புதன், 28 நவம்பர், 2012

அரசியல் கட்சி துவங்குகிறார் பாக்., அணு விஞ்ஞானி


இஸ்லாமாபாத்: பாக்.,அணு விஞ்ஞானியான ஏ.க்யூ.கான் புதிய அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெ‌ற உள்ள பொது தேர்தலில் போட்டியிட முடி வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.76 வயதாகும் கான் பாகிஸ்தான் அணு குண்டு தயாரிப்பதில் முக்கிய காரணகர்த்தாவாக விளங்கினார். பின்னர் 2004-ம் ஆண்டு அணுகுண்டு ரகசியத்தை லிபியா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு கூறியதாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2009-ல் வெளியே வந்த அவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானை போன்று தாரிக் இ தகாபூஸ் என்ற பெயரி்ல் புதிய கட்சியை துவக்கியுள்ளார். இவருடன் சேர்ந்து மொத்தம் 19 புதிய கட்சிகள் அடுத்தாண்டு நடை‌பெற உள்ள பொது தேர்தலில் போட்டியிட வேண்டி பதிவு செய்ய காத்திருக்கின்றன. மேலும் இம்ரானின் கட்சியை போன்று மிகப்பெரும் கூட்டத்தை கூட்டுவதும், பேரணி நடத்துவதும் கிடையாது. இருப்பினும் அமைதியான முறையில் கல்வி பயிலும் மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பாகிஸ்தானில் இருந்து வெளி வரும் ஆங்கில நாளிதழ்களி்ல் மட்டும் கட்டுரை எழுதி வருகிறார் கான். இந்நிலையி்ல் கானின் கட்சி செய்தி தொடர்பாளர் கூறு்கையில் வரும் மே மாதத்தில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக