திங்கள், 31 டிசம்பர், 2012

சர்தாரி இந்தியா செல்லும் திட்டம் இல்லை:பாக்.


இஸ்லாமாபாத்: கிரிக்கெட் போட்டிகளை காண பாகிஸ்தான் அதிபர் சர்தாரி இந்தியா செல்லும் திட்டம் எதுவுமில்லை என அதிபர் மாளிகை செய்திதொடர்பாளர் கூறினார். இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி டுவென்டி-20 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. தற்போது ஒரு நாள் (50ஓவர்கள்) போட்டி சென்னையில் முடிந்துவிட்டது. இந்நிலையில் ‌‌மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நடக்க உள்ள மற்றொரு போட்டியை காண பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இந்தியா வருகை தர உள்ளதாகவும், இதி்ல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் ஆகியோர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் பரவின. இது குறித்து அதிபர் மாளிகை ‌செய்தி தொடர்பாளர் பரக்கத்துல்லா பாபர் கூறுகையில், இது வெறும் வதந்திதான், இந்தியா வருமாறு அவருக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை.அப்படியிருக்கையில் சர்தாரி இந்தியா வரும் திட்டமில்லை. அழைப்பு விடுத்தால் பரிசீலிக்கலாம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக