செவ்வாய், 6 நவம்பர், 2012

சிரியாவில் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் யுத்தம் தீவிரம்


சிரியா:சிரியாவில் அப்பாவி மக்களை கொன்று அழித்து கொண்டிருக்கும் அதிபர் பஷார் அல் அசாத்தின் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து 20 மாதங்களாக நிகழ்ந்து வரும் யுத்தம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக சிரியாவின் வடக்கே அதன் தலைநகரமான டமஸ்கசுக்கும், இன்னொரு முக்கிய நகரமான அலெப்போவுக்கும் இடையே அமைந்துள்ள பிரதான விமான தளமான டாப்டனாஸை கைப்பற்றுவதற்கு கிளர்ச்சிப்படையினர் முயன்று வருகின்றனர். இராணுவத்துக்கு சொந்தமான இந்த விமான தளத்தைக் கைப்பற்றுவதற்கு சனிக்கிழமை மாலை முதல் கடும் சண்டை நிகழ்ந்து வருவதாக பிரிட்டனில் அமைந்துள்ள சிரிய கண்காணிப்பு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிரிய அரசுக்குச் சொந்தமான வானொலி நிலையம் ஒன்று செய்தி வெளியிடுகையில் அரச படையினர் இந்த தாக்குதலை முறியடித்திருப்பதாகவும் கணிசமான அளவு ஆயுததாரிகளைக் கொன்றிருப்பதாகவும் அவர்கள் விமானத் தளத்துக்கு வருவதற்கு உபயோகித்த வாகனங்களையும் தகர்த்திருப்பதாகவும் கூறியுள்ளது. இதுவரை சுமார் 20,000-ற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்களைக் கொன்று குவித்த சிரிய யுத்தம் ஐ.நா ஆல் பொடப்பட்ட சமாதான ஒப்பந்தத்துக்கும் இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை சிரிய, இஸ்ரேல் எல்லைக்கு அண்மையில் இராணுவம் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளான கோலன் மற்றும் ஹைட்ஸ் ஆகியவற்றுக்கு சிரிய அரசு மூன்று டாங்கிகளை அனுப்பி உள்ளது. இச்செய்கையினால் அதிருப்தி அடைந்துள்ள இஸ்ரேல் இது தொடர்பாக ஐ.நாவிடம் புகார் அளித்துள்ளமை அப்பகுதிகளில் தாக்குதல் அச்சத்தை அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக