ஞாயிறு, 22 ஜூலை, 2012

ட்ரோன் தாக்குதல்:அமெரிக்காவின் பைத்தியக்காரத்தனம்- இம்ரான்கான் கடும் கண்டனம்!

Drone strikes immoral, illegal, says Imran
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் அமெரிக்கா ஆளில்லா விமானங்களை(ட்ரோன்) பயன்படுத்தி நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனும், தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ட்ரோன் தாக்குதல்கள் பைத்தியக்காரத்தனமான நடவடிக்கை என விமர்சித்த இம்ரான்கான், இது முற்றிலும் அநியாயமானது என்று கூறியுள்ளார்.
சாதாரண மக்களையும், குற்றவாளி என கருதுபவர்களையும் விசாரணை இல்லாமல் விருப்பப்படி கொலைச் செய்வது போர்க்குற்றம் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக