திங்கள், 12 நவம்பர், 2012

இந்திய கோழி இறக்குமதி:ஓமன் நாட்டில் தடை


துபாய்:கர்நாடக மாநிலத்தில், பறவை காய்ச்சல் காணப்படுவதால்,கோழி, வாத்து போன்றவற்றை இறக்குமதி செய்ய, ஓமன் நாடு தடை விதித்துள்ளது.ஒடிசா, திரிபுரா, மேகாலயா மாநிலங்களில், மார்ச் மாதம் பரவிய பறவை காய்ச்சல் நோயால், இந்தியாவிலிருந்து கோழி, வாத்து மற்றும் இவற்றின் இறைச்சியை இறக்குமதி செய்வதை, ஓமன் நாடு தடை விதித்தது.கடந்த செப்டம்பர் மாதம், இந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில், பறவை காய்ச்சல் பரவியுள்ளதாக, உலக பிராணிகள் நல அமைப்பு உறுதி செய்துள்ளது.இதையடுத்து, இந்தியாவிலிருந்து, கோழி, வாத்து மற்றும் இவற்றின் இறைச்சிகளை இறக்குமதி செய்வதை, தடை செய்வதாக ஓமன் அரசு அறிவித்துள்ளது.இந்த தடை, இந்த வாரம் முதல் அமலுக்கு வருவதாக, ஓமன் நாட்டு விவசாயத் துறை அமைச்சர் ஜபார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக