புதன், 5 டிசம்பர், 2012

பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல்: 3 பேர் பலி


இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாகாணத்தில் இன்று அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். முபாரக் கிராமத்தில் தீவிரவாதிகளை குறிவைத்து இன்று காலை இரண்டு ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் செலுத்தி உள்ளது. தலிபான் மற்றும் அல்-கொய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியான இங்கு தொடர்ந்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக