17 Jul 2012
டெஹ்ரான்:மியான்மரில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கு எதிராக அவசர நடவடிக்கை தேவை என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ராமின் மெஹ்மான் பரஸ்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறியது: ‘மியான்மரில் இருந்து வரும் செய்திகள் மிகவும் வேதனையாகவும், கவலையும் அளிப்பதாக உள்ளது. மியான்மர் அரசும், சர்வதேச அமைப்புகளும் இதற்கு அவசர தீர்ப்பை கண்டாக வேண்டும். தான் நம்புகின்ற மதத்தை பின்பற்றவும்,சொந்த நாட்டில் அமைதியாக வாழவும் ஒருவருக்கு உரிமை உள்ளது என்பதை அனைத்துக் கொள்கைகளும் அங்கீகரித்துள்ளன.
மியான்மர் முஸ்லிம்களுக்கும் இத்தகையதொரு சூழலை மியான்மர் அரசு உருவாக்க கோரிக்கை விடுக்கிறோம் என்று பரஸ்த் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக