வியாழன், 26 ஜூலை, 2012

அஸ்ஸாம் கலவரம்:40 பேர் மரணம் – 2 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்!

ethnic riots in Assam state killed at least 40
கொக்ராஜர்/புதுடெல்லி:அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்துவரும் வகுப்புக் கலவரத்தில் மேலும் எட்டுபேர் பலியாகியுள்ளனர். இத்துடன் மரண எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. கலவரத்தில் 2 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
நான்கு மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. வன்முறையாளர்களை கண்டால் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
வகுப்புக் கலவரத்திற்கு காரணமான தலைவர்களை கைது செய்ய மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. குவஹாத்தி செல்லும் ரெயில்களுக்கும், ரெயில் தண்டவாளங்களுக்கும் பாதுகாப்பாக மத்திய அரசு 2000 படை வீரர்களை நிறுத்தியுள்ளது. மாநில அரசுக்கு உதவ 22500 துணை ராணுவ படையினர் அஸ்ஸாமிற்கு சென்றுள்ளனர். கலவரத்தை அடக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக