ஞாயிறு, 8 ஜூலை, 2012

படுக்கையில் சிறுநீர் கழித்ததால் மாணவியை சிறுநீர் குடிக்கவைத்த கொடுமை!

Shantiniketan school girl made to drink urine for bedwetting
சாந்திநிகேதன்(மே.வங்கம்):படுக்கையில் சிறுநீர் கழித்ததால் ஐந்தாம் வகுப்பு மாணவியை ஹாஸ்டல் வார்டன் சிறுநீரை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்த சம்பவத்தில் மாணவியின் தந்தை மனோஜ் மிஸ்த்ரி போலீஸில் புகார் அளித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக்கூடத்தின் விடுதியில் இச்சம்பவம் நடைபெற்றது.
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் தவறான பழக்கத்தை மாற்றுவதற்காக இதைச் செய்ததாக விடுதி காப்பாளர் கூறியுள்ளார். சிறுநீர் கழிக்கப்பட்டிருந்த படுக்கை விரிப்பைப் பிழிந்து சிறுமியின் வாயில் கட்டாயப்படுத்தி அவர் ஊற்றியதாக விசாரணையில் தெரியவந்தது.
சிறுமியின் தாய், மகளின் நலன் விசாரிக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் இச்சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பியதைத் தொடர்ந்து குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம், சம்பந்தப்பட்ட விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக