சனி, 10 நவம்பர், 2012

முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கினால் மகளிர் மசோதாவுக்கு ஆதரவு! – முலாயம்!


லக்னோ:முஸ்லிம்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கினால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்போம் என்று சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். லக்னோவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தெரிவித்தார்.
மேலும் கூறியது: ‘பெண்கள் அதிகமாக ஒடுக்கப்படுகின்றார்கள் என்றாலும், ஆணும், பெண்ணும் தோளோடு தோள் சேர்ந்து செயல்படவேண்டும் என்பதுதான் எனது கட்சியின் கருத்து ஆகும்’ என்றார் முலாயம். மகளிர் இடஒதுக்கீடு மசோதா உயர்ஜாதியினருக்கு மட்டுமே ஆதாயம் தரும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பயன் தராது. ஆகையால்தான் அம்மசோதாவை தான் எதிர்ப்பதாக நேற்று முன் தினம் முலாயம் விளக்கமளித்திருந்தார். பெண்களுக்கு சட்டசபைகளிலும், பாராளுமன்றத்திலும் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற மசோதா 2010-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சமாஜ்வாதிக் கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக