திங்கள், 5 நவம்பர், 2012

பக்ரைனில் குண்டு வெடிப்பு : தமிழர் பலி


துபாய்: பக்ரைனில், நடந்த குண்டு வெடிப்பில், தமிழர் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயமடைந்துள்ளார். பக்ரைனில் மன்னராட்சி நடக்கிறது. அங்கு மன்னராட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராக, போராட்டம் நடத்த, உள்துறை அமைச்சகம், தடை விதித்துள்ளது. இதை கண்டித்து, குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. தலைநகர் மனாமாவில், ஐந்து இடங்களில், குண்டு வெடித்தது. இதில் முருகைய்யா என்ற தமிழர் கொல்லப்பட்டார். மற்றொரு இந்தியருக்கு குண்டு வெடிப்பில், உள்ளங்கை துண்டிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த ஒருவரும், குண்டு வெடிப்பில் பலியாகியுள்ளார். பக்ரைன் நாட்டுக்கான, இந்திய தூதர் மோகன்குமார், முருகைய்யா பலியானதை உறுதி செய்துள்ளார். பக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக