்பதுபேரும் மரணித்துள்ளனர். 14 ஆப்கான் ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான நேட்டோ ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பான கூடுதல் செய்திகளை நேட்டோ வெளியிடவில்லை. ஜலாலாபாத் விமான தளத்திற்கு அருகே உள்ள நேட்டோ தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தங்களின் ஒன்பது போராளிகள் நேட்டோ தளத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தாலிபான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. கிரேனேடுகள், மோர்ட்டார்கள், துப்பாக்கிகள் ஆகியன உபயோகித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜலாலாபாத்தில் இவ்வாண்டு 3-வது தாக்குதலை தொடுத்துள்ளது தாலிபான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக