புதன், 5 டிசம்பர், 2012

பாப்ரி மஸ்ஜித் நினைவு தினத்தில் போஸ்டர் ஒட்டிய தமுமுக நகர தலைவர் கைது


நெல்லை:1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் நாள் அயோத்தியில் இந்தியாவின் வரலாற்றுச் சின்னமும், முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமுமான பாபரி மஸ்ஜித் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் இடித்து தள்ளப்பட்டது. இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்து 20 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இன்றளவும் உரிய நீதி வழங்கப்படவில்லை குற்றவாளிகள் கைதும் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஏர்வாடி பகுதியில் தமுமுக சார்பில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. தங்களது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் ஒட்டப்பட்ட அந்த நோட்டீஸில் வன்முறையை தூண்டும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றிருந்ததாகவும், அனுமதியின்றி ஒட்டப்பட்டதாகவும் போலீஸ் கூறுகிறது. இதை தொடர்ந்து ஏர்வாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த நோட்டீசுகளை அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக தமுமுக நகர தலைவர் பக்ருதீன், செயலாளர் ஷாஜகான் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக