ஞாயிறு, 21 அக்டோபர், 2012

ஜோர்டனில் அல்கைதா தொடர்புடையதாக 11 பேர் கைது :


ஜோர்டான் நாட்டில் உள்ள சாப்பிங் மால் மற்றும் ராணுவ தளங்களை தகர்க்க திட்டமிட்டதாக கூறி 11 பேர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டனர். இந்த செய்தியை அந்நாட்டு உளவுத்துறை அறிவித்ததாக ஜோர்டான் தொலைகாட்சி மற்றும் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இவர்கள் அல்கைதா இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் என்றும் , இவர்கள் சிரியாவிலிந்து ஆயுதங்களுடன் ஜோர்டானுக்குள் நுழையும்போது கைது செய்யப்பட்டனர் என்றும் ஜோர்டான் அரசு செய்தி தொடர்பாளர் சமீ மயதாஹ் கூறிவுள்ளார். ஜோர்டான் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 2005ல் இந்த நாட்டின் அம்மானில் ஹோட்டல் ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 60௦ பேர் பலியாகி உள்ளனர். அதனால் தன இந்த எச்சரிக்கை நடவடிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக