வியாழன், 8 நவம்பர், 2012

கவுதமாலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 48பேர் பலி


சான் மார்கஸ்: மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 48பேர் பலியானார்கள். மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் அந்நாட்டு நேரப்படி காலை 10.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4-ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கத்தால் 22 இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 48பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் 100 பேரை காணவில்லை. நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை அந்நாட்டு அரசு முடக்கி விட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக