சனி, 10 நவம்பர், 2012

சுக்பீர் சிங்குக்கு பாதுகாப்பு தராத பாக்., போலீசார் சஸ்பெண்ட்


லாகூர்: பாகிஸ்தானில், சுற்று பயணம் மேற்கொண்ட, பஞ்சாப் மாநில துணை முதல்வர், சுக்பீர் சிங் பாதலுக்கு, உரிய பாதுகாப்பு அளிக்காத, ஏழு போலீசார், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்துவதற்காக, பஞ்சாப் மாநில துணை முதல்வர், சுக்பீர் சிங் பாதல், ஐந்து நாள் பயணம் மேற்கொண்டார். இவருடன், 45 பேர் கொண்ட, வர்த்தக குழுவினரும், லாகூர் பயணம் மேற்கொண்டனர்.பாகிஸ்தானில் உள்ள, சீக்கியர்கள் சார்பில், பாதலுக்கு விருந்தளிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்புக்கு போலீசாரே இல்லை.இந்த விஷயத்தை அறிந்த, பஞ்சாப் மாகாண காவல் துறை தலைவர் ஹபிபுர் ரஹ்மான், விருந்து நடந்த, போலீஸ் சரகத்தை சேர்ந்த, ஏழு போலீசாரை, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.பாகிஸ்தானில், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. இந்த சமயத்தல், இந்தியாவை சேர்ந்த முதல்வருக்கு, உரிய பாதுகாப்பு அளிக்காத காரணத்தால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, பாக்., போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக