செவ்வாய், 6 நவம்பர், 2012

"ஹிந்து நாடு" என்று பகிரங்கமாக அறிவித்தால், எதிர்கொள்ள நாங்கள் தயார்! -மஜ்லிஸ்


சார்மினார் வளாகத்தை ஆக்கிரமித்து கோவில் கட்ட, விஷமிகளுக்கு உடந்தையாக - உற்ற துணையாக செயல்பட்ட 33 போலீஸ் உயர் அதிகாரிகளின் பட்டியலை "மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன்" கட்சியின் கன்வீனர், ரஹீம் குரைஷி வெளியிட்டார்.
நேற்று, கட்சியின் தலைமை அலுவலகமான "தாருஸ்ஸலாம்" வளாகத்தில் அவர் அளித்த பேட்டி: பழைய ஹைதராபாதை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது, இங்கு அறிவிக்கப்படாத "ஹிந்து ராஷ்டிரம்" நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்த அவர், இந்திய தேசத்தை "ஹிந்து நாடு" என்று பகிரங்கமாக அறிவித்தால், அதை உரிய வகையில் எதிர்கொள்ள முஸ்லிம்கள் தயார், என தெரிவித்தார். 400 ஆண்டு பழமை சின்னமான "சார்மினார்" ஆக்கிரமிப்புக்கு பக்கபலமாக போலீஸ் இருந்த நிலையிலும், முஸ்லிம் இளைஞர்கள் பாதுகாத்ததை, அவர் சுட்டிக்காட்டினார். மேலும் பக்ரீதின் போது "குர்பானி" பிராணிகள் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், அகில பாரத வித்யாதி பரிஷத், மற்றும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து போலீசார் செயல்பட்டதை நினைவு கூர்ந்த அவர், கடந்த வாரத்தில் "சப்சி மண்டி" பகுதியில் முஸ்லிம் கடைகளை சேதப்படுத்தி கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடிய விஷயத்திலும் போலீசுக்கு "மறைமுக உத்தரவுகள்" பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினார்,குரைஷி. இந்த "சதி" திட்டத்துக்காக திருமண மண்டபம் ஒன்றில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது, உளவுத்துறைக்கு தெரியும் என்று கூறிய அவர், போலீசின் ஒருதலை பட்சமான செயல்களுக்கான "ஆடியோ-வீடியோ" ஆதாரங்களுடன் மாநில முதலமைச்சரை விரைவில் சந்திப்போம்,என்றார். இதற்கிடையில், சார்மினாரை பாதுகாக்கும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ள ஹைதராபாத் மாமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள், "ஆக்கிரமிப்புக்கோவில்" கட்டுமானத்துக்கு நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர், என்பது ஆறுதலான விஷயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக