சனி, 8 செப்டம்பர், 2012

ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இந்தியா வருகிறார்!


8 Sep 2012 புதுடெல்லி:ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தரவிருக்கிறார். செப்டம்பர் 11-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தரும் ஃபலஸ்தீன் உயர்மட்டக்குழு இரு நாடுகள் இடையேயான உறவுகள் குறித்து விவாதிக்கும். சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்படும். மேற்காசியா அமைதி முயற்சிகள், இரு நாடுகளையும் பாதிக்கும் பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான பிரச்சனைகள் ஆகியன பேச்சுவார்த்தையில் முக்கியமாக இடம்பெறும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்பு, வேலைப் பயிற்சி, ஃபலஸ்தீனில் பள்ளிக்கூடங்களை கட்டுதல் ஆகிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக