துபாய்:கேரளா, திருவனந்தபுரத்தை சேர்ந்தவர், டாக்டர் ராஜன் டேனியல். ஐக்கிய அரபு எமிரேட்டின் அபுதாபியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்தார். சமீபத்தில், இவர் பணியாற்றிய மருத்துவமனைக்கு ஒருவர் வந்தார். ராஜன் டேனியல் இருந்த அறைக்குள் வேகமாக நுழைய முயற்சித்தார்.நர்ஸ் மற்றும் ஊழியர்கள், அவரை தடுக்க முயற்சித்தனர். அவர்களை தள்ளி விட்டு, ராஜன் டேனியலை நோக்கி கோபத்துடன் வந்த, அந்த நபர், தன்னிடம் இருந்த கத்தியால் சரமாரியாக, அவரை குத்தியதில், டேனியல் இறந்தார்.அந்த நபரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், தவறான சிகிச்சை அளித்து, அவரது உறவினர் இறப்புக்கு காரணமாக இருந்ததாகக் கருதி, ராஜன் டேனியலை கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக