செவ்வாய், 6 நவம்பர், 2012

இந்திய மீனவர்கள்வங்கதேசத்தில் கைது


தாகா:வங்கதேச கடல் பகுதியில், மீன் பிடித்த, இந்திய மீனவர்கள் 72 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தில், ஷரன்கோலா, என்ற இடத்தில், அத்துமீறி மீன் பிடித்ததாக, மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானாவை சேர்ந்த மீனவர்கள் 72 பேரை, அந்நாட்டு கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் சென்ற மூன்று படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.இவர்கள், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அதன் உத்தரவின் பேரில் தண்டிக்கப்படுவார்கள், என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக