புதன், 5 டிசம்பர், 2012

‘‘ஈரான் சொல்வது பொய்’’ வெள்ளை மாளிகை சொல்கிறது


வாஷிங்டன், - ஈரான் அணு உலைகள் அமைத்து, அணுக்குண்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக உலக நாடுகள் சந்தேகிக்கின்றன. இதை ஈரான் மறுத்து வருகிறது.இந்த நிலையில் அமெரிக்காவின் ஸ்கேன் ஈகிள் என்ற ஆளில்லா உளவு விமானம் வளைகுடா நாடுகளில் உளவறிந்துவிட்டு, ஈரானுக்கு உளவு பார்க்க வந்ததாகவும், அதை ஈரான் பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்த தகவல்களை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜெய் கார்னே கூறுகையில், ‘‘ஈரான் கூறுவது உண்மை என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் கிடையாது. ஈரான் சொல்வது பொய்’’ என கூறினார்.இதேபோல் கடற்படை செய்தி தொடர்பாளரும், ஈரானின் கூற்றை மறுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக