திங்கள், 3 டிசம்பர், 2012

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் இப்போது ஆல் இந்திய தௌஹித் ஜமாஅத் ஆக பெயர் மாற்றம்.


கேரளாவில் உள்ள அனைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளையும் ஒன்றிணைத்து கேரள மண்டலப் பொதுக்குழு எர்ணாகுளத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மான் வளாகத்தில் கடந்த 2-12-2012 அன்று நடைபெற்றது.   கேரள மண்டலத்தின் எர்ணாகுளம், திருவனந்தபுரம், பாலக்காடு புதுநகரம், பெரும்பாவூர், சங்கனசேரி, வண்டிப்பெரியார் ஆகிய பகுதிகளில் தனித்தனியே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரர்கள் பல்வேறு பெயர்களில் இயங்கி வந்தனர். இதனை ஒருங்கிணைக்கும் முகமாக எர்ணாகுளத்தில் 02.12.12 அன்று மாநில நிர்வாகிகள் எம்.ஐ.சுலைமான், கோவை ரஹ்மத்துல்லாஹ், மாலிக் ஆகியோர் முன்னிலையில் கேரள மண்டலப் பொதுக்குழு நடைபெற்றது. இதில் கேரளாவில் உள்ள அனைத்து கிளைகளையும் இணைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படும்போது ஏற்படும் மொழிப்பிரச்சனையை தவிர்ப்பதற்காகவும், நிர்வாகத் தொடர்புகளுக்காகவும் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கிக் கொள்ளலாம் என்றும், அனைத்து கிளைகளையும் ஒன்றிணைத்து எர்ணாகுளத்தை மண்டல தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவது என்றும் முடிவெடுக்கப்பட்டு மண்டல நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கேரள மண்டல நிர்வாகிகள் : தலைவர் – J.M.A ஹம்சா , செயலாளர் – மீரான் மைதீன் , பொருளாளர் – A. அஜ்மல் ஹுசைன் (கோபி), து. தலைவர் – ஷாநவாஸ் – வண்டிபெரியார், து.செயலாளர்கள் – சபீருதீன் – திருவனந்தபுரம், து.செயலாளர்கள் – முஹம்மது – பெரும்பாவூர், து.செயலாளர்கள் – ஹாரிஸ் – புதுநகரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக