புதன், 31 அக்டோபர், 2012

திருமண வீட்டில் தீ : சவுதியில் 25 பேர் பலி


ஜெட்டா : சவுதி அரேபியாவில், திருமண வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 25 பேர் பலியாயினர். 30 பேர் படுகாயமடைந்தனர். சவுதி அரேபியாவின், கிழக்கு பகுதியில் உள்ளது அய்ன் பதர் கிராமம். இங்குள்ள ஒரு வீட்டில், திருமணத்துக்காக அலங்கார பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. உயர் அழுத்த மின்சார ஒயர் அறுந்து, பந்தல் மீது விழுந்ததில், தீ விபத்து ஏற்பட்டது. இதனால், திருமணத்துக்கு வந்த, 25 பேர் பலியாயினர். 30 பேர் படுகாயமடைந்தனர். மின்சாரம் தாக்கி பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள். இந்த சம்பவம் குறித்து, கிழக்கு மாகாண அரசு, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக