வியாழன், 12 ஜூலை, 2012

சோசியல் மீடியாக்களில் முஸ்லிம் விரோத கருத்துக்களை தடுக்கவேண்டும் – முலாயம்சிங்!

Mulayam Singh Yadav to talk to PM about 'anti-Islam' content on Facebook

லக்னோ:சோசியல் மீடியாக்களில் கார்ட்டூன்கள் மற்றும் கமெண்டிகள் மூலமாக இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் பரப்புரைச் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிட கோரிக்கை விடுக்கவிருப்பதாகவும் முலாயம் சிங் தெரிவித்தார்.

சோசியல் மீடியாக்களில் இத்தகைய செயல்பாடுகள் வகுப்புவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு காரணமாகும். நாட்டின் அமைதியை இது கெடுத்துவிடும் என்று சமாஜ்வாதிக் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் ரஜேந்திர சவுதரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது: கருத்து சுதந்திரத்தின் பெயரால் இத்தகைய பிரச்சாரங்களை கண்டு வாய்மூடி இருந்தால் நமது நாட்டின் சமூக நல்லிணக்க சூழல் கெட்டுவிடும். இவ்விவகாரம் தொடர்பாக பிரதமருடன் விவாதித்து, ஃபேஸ்புக் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களை கட்டுப்படுத்துவதுக் குறித்து பேசுவோம் என ராஜேந்திர சவுத்ரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக