புதன், 5 செப்டம்பர், 2012

நாட்டை துண்டாடியவர்கள் யார் ? :


நாட்டை துண்டாடியவர்கள் யார் ? : இந்திய தேசத்தில் அடிக்கடி தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்படக்கூடியவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களாக இருப்பதால் முஸ்லிம்களின் தேசப்பற்றின் மீதும் அவர்களின் நேர்மையின் மீதும் மற்ற சமுதாய மக்களுக்கு சந்தேகம் வருகிறது. அப்படி வருவதும் இயல்புதான் . ஏனென்றால் பத்திரிகைகளில் வரும் செய்திகளும் அவர்களை அப்படித்தான் நினைக்க வைக்கும். அதனால்தான் முஸ்லிம்களை தேசபற்று இல்லாதவர்கள் என்று நினைக்கிறார்கள். எப்போதெல்லாம் முஸ்லிம்கள் கைது செய்யப் படுகிறார்களோ அப்போதெல்லாம் இந்தியப் பிரிவினை பற்றி விமர்சனங்கள் எழுகிறது. முஸ்லிம்கள்தான் இந்தியாவை துண்டாடி பாகிஸ்தானை உருவாகினார்கள். இப்போது மீண்டும் இந்தியாவை துண்டாட, சின்னாபின்னமாக்க துடிக்கிறார்கள் என்று மிகவும் காட்டமான குற்றசாட்டு முஸ்லிம்களை நோக்கி வீசப்படுகிறது. பிரிவினை வரலாறு திரித்தும், மறைத்தும் எழுதப்பட்டு பரப்ப பட்டிருப்பதால் முஸ்லிம்கள்தான் இந்தியப் பிரிவினைக்கு காரணமோ என்ற சந்தேகம் பெரும்பாலோருக்கு இருக்கிறது. துண்டு துண்டாக சிதறி குறு மன்னர்களால் ஆட்சி செய்யப் பட்டு வந்த இந்திய துணை கண்டத்தை ஒரு ஆளுகையின் கீழ் கொண்டு வந்த முஸ்லிம்களா இந்த நாட்டை துண்டாடினார்கள் இல்லை இல்லை இந்த நாட்டை துண்டாடியவர்கள் யார் ? அதை ஆதரித்தவர்கள் யார் என்பதை சில வரலாற்றுக் குறிப்புகளுடன் இந்த கட்டுரை " நாட்டை துண்டாடியவர்கள் யார் ? " தலைப்பின் வாயிலாக நாம் சிறு தொடராக தினந்தோறும் பார்ப்போம். ஆக்கம் : அபுல் ஹசன் - தக்கலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக