திங்கள், 3 டிசம்பர், 2012

தேர்தல் பிரச்சாரத்தில் மோடிக்கு கறுப்புக் கொடி!


அஹ்மதாபாத்:குஜராத் சட்டப் பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே மீதமுள்ள சூழலில் சூரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ.க எம்.பியுமான நவ்ஜோத் சிங் சித்துவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கறுப்புக் கொடி காட்டப்பட்டது. ஜுனகட் மாவட்டத்தில் விசவாதர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சித்து, குஜராத் பரிவர்த்தன் கட்சியின் தலைவர் கேசுபாய் பட்டேல் தேச விரோத தலைவர் என்று கூறியிருந்தார். இதனைக் கண்டித்தே கறுப்புக் கொடி காட்டப்பட்டது. சூரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மோடிக்கு குஜராத் பரிவர்த்தன் கட்சியின் தொண்டர்கள் கறுப்புக் கொடியை காட்டினர். சித்துவின் மீது தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. இதுக் குறித்து கேசுபாய் பட்டேல் கூறியது: பா.ஜ.க மற்றும் மோடியின் உத்தரவை அறிக்கையின் மூலம் செயல்படுத்தியுள்ளார் சித்து. கசாபை போல என்னை தேச விரோதி என அழைத்துள்ளனர். குற்றச்சாட்டை நிரூபிக்க மோடிக்கு சவால் விடுக்கிறேன். நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன். மோசமான அறிக்கையின் மூலம் எவ்வாறேனும் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காக கீழ்த்தரமான அரசியலை பா.ஜ.க நடத்துகிறது. இவ்வாறு பட்டேல் கூறினார். கேசுபாய் பட்டேலுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதற்கு சித்து மீது பிபின் ஜக்ஜீவன் ருகானி என்பவர் தொடுத்த அவமதிப்பு வழக்கில் முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேல் திங்கள் கிழமை தீர்ப்பு வழங்குவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக