ஞாயிறு, 11 நவம்பர், 2012

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது!17 பேர் பலி!


அங்காரா:துருக்கியின் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 17 பேர் பலியானார்கள். குர்த் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்திற்காக நியமிக்கப்பட்ட ஹெலிகாப்டரும், ராணுவ வீரர்களும் விபத்தில் சிக்கியுள்ளனர். ஸிர்த் மாகாணத்தில் உள்ள பெர்வாரி மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. கடுமையான மூடுபனி விபத்திற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததால் தாக்குதலாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை துவங்கியுள்ளது.
பலியானவர்களில் 13 பேர் ராணுவ வீரர்கள் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக