புதன், 5 செப்டம்பர், 2012

பாக்., அதிபருக்கு லாகூர் ஐகோர்ட் நோட்டீஸ்


லாகூர்: ‌‌ஒரே நேரத்தில் இரண்டு பதவிகள் வகிப்பது தொடர்பாக பாக் அதிபர் சர்தாரிக்கு லாகூர் ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாக் ., அதிபராக இருப்பவர் ஆஸிப் அலி சர்தாரி. இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துண‌ை தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் முகம்மது அசார் சித்திக் என்பவர் அதிகாரத்தை சட்ட விரோதமாக பயன்படுத்தி கட்சியை வளர்ப்பதாக சர்தாரி மீது வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு லாகூர் ஐகோர்ட்டில் நான்கு பேர் கொண்ட டிவிசன் பென்ஞ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சர்தாரி சார்‌பில் வாதாடிய வக்கீலகள் அப்துல் ஹைகலானி, அட்டர்னி ஜெனரல் இர்பான் காதிர் பலு்சிஸ்தான் சென்றிருப்பதால் அடுத்த வாரம் இது குறித்த மனுதாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை யை வரும் 14-ம் தேதி்க்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக