ஞாயிறு, 11 நவம்பர், 2012

அஸ்ஸாமில் மீண்டும் வன்முறை! – 2 பேர் பலி!


கொக்ராஜர்:அஸ்ஸாம் மாநிலம் கொக்ராஜர் மாவட்டத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்தனர்.
கோசைகோன் போலீஸ் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஒரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக பத்லன்மாரா கிராமத்தில் நிகழ்ந்த மோதலில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒரு இளைஞர் உயிரிழந்தார். போடோ பழங்குடி இன தீவிரவாதிகளுக்கும் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. இதில் 90 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் ஓரளவு கட்டுப்பட்டு நிலைமை சீரடைந்து வரும் நிலையில் இப்போது புதிதாக வன்முறை வெடித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக