வியாழன், 25 அக்டோபர், 2012

ஆப்கன் சண்டையில் பலியான அமெரிக்க நாய், பூனைகளுக்கு விருது


லண்டன்:ஆப்கானிஸ்தானில்,ராணுவ வீரர்களுடன் பணியில் ஈடுபட்ட போது, உயிரிழந்த அமெரிக்க நாய்க்கு, வீர தீர செயலுக்கான பதக்கம் வழங்கப் பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில், ஐந்து மாத காலம் பணியில் ஈடுபட்ட, "தியோ' என்ற நாய், தலிபான்கள் வைத்த வெடி குண்டுகளையும், வெடி மருந்து பொருட்களையும் கண்டுபிடித்தது. இதன் மூலம் அமெரிக்க வீரர்கள் பலர் உயிர் பிழைத்தனர். எனினும், கடந்த ஆண்டு, மார்ச் மாதம், தலிபான்களின் தாக்குதலில், அமெரிக்க வீரர்களுடன், தியோவும் பலியானது. வீர தீர செயல் புரியும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த பி.டி.எஸ்.ஏ., என்ற அமைப்பு, சாதனை பதக்கம் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த வகையில், தியோவுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த விருது, 64 பிராணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 27 நாய்களும், 32 புறாக்களும், மூன்று குதிரைகளும், ஒரு பூனையும் அடக்கம். என்ன ஒரு அக்கறை Mr. ஒபாமா ? . நாய்க்கெல்லாம் விருது. எப்டியும் இனம் இனத்தோடதனே சேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக