திங்கள், 3 டிசம்பர், 2012

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு விவகாரம் நியாயமாக நடந்த பாகிஸ்தான்


பாகிஸ்தானில் கராச்சி நகரில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீராம் மந்திர் என்ற இந்து கோவில் இடிக்கப்பட்டது. அதையொட்டி வசித்த இந்துக்களின் வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. கோர்ட்டு தடை உத்தரவையும் மீறி இதில் நில உரிமையாளர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதை கண்டித்து சிறுபான்மை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த விவகாரம் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பான விவரம் அடங்கிய விளக்க அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே தரும்படி அவர் உத்தரவிட்டார். இந்த தகவலை அதிபரின் செய்தி தொடர்பாளர் பர்ஹதுல்லா பாபர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக