செவ்வாய், 23 அக்டோபர், 2012

கிளியனூரில் இறந்த குழந்தையின் ஜனாஸா அடக்கத்தில் அத்துமீறல் :


கடந்த 20 அக்டோபர் 2012 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நாகை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 15 அக்டோபர் 2012 அன்று நாகை மாவட்டம் கிளியனூரில் இறந்த குழந்தையின் ஜனாஸா நடந்துள்ளத கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது. இதற்கு முழுமுதற்காரணமான பாலையூர் ஆய்வாளர் சாமிநாதன், இறந்த குழந்தையின் ஜனாஸாவிற்கு உரிமையுடைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பேச்சு வார்த்தை என்ற பெயரில் TNTJ வைத் சேர்ந்த ஐவரை அழைத்துச் சென்று அவர்கள் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்த தூண்டியுள்ளார். அவரை பணி நீக்கம் செய்து, கைது செய்ய கோரியும், தாக்குதலுக்கு ஆளானவர்கள் மீதே பொய்வழக்கு போட்டு கைது செய்யப்பட்ட TNTJ சகோதரர்களை உடனடியாக விடுதலை செய்து, வழக்குகளை ரத்து செய்ய கோரியும், தாக்குதல் நடத்திய ரவுடிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தாவுத் கைசர் அவர்கள் கண்டன உரையாற்றினார்க்ள. கடும் மழையையும் பொருட்படுத்தாமல் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். எங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், தமிழக முதல்வர் வீடு முற்றுகை போராட்டத்தை நடத்துவோம் என போராட்டத்தில் கோசங்கள் எழுப்பப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக