புதன், 17 அக்டோபர், 2012

ஹஜ் யாத்திரை 24ம் தேதி துவக்கம்


துபாய் :
"சவுதி அரேபியாவில், ஹஜ் யாத்திரை, 24ம் தேதி, துவங்குகிறது.வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை முஸ்லிம்கள் கடமையாக கொண்டுள்ளனர். இந்தியாவிலிருந்து, இந்த ஆண்டு, 1.7 லட்சம் பேர், ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்.பக்ரீத், சவுதியில் 26ம் தேதி, கொண்டாடப்படுவதால், 24ம் தேதி முதல், புனித பயணம் துவங்குகிறது. மெக்கா, மதினா, அரபாத் மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு, லட்ச கணக்கான மக்கள் செல்ல உள்ளனர். ஏற்கனவே, சவுதியில், 12 லட்சம் பேர், குவிந்துள்ளனர்.இன்னும் பல லட்சம் பேர் வருவார்கள் என்பதால், கூட்ட நெரிசலை சமாளிக்கவும், அசம்பாவிதம் நடக்காமல் இருக்கவும், சவுதி அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.ஹஜ் பயணிகளை கவனிக்க, சம்பந்தப்பட்ட நாடுகளின் சார்பில் பிரதிநிதிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக