புதன், 5 டிசம்பர், 2012

துபாய் சிறையில் கைதிகளை சந்தித்த ஆந்திர குழுவினர்


துபாய்:துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்திய கைதிகளை, ஆந்திர குழுவினர் சந்தித்து பேசினர். துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களை, குடிபெயர்ந்தோர் உரிமை கழகத்தை சேர்ந்தவர்கள், சமீபத்தில் சந்தித்து பேசினர்.இந்த கழகத்தின் தலைவர் நாராயணசாமி கூறியதாவது:துபாயில் உள்ள, "அல் அவீர்' சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஆந்திராவை சேர்ந்த 13 பேரை, சந்தித்து பேசினோம். வளைகுடா நாடுகளில், 1,200க்கும் அதிகமான இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல வளைகுடாவை சேர்ந்த பலர், இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பரஸ்பரம் ஒப்படைப்பது குறித்து, கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இந்த ஒப்பந்தம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. விரைவில் இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டால், பல ஆண்டுகளாக, சிறையில் தவிக்கும், இந்தியர்கள் விடுவிக்கப்படுவார்கள். இந்திய அரசும், ஆந்திரா உள்ளிட்ட மாநில அரசுகளும், கைதிகளின் சார்பில், சட்ட உதவி அளிக்க வேண்டும்.இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக