ஞாயிறு, 11 நவம்பர், 2012

ஆப்கானில் தொழில் துவங்க இந்தியர்களுக்கு கர்ஸாய் அழைப்பு!


புதுடெல்லி:இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய், தனது முதல் நாளில் இந்தியர்கள் ஆப்கானிஸ்தானிற்கு தொழில் துவங்க வருவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் கூறியது:இந்தியத் தொழிலதிபர்கள் ஆப்கானில் தொழில் வாய்ப்புகளைத் தேடத் தயங்கக் கூடாது. இந்திய முதலீட்டாளர்களை ஆப்கானிஸ்தான் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கும் என்று ஆனால் இந்திய தொழிலதிபர் அதற்கான முதல் முயற்சிகளில் இறங்க வேண்டும் என்றார். இன்னும் 2 ஆண்டுகளில் ஆப்கானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறிய பின்னர் அந்நாட்டில் தனது செல்வாக்கை அதிகப்படுத்த இந்தியா விரும்புகிறது. ஆனால், பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக ஆப்கானில் தொழில் துவங்க இந்திய தனியார் துறை தயங்கி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக