புதன், 5 டிசம்பர், 2012

ஈரானில் 5.5 அளவுள்ள நிலநடுக்கம்: 5 பேர் பலி


ஈரான், ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து, அப்பகுதியில் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. இதை தொடர்ந்து, மக்கள் தெருவிற்கு ஓடி வந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் 5 பேர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக