வியாழன், 29 நவம்பர், 2012

தர்ஹா சந்தனக் கூடுக்கு 40 கிலோ சந்தனைக் கட்டை இலவசமாம்! முதல்வரின் உத்தரவை கண்டித்து TNTJ கண்டன அறிக்கை!


நாகூர் தர்காவில் சந்தனக்கூடு நடத்தும் நாளில் சமாதியில் சந்தன கட்டைகள் அரைத்து சந்தனம் பூசுவதற்கு நாகூர் தர்காவின் முன்னாள் தலைவர் எஸ்.எஸ். காமில் காதிரி முதல்வரை சந்தித்து சந்தன கட்டைகளை மானியமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை ஏற்று சந்த கூடு நடக்கும் நாளில் மூன்று லட்சம் மதிப்புள்ள 40 கிலோ சந்தன கட்டையை இலவசமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இல்லை. தர்காக்களை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்பதே நபிகளார் காட்டித் தந்த வழிமுறையாகும். இதற்கு மாற்றமாக இஸ்லாத்தின் பெயரால் சந்தனக்கூடு விழாவுக்கு சந்தனகட்டைகளை வழங்கிய தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன அறிக்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக