சனி, 20 அக்டோபர், 2012

தாரிக் அன்வருக்கு அமைச்சர் பதவி:பிரதமரிடம் சரத் பவார் சிபாரிசு


புனே:தேசியவாத காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர், தாரிக் அன்வருக்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, அந்தக் கட்சியின் தலைவர், சரத்பவார் சிபாரிசு செய்துள்ளார்.புனேயில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. "கூட்டணி கட்சிகள், தகுந்த நபர்களின் பெயர்களை பரிந்துரைக்கலாம்' என, பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார். எங்களது கட்சியின் செய்தித் தொடர்பாளர், தாரிக் அன்வருக்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, நான் சிபாரிசு செய்துள்ளேன். என் மகள், சுப்ரியா சுலேயின் பெயரை பரிந்துரைக்கவில்லை.இவ்வாறு சரத்பவார் கூறினார்.தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய, பி.ஏ.சங்மாவின் மகள், அகதா சங்மா வகித்த, மத்திய இணையமைச்சர் பதவி, தாரிக் அன்வருக்கு வழங்கப்படலாம் என, தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக