வியாழன், 8 நவம்பர், 2012

காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படாத வரை மும்பை தாக்குதல் போன்று தொடரும்: இம்ரான் கான்


குர்கான் : பாகிஸ்தான் அணிக்கு உலககோப்பை பெற்றுதந்த அந்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவனான இம்ரான்கான் இப்போது அரசியல்வாதியாக மாறியுள்ளார். இவர் உலக பொருளாதார மாநாட்டு கூட்டத்தில் பேசினார். அவர் பேசுகையில், இந்தியா பாகிஸ்தான் இடையே ஆண்டுக்கணக்காக நீடித்து வரும் காஷ்மீர் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணப்படாத வரை மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் போன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்யும் என்றார். அதேசமயம் தங்களுடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக இந்தியாவுக்கு எதிராக இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடைபெறாத அளவுக்கு பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று கூறினார். மேலும் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட பிற உறவுகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், அதற்கு கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் உதவும் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக