திங்கள், 3 டிசம்பர், 2012

மாலத்தீவு அதிபர் வாகீத் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்


மாலே: மாலத்தீவு அதிபர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், ரகசிய ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.மாலத்தீவில், ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அதிபர் நஷீத், பிப்., மாதம் நடந்த புரட்சியில், ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். இதையடுத்து, துணை அதிபர் முகமது வாகீத், புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டது மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில், மாலத்தீவு ஜனநாயக் கட்சி தலைவர் நஷீத் கைது செய்யப்பட்டார்.இதற்கிடையே, அதிபர் வாகீத் மீது, மாலத்தீவு ஜனநாயகக் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது, ரகசிய ஓட்டெடுப்பு நடத்த, பார்லிமென்ட் உறுப்பினர்களின் விருப்பம் கேட்கப்பட்டது.மாலத்தீவு பார்லிமென்ட்டில் மொத்தம், 75 உறுப்பினர்கள் உள்ளனர். ரகசிய ஓட்டெடுப்பை, 41 உறுப்பினர்கள் ஆதரித்துள்ளனர். 34 பேர் ரகசிய ஓட்டெடுப்பை ஆதரிக்கவில்லை. பெரும்பான்மையான உறுப்பினர்கள், ரகசிய ஓட்டெடுப்பை ஆதரித்ததால், விரைவில் இதற்கான தேதியை, சபாநாயகர் மஜ்லிஸ் அறிவிக்க உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக